Saturday, April 12, 2025

THE THIRD CONVICT மூன்றாவது கைதி


மூன்றாவது கைதி

Socrates The Father of Western Philosophy

ஒரு சிறைச்சாலை.பொழுது விடிந்தது. கைதிகளை அடச்சி வைத்திருந்த கதவுகளை திறந்து விட்டாங்க. கைதிகள் வெளியே போனாங்க. காலையில அவங்க தோட்ட வேலை செய்யணும். அப்பதான் இந்த கைதிகள் ஒருத்தரோட ஒருத்தன் பேசிக்க முடியும். அந்த சமயம் மூன்று கைதிகள் ஒண்ணா சேர்ந்து பேசிக்கிட்டாங்க.

அப்போ ஒரு கைதி சொன்னார்இந்த நாட்டு ராஜாவை பற்றி  நிறைய கேள்விகள் கேட்டேன் அதனால  இந்த ராஜாங்கத்து சிப்பாய்கள்,  என்ன கைது பண்ணி இங்க ஜெயில்ல போட்டாங்கன்னு.

அப்போ இந்த இரண்டாவது கைதி,  "அந்த ராஜாவைப்பத்தி இவந்தான் கேள்வி கேட்டான். அவங்கூட நான் இருந்ததால  என்னயும் இங்கக் கொண்டு வந்து போட்டுட்டாங்க”ன்னு சொன்னார்

அதைக் கேட்டுட்டு இருந்த மூன்றாவது கைதிஉங்க ரெண்டு பேரையும் ஜெயில்ல போட்டதுக்கும் அந்த ராஜாவுக்கும்  எந்த சம்மந்தமும்  கிடையாது. அது எனக்கு நல்லா தெரியும். அது எப்படின்னு கேட்டீங்கன்னா அந்த ராஜாவே நான்தான்”னு சொன்னார்.

அவுங்க ரெண்டுபேரும் ஆச்சரியமா பாத்தாங்க, அவர் ராஜான்றது தெரிஞ்சது. "உங்களை மாதிரி நானும் ஒரு கேள்வி கேட்டென். அதனால என்னொட சேனாபதி என்னை ஜெயில போட்டுட்டான். அவன் ராஜாவாயிட்டான்" என்று சொல்லி வருத்தப்பட்டார் ராஜா.

அப்புறம் அவுங்க மூணுபேரும் ரொம்ப நேரம் பேசினாங்க.  கேள்வி கேக்கறதப் பத்திதான் பேசினாங்க. " எப்பவும் கேள்வி கேக்கறதே பிரச்சினைதான்  அப்படின்னு பேசி முடிச்சாங்க. அதுக்குள்ள தோட்டவேலை தொடங்கிச்சு. மூணுபேரும் கலஞ்சி போயிட்டாங்க.

அதனால கேள்வி கேட்கிறதே தப்புன்னு சொல்லக்கூடாது. சொல்லமுடியாது. நமக்கு தெரியாத விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம். அதுல தப்பு இல்ல.

சில பேரு போன் பண்ணுவாங்க. அவங்க யாருன்னு சொல்ல மாட்டாங்க. உங்க பேரு என்ன, ஊரு என்ன ஏதுன்னு, நம்மள கேட்பாங்க. நம்ம இதெல்லாம் விளாவாரியா சொல்லுவோம். அப்புறம் அவரு யாருன்னு கேட்டாதான் தெரியும் அது "ராங் கால்" அப்படின்னு.

அதே மாதிரி, பள்ளிக்கூடங்கள்ள பையன்கள் தூங்காமல் பாடம் நடத்த சில வாத்தியார்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பாங்க. யாராச்சும் தூங்குற மாதிரி இருந்தா அவங்களை எழுப்பி அந்த தூக்கம் கலையும் வரைக்கும் கேள்விகளை கேட்பாங்க

அதே மாதிரி வகுப்பில் சில பையன்கள் அடிக்கடி கேள்விகள் கேப்பாங்க. கேள்விகள் கேட்கிற பையன்களை புத்திசாலிகள்ன்னு சொல்லுவாங்க. அது உண்மையாவும் இருக்கும். இல்லாமலும் இருக்கும்.

நான் பியூசி படிக்கிறப்ப எங்க வகுப்புல ஒரு பையன் இருந்தான். அவன் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு வாத்தியாருங்கள உண்டு இல்லைன்னு ஆக்கிடுவான்   பதில் சொல்வதற்குள் அவர்களுக்கு போதும் போதும்னு ஆயிடும்.

உலகத்துல கேள்வி கேட்க சொல்லித் தந்த அறிஞர் அப்படின்னு அகில உலக அளவில் ஒருத்தர் இருந்தார்.அவருடைய முக்கியமான போதனையை கேள்வி கேளுங்கன்னு சொல்றதுதான். அவர் ஒரு கிரேக்க அறிஞர்.  அவர்தான் மேற்கத்திய நாட்டு தத்துவங்களுடைய தந்தை.

அவர் வேறு யாரும் இல்லை . அவர் தான் சாக்ரடீஸ். பிளாட்டாவோட குருநாதர், ஆசிரியர். விவாதம் செய்யறதுல அவர அடிச்சுக்க முடியாது. நிறைய இளைஞர்களுக்கு கேள்வி கேக்க சொல்லிக் கொடுத்தார். இளைஞர்கள் நிறைய கேள்வி கேட்டாங்க. இதுக்கு காரணம் யாருன்னு பாத்தது அந்த நாட்டு அரசாங்கம்.

சாக்ரடீசை கூப்பிட்டு விசாரிச்சாங்க. “கேள்வி கேக்க  நீங்கதானே சொல்லிக்குடுத்திங்களான்னு கேட்டாங்க, ஆமான்னாரு. அதனால அவரை குற்றவாளின்னு தீர்ப்பு சொன்னாங்க. மரண  தணடனை குடுத்தாங்க.

ஒரு கோப்பை நிறைய  ஹேம்லக் என்ற விஷத்தை  குடிக்க சொன்னாங்க. குடிச்சிட்டு அவர் இறந்து போயிட்டார். அதுக்கு பிற்பாடு கேள்வி கேக்க எல்லாரும் பயந்தாங்க.

காரணம் அந்த ஹேம்லக் விஷம். அது ஒரு மரத்துல எடுக்கற விஷம். அந்த விஷமரம் அங்க நிறைய இருந்தது. அந்த ஹேம்லட் மரத்தை பாக்கும்போதெல்லாம் அவுங்களுக்கு சாக்ரடீஸ் ஞாபகம் வந்தது.  

Socrates was Sentenced to Drink Hamlock Poison

இந்த மாதிரி கேள்வி கேட்கிறதுல பல வகைகள் இருக்காம். அதுல ஒரு அஞ்சு வகையை அறிஞர்கள் பிரித்து வச்சிருக்காங்க.

அது என்னென்ன இப்ப பார்க்கலாம். ஒண்ணு  உண்மையைக் கண்டறியும் கேள்வி. இந்தத் தகவல் உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்க கேட்கும் கேள்வி, அத வந்து ஆங்கிலத்துல ஃபேக்சுவல் கொஸ்டின் அப்படின்னு சொல்றாங்க.

இரண்டாவது கேள்வி. முள்ளின் கூர்முனை மாதிரி குறிப்பா கேட்கும் கேள்வி. தமிழ் நாட்டின் முதல்வர் யார் ? மு.க. ஸ்டாலின். சரியா சொல்லணும். அதுக்கு  கன்வர்ஜென்ட் கொஸ்டின் அப்படின்னு சொல்றாங்க.

மூணாவது கேள்வி பரந்து பட்டதாக பதில் சொல்லும்படியான  கேள்வி. வாணியம்பாடியப்பற்றி உனக்கு என்ன தெரியும் ? அது ஒரு நகரம். இங்க ஸ்டார் பிரியாணி ரொம்ப பிரபலம். இங்க பாலாறு ஓடுது. இதை வந்து ஆங்கிலத்தில் டைவர்ஜன்ட் கொஸ்டின்ஸ் அப்படின்னு சொல்றாங்க.

நாலாவது வகை கேள்வி, மதிப்பீடு செய்யும் கேள்வி. எது நல்லது, இயற்கை உரம் நல்லதா கெட்டதா ?  இதுக்கு பட்டுன்னு பதில் சொல்லலாம். இதை ஆங்கிலத்தில எவாலுவேஷன் கொஸ்டின்ஸ் அப்படின்னு சொல்றாங்க.

ஐந்தாவது வகை கேள்வி. ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு செல்லும்படியான ஒரு கேள்வி. எந்த உரம் நல்லது இயற்கை உரமா செயற்கை உரமா ? இந்த மாதிரி கேள்வியை ஆங்கிலத்தில் வந்து காம்பினேஷன் கொஸ்டின்.

அப்படி என்று சொல்கிறார்கள் இப்படி இந்த கேள்வி எல்லாம் அஞ்சு வகை  உண்டுஇதை சரியா புரிஞ்சுக்கணும்.  நாம நிறைய கேள்விகளை பிரச்சனை இல்லாம கேட்க முடியும். ஏன்னா வாழ்க்கையில கேள்வி கேட்காமலும் இருக்க முடியாது.

அதனால கேள்வி கேட்கிறதுல தப்பு கிடையாது.

ஒரே ஒரு கேள்வி கேட்டதால ஒருத்தர் முதலமைச்சராக ஆகி இருக்கார். அவர் கேட்ட கேள்வி அந்தமாதிரி கேள்வி. அந்தக் கேள்வியால  புதுசா ஒரு கட்சி தொடங்கினார். தேர்தல்ல போட்டியிட்டார். ஜெயிச்சி முதலமைச்சர் ஆனார்.  அது யாருன்னு நான் சொல்லத் தேவையில்லை. அவர்தான்ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை” அப்படின்னு சினிமாவுல பாடினார். வேற யாருமில்லை. 

எம்ஜிஆர் அவர்கள் தான்.

பூமி ஞான சூரியன்

Friday, April 11, 2025

HOW CAN A PLACE BE WITHOUT RAINFALL ? உலகத்துல மழை பேயாத ஊரு இருக்கா ?

 

உலகத்துல மழை

பேயாத ஊரு இருக்கா ?

HAND STATUE IN ATACAMA DESERTS

நம்ம ஊர்ல ஒரு வருஷம் கொஞ்சம் கம்மியா மழை பேஞ்சா கூடபாழாபோன பேயாம எப்படி காஞ்சி கிடக்குது பாரு” என்று சொல்லுவாங்க.

மழை அதிகமாக பேஞ்சாலும்எப்படி பாவ புண்ணியம் பார்க்காம ௳ழை பேயுது பாரு” ன்னு சொல்லுவாங்க.

ஜெய்சால்மர்

“இந்தியாவிலேயே எங்க ஊர்ல தான் கம்மியா மழை பெய்யுது” ன்னு சொல்றாங்க ராஜஸ்தான் மாநிலத்துகாரங்க.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் அப்படின்னு ஒரு இடம் இருக்கு. அங்க தான் ரொம்ப கம்மியான மழை என்று சொல்றாங்க. ஒரு வருஷம் 365 நாட்கள்ள இங்க பேயற மழை வெறும் 181 மில்லி மீட்டர் தான்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி

அது மாதிரி தமிழ்நாட்டுல எங்க கம்மியான மழை பேயுதுன்னு கேட்டா "எங்க ஊர்ல தான் கம்மியான மழை பேயுது"ன்னு சொல்றாங்க தூத்துக்குடி மாவட்ட காரங்க. அங்கே கிடைக்கிற மழை ஒரு வருஷத்துல 655 மில்லி மீட்டர். கணக்கு போட்டு பாருங்க ராஜஸ்தான் ஜெய்சால்மரில் பெய்யும் மழையை விட தூத்துக்குடியில் கிடைக்கிற மழை கிட்டத்தட்ட 3.5 மடங்கு அதிகம்.

சிரபுஞ்சி மான்சிராம்

உலகத்துல ஒரு இடத்துல மட்டும் தான் வருஷம் 365 நாளும் மழை பேயுது. அது எந்த ஊருன்னு தெரியுதா ? அதுதான் மான்சிராம். இந்தியாவில் இருக்கு. மேகாலயாவுல இருக்கு. சிரபுஞ்சிக்கு பக்கத்து ஊரு. சிரபுஞ்சியில் இருந்து 16 கிலோமீட்டர்.

அங்க தான் வருஷம் 365 நாளும் மழை பேயுது. பதினோராயிரத்து 782 மில்லிமீட்டர் மழை.

தொடர்ச்சியா ஒரு வாரம் பேஞ்சாலே, நம்மால தாக்கு பிடிக்க முடியல. வருஷம் 365 நாளும் பேஞ்சா யோசிச்சு பாருங்க.

ஐநூறு வருசம் மழை இல்லை

மழை கொஞ்ச நாள் தள்ளி போயிட்டாமழை பேஞ்சு கெடுக்கும் இல்லன்னா காஞ்சி கெடுக்கும்” னு நாம சொல்லுவோம்.

CACTUS OF ATACAMA

உலகத்துல 500 வருஷமா மழை பெய்யாத இடங்கள் இருக்கு. தெரியுங்களா ? அதைத்தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம் முக்கியமா. 

தென் அமெரிக்கா – சைல் - அட்டகாமா

அது தென் அமெரிக்காவுல இருக்கு. சைல் அப்படிங்கற நாட்டுல இருக்கு. அட்டகாமா பாலைவனத்தில் இருக்கு. அங்க இருக்குற சில இடங்களில் மழை பேஞ்சு 500 வருஷம் ஆகுதாம். “மழை இல்லன்ன என்ன பனி பெய்யுதுல்ல. அதை அறுவடை செய்வோம்” அப்படிங்கறாங்க.

ARICA A PORT CITY OF ATACAMA

மூணு மில்லி மீட்டர் மழை

சைல் நாட்ல அட்டகாமான்னு ஒரு பாலைவனம்  இருக்கு. இங்கே பெய்யக் கூடிய ஆண்டு சராசரி மழை அதிகபட்சமா 3 மில்லி மீட்டர். சில இடங்கள்ல 15 மில்லிமீட்டர் மழை கூட பெய்யுதாம். இது ரொம்ப அதிகமான மழையாம்.

சில இடங்கள்ள சுத்தமா 500 வருஷமா மழையே இல்லைன்னு சொல்றாங்க.அந்த இடங்கள்ள எவ்வளவு ஜனங்கள் இருக்காங்க ? எப்படி வாழறாங்க ? அப்படின்னு பார்க்கிறது தான்  இந்த கட்டுரையினுடைய நோக்கம்.

சுத்தமா மழை இல்லை

பொதுவா பாலைவனம்னா வறட்சியான பகுதி வறண்ட பகுதி ! ஆனா அட்டகாமா  ரொம்பவும் ஜாஸ்தியான அளவு வறண்ட பாலைவனம்!

பாலைவனம் என்றால் மழை குறைச்சலா பெய்யும். ஆனா அட்டகாமா பாலைவனத்துல நிறைய இடங்களில் சுத்தமா மழையே பெய்யறதில்லை.

மூடுபனி அறுவடை

FOGS AROUND THE HILLOCKS 

இங்க மழை பெய்யாது. ஆனா மூடுபனி ஊடுகட்டி பேயுது. உலகத்துல அதிகமான மூடுபனி இங்கதான் பெய்யுது. இங்க மூடுபனிய அறுவடை பண்ணி  குடிக்கறாங்க, சமைக்கறாங்க, குளிக்கறாங்க, பயிர் பண்றாங்க. அப்புறம்  காடு வளக்கிறாங்களாம் ! ஆச்சரியமா இருக்குது ! பாலைவனத்தை “சோலை வனமாக்குவோம் ! மேலைவனமாகவும் மாற்றுவோம்” என்கிறார்கள்.

FOG CATCHING

இங்க எங்க பார்த்தாலும் நிலங்கள் எல்லாம்  நிறைய கல்லா இருக்குமாம், உப்பா இருக்குமாம்.

மாதிரி செவ்வாய் கிரகம்

அதுமட்டுமில்ல இங்க 12 எரிமலைகள் இருக்கு. அட்டகாமா பாலைவனத்தின் மண்ணு மணல் பாறை, கல்லு, எல்லாம் செவ்வாய் கிரகம் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க.

எலான் மஸ்க்குக்கு பிடிக்கும்

அதனால செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு பதிலா அட்டகாமாவுல செஞ்சா போதும் அப்படின்னு சொல்லிட்டு இங்க நிறைய ஆராய்ச்சிகள் செய்றாங்களாம். எலான் மஸ்க் அங்க போனாரான்னு தெரியல !

கடலோர பாலைவனம்

உலகத்துல அதிகமான சோடியம் நைட்ரேட் உப்பு இங்கதான் இருக்கு. பசுபிக் கடலோட ஓரத்துல மட்டும் 1600 கிலோமீட்டர் நீளமான இந்த பாலைவனம் இருக்கு.

 சைல் நாட்டுக்கு சொந்தம்

1800 ஆம் ஆண்டு வாக்குல "அட்டகாமா எனக்கு தான் சொந்தம்"னு பொலிவியா நாடு சொன்னது. “இல்ல இல்ல அது எங்களுக்கு தான் சொந்தம்”னு சைல்நாடு சொன்னது. இதுக்காக ஒரு பெரிய சண்டையே நடந்துச்சு. சைல்நாடு ஜெயிச்சதால இப்ப சைல் நாட்டோட பொறுப்புல இருக்குது இந்த அட்டகாமா.

இங்க பகல் நேரத்தில் வெயிலோட வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் இருக்குமாம். ராத்திரியில அது 41 டிகிரி பாரன்ஹீட்டா குறைஞ்சிடுமாம். அதாவது 5 டிகிரி சென்டி கிரேட் க்கு  குறைஞ்சிடும். அட்டகாமா நட்சத்திரங்கள் மாதிரி எந்த நாட்டு நட்சத்திரமும் பிரகாசமா இருக்காது அப்படின்னு சொல்றாங்க.

உலகின் பெரிய டெலஸ்கோப்

உலகத்திலேயே ரொம்பவும் பெரிய டெலஸ்கோப் இங்க தான் இருக்கு. அதனால முக்கியமான ஆராய்ச்சி எல்லாம் இங்கதான் செய்ய முடியுமாம்.

WORLD'S LARGEST TELESCOPE

ஒரு வருஷத்துல 300 நாட்களுக்கும் அதிகமாக வானம் மேகம் இல்லாமல் சுத்தமா இங்க தான் இருக்குமாம்.

பத்து லட்சம் ஜனம்

இந்த அட்டகாமா பாலைவனத்தில் பத்து லட்சம் பேர் வசிக்கிறாங்க.

கடலோர கிராமங்கள் சுரங்க பகுதிகள் ஓயாசிஸ்பகுதிகள் இங்கெல்லாம் தான் ஜனங்க வசிக்கிறாங்க.

OASIS OF ATACAMA

ஆலிவ் விவசாயம் ஆல்பகாஸ் கால்நடை

ஆலிவ் கொட்டைகள், தக்காளி, மற்றும் வெள்ளரி இதுதான் அவங்களோட முக்கியமான விவசாயம்.

நாம ஆடு மாடு வளக்கற மாதிரி அவங்க வளக்குற கால்நடைக்கு பேருஅல்பகாஸ்” என்பது.


 நம்ம ஆடுகள மந்தை மந்தையா வளக்குற மாதிரி அவங்களும் இந்த அல்பகாச மந்தமந்தயா வளக்குறாங்க.

மழை தடுக்கும் மலைகள்

ஆண்டஸ் மலைகள் அப்புறம் வந்து சைலியன் கோர்ஸ் ரேஞ்ச் இந்த மலைகள் ரெண்டும் தான்   இந்த அட்டகாமாவுக்கு மழை வராமல் தடுக்குதாம்.

பசுபிக் கடல் மற்றும் அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து வரக்கூடிய மேகங்கள் இங்கே வராமல் இந்த மலைகள் தான் தடுக்குதாம். அதனாலதான் அட்டகா மாவில் மழை பேயறதில்ல.

இங்கு இருக்கும் இதர உயிரினங்கள் கூட வித்தியாசமா இருக்குங்க.

அட்டகாமா ஸ்பெஷல்

உதாரணமாக செந்தேள், சாம்பல் நிற நரிகள், பாலைவன குளவிகள், பாலைவன பட்டாம்பூச்சிகள், இதெல்லாம்தான் அட்டகாமா ஸ்பெஷல் அப்படின்னு சொல்றாங்க.

சைல் நாட்டுக்கு போறவங்க முக்கியமா பார்க்கக்கூடிய இடங்களில் முக்கியமானது அட்டாகாமா பாலைவனம் தான்.

பழைய கற்காலம் - அட்டகாமினோஸ்

பழைய கற்காலம் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னாடி முடிஞ்சு போச்சு. அதை ஆங்கிலத்தில ஸ்டோன் ஏஜ் அப்படின்னு சொல்லுவாங்க. பேலியோலித்திக் ஏஜ் அப்படின்னும் சொல்லுவாங்க.

அந்த காலத்துலஅட்டகாமினோஸ்” அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு இன மக்கள் இங்க வசிச்சாங்களாம். அந்த இனம் சுத்தமா இப்ப அழிஞ்சு போயிடுச்சு அப்படின்னு சொல்றாங்க. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் இடமேது ?

சுரங்கவேலை தொழிலாளிகள்

பொலிவியா, பெரு மற்றும் சைல் நாடுகளிலருந்து வந்தவங்க தான் அதிகமா இங்கு இருக்கும் சுரங்கள்ள வேலை பாக்குறாங்க. பாலைவனத்துல இருக்கற இந்த சுரங்கள்ள எப்படி வேலை பாக்கறாங்க.

இங்கு இருந்த நைட்ரேட் சுரங்கங்கள் எல்லாத்தையும் மூடிட்டாங்க. ஆனாலும் சுரங்க தொழில் நடந்துகிட்டு தான் இருக்கு.

லித்தியம் தங்கம் வெள்ளி

அதுக்கு காரணம் இங்க நிலத்துக்கு அடியில ஏகப்பட்ட உலோகங்கள் இருக்கு. தங்கம், வெள்ளி, இரும்பு, தாமிரம், இது இல்லாம போரான், லித்தியம், இதெல்லாம் கூட இங்க நிறைய இருக்கு. ஆனா மழை இல்லாம தண்ணீர் இல்லாம எப்படி எல்லாத்தையும் ஆக்கபூர்வமா செய்யறாங்க ? ஆச்சரியமா இருக்கு.

ஒருத்தர் ரொம்ப நாளா கால்ல போடுறதுக்கு நல்ல செருப்பு இல்லன்னு கஷ்டப்பட்டு இருந்தாராம். ஆனா அவர் ஒருநாள் ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது, கால் இல்லாத ஒருத்தர பார்த்தாராம். அதுக்கு பிறகு இந்த நல்ல செருப்பு கவலை அடியோட போயிடுச்சாம்.

அந்த மாதிரிதான் மழை இல்லாத பூமியை பார்த்து நம்ம ஆறுதல் அடையணும். அட்டகாமா மாதிரி மூடுபனி அறுவடை பண்ற நிலைமை நமக்கு வந்தா எப்படி இருக்கும் என்று யோசனை பண்ணி பாருங்க.

பூமி ஞான சூரியன்

THE THIRD CONVICT மூன்றாவது கைதி

மூன்றாவது கைதி Socrates The Father of Western Philosophy ஒரு சிறைச்சாலை . பொழுது விடிந்தது. கைதிகளை அடச்சி வைத்திருந்த கதவுகளை திறந்த...