Saturday, September 30, 2023

AND QUITE FLOWS THE CAUVERY 1. நடந்தாய் வாழி காவேரி

இந்தப்பதிவில் எந்த ஒரு மாநிலத்திற்கும் எவ்வித சார்பு நிலையும் இல்லாமல் காவிரி நீர்ப்பிரச்சினை குறித்த விழிப்புணரர்வு தருவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்காதெனின்

தண்ணீர் இல்லையென்றால் தானமும் செய்ய முடியாது, தவமும் செய்ய முடியாது, உரிய பங்கீடு என்று கேட்டடாலும்  சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்கிறது கர்நாடகா.

சிறப்போடு பூசனை செல்லாது வானம்

வறக்கும் மேல் வானோர்க்கும் ஈண்டு

சாமிக்கு நடத்தும் பூஜையும் புனஸ்காரமும் நடக்காதுன்னு சொல்லும்போது, ஆசாமிக்கு அதுவும் அளந்து குடுக்கணும்னா எப்படி குடுக்கறது என்கிறது கர்னாடகா.

அதனாலத்தான் நமது மமறைந்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவிற்கான நீர்த் திட்டம் ஒன்றினை அவர் பரிந்துரை செய்தார்.அதனை பிறகு ஒரு நாள் விரிவாக எழுதுகிறேன். 

 இப்போது வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்து இந்த காவிரி நதியின் நீரை பிரித்துக் கொள்வதில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை பிரச்சனைகள் எல்லாம் வந்தது என்பது பற்றி கொஞ்சம் சரித்திர பூர்வமாக பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி பார்க்கும் போது அறிவியல் ரீதியாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பிரச்சனை இன்றி இந்த காவிரி ஆற்றின் நீரை பிரித்துக் கொள்ள முடியுமா என்று நாம் பார்க்கலாம்.

காவிரி நதிநீரை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் எப்படிப் பிரித்துக் கொள்வது என்பது பற்றிய ஒரு ஒப்பந்தம் 1892 ஆம் ஆண்டு போடப்பட்டது. 

அதன் பிறகு 1924 ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது, இந்த ஒப்பந்தம்  50 ஆண்டுகளுக்கான ஒன்றாக போடப்பட்டது.

என்னதான் ஒப்பந்தங்கள் போட்டாலும், 200 ஆண்டுகளாக  இந்தப் பிரச்சினையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.

எப்போதெல்லாம் காவிரியின் நீர்வடிப் பகுதிகளில் மழை குறைவாக இருக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் போராட்டங்கள் வெடிக்கின்றன.

மழை அதிகமாக பெய்யும் ஆண்டுகளில் எல்லாம் கர்நாடகா மாநிலம் மகிழ்ச்கியாக  தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிடுகிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை.

2023 ம் ஆண்டும் இந்தப் பிரச்சினை மீண்டும் இரண்டு மாநிலங்களிலும் பூதாகராமாக வெடித்துள்ளது.

மாநிலம் தழுவிய ஒரு இருநாள்போராட்டத்தை அறிவித்து கொதித்துக் கொண்டிருக்கிறது  கர்நாடகா.தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அனுப்பக்கூடாது என்பதற்கு ஆதரவாக கர்நாடகாவின் விவசாய சங்கங்கள் மற்றும்   விவசாயம் அல்லாத சங்கங்கள் எல்லாம் ஒருங்கிணந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

நேற்று (செப் 29/23) நடந்த இந்தப் போராட்டத்தில் கர் நாடக  மானிலத்தின் சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரும் குருவராஜா கல்யாண மண்டபத்தின்  அருகில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் (KARNATAKA FILM CHAMBER OF COMMERCE) தங்களுடைய ஆதரவை அறிவித்துள்ளது. இது தவிர கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து சினிமா திரை அரங்குகளும் திரைப்பட காட்சிகளை ரத்து செய்துள்ளன. இதற்கான ஆதரவை கர்நாடகா ஃபிலிம் எக்சிபியூட்டர்ஸ் அசோசியேஷன் (ARNATAKA FILM EXHIBITOR’S ASSOCIATION) தெரிவித்துள்ளது. 

 “இன்று கர்நாடகாவில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தை நடத்த உள்ளோம் இந்த கூட்டத்தில்  காவிரி நீர் பிரச்சனை அதனை பங்கீடு செய்வது மற்றும் கோர்ட் உத்தரவு ஆகியவை பற்றி எல்லாம் பேச உள்ளோம். அந்த கூட்டத்தின் தீர்மானத்தின்படி நாங்கள் செயல்பட உள்ளோம்என்று கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சீதாராமையா தெரிவித்துள்ளார்.

அத்தோடு   நில்லாமல் மாண்டியா, மைசூரு, சாமராஜநகராராமநகரா மற்றும் ஹாசன் மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

காவேரி நீர் பங்கீடு போராட்டத்தின் எதிரொலியாக  கர்நாடக மாநிலத்தின் கெம்பே கவுடா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் 44 விமானங்களை ரத்து செய்தது. 

அதுபோக காவேரி நதியின் நீர்வடிப் பகுதியில் உள்ள மைசூர், மாண்டியா, சாமராஜ நகர் ஆகிய இடங்களில் பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தென்பகுதி மாவட்டங்களில் 59.88% பஸ்கள் மட்டுமே ஓடின எங்கின்றன பத்திரிக்கைச் செய்திகள்.  

போராட்டதில் கலந்துகொண்ட நடிகர்களில் முக்கியமானவர்கள்  சிவராஜ்குமார், தர்ஷன், துனியா விஜய், துருவ சர்ஜா, ஆகியோர்,    .

காவிரி நதி ஏன் வறண்டு வருகிறது ? இதற்கு அறிவியல் ரீதியாக, காவிரி நீர்வடி ப்பகுதியில் உள்ள  நிலப்பகுதி அல்லது மண்கண்டத்தால்   நீரை பிடித்து வைத்துக்கொள்ளும் சக்தி குறைந்து விட்டது, இரண்டாவதாக அப்படிப்பட்ட மண் கண்டத்தை நாம் படிபடியாக  மண் அரிப்பால்  இழந்து விட்டோம். இதனால்  காவிரி சீக்கிரமாக அதன் ஈரத்தன்மையை இழந்து விடுகறது என்று சொல்லுகிறார்கள்.

1892 ஆம் ஆண்டு வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்தில் காவிரி நதிநீரை பிரித்துக் கொள்வது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கர்நாடகா(STATE OF MYSORE) மற்றும் தமிழ்நாட்டில் (STATE OF MADRAS)இடையே செய்யப்பட்டது அந்த காலத்தில் கர்நாடகாவிற்கு மைசூர் என்றும் தமிழ்நாட்டிற்கு மெட்ராஸ் என்றும் பெயர் இருந்தது. 

1924 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு ஒப்பந்தம் இரண்டு மாநிலங்களுக்கு இடையே செய்யப்பட்டது இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது 50 ஆண்டுகள் என்றால் 1974 ஆம் ஆண்டு வரை என்று பொருள்.

1924 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி காவேரி நதியின் நீரில் 75% தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ளவற்றை 23 சதம் மைசூருக்கு ஒதுக்கப்படுகிறது மைசூர் என்றால் கர்நாடகா என்று கொள்ள வேண்டும். மீதமுள்ள இரண்டு சதவிகித நீரை கேரள மாநிலத்திற்கு அளிக்க வேண்டும். அந்த சமயம் கேரள மாநிலம் இல்லை அதனை திருவாங்கூர் சமஸ்தானம் என்று சொல்லுவார்கள்.

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய மாநிலத்தின் நீர் வளத்தை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன அவற்றின் விவசாயம் மற்றும் தொழிற்சாலை மேம்பாட்டிற்கு என கூடுதலான தண்ணீர் தேவைப்பட்டது.

இந்த கூடுதலான நீர் தேவையின் அடிப்படையில் மீண்டும் காவிரியின் நதிநீரை புதிய தேவைகளின் அடிப்படையில் பிரித்துகொள்ள திட்டமிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறு சீரமைப்புக்கு உள்ளாகின  அதன் அடிப்படையில் காவிரி நதியின் நீர் வரத்து பகுதி அல்லது நீர்வடிப் பகுதி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. ஒன்று கர்நாடக மாநிலத்தின் எல்லைக்குள் வருவது இன்னொன்று தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைக்குள் வருவது..

காவிரி ஆற்றின் மொத்த நீர்வடி பகுதி 81155 சதுர கிலோமீட்டர்இதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்வடிபப்பகுதி என்பது 34273 சதுர கிலோமீட்டர்தமிழ்நாட்டு எல்லையில் உள்ள நீர்வடி பகுதியின்  மொத்த பரப்பு 43856 சதுர கிலோமீட்டர்கேரளா மாநிலத்தில் உள்ள நீர்வடிப் பகுதியின் பரப்பு 286 சதுர கிலோமீட்டர், பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ளது 160 சதுர கிலோமீட்டர்

தற்போது கர்நாடகாதமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுமே ஏற்கனவே தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர் போதாது  எங்கள் தேவை அதிகரித்துள்ளது அதனால் இந்த பங்கீட்டினை மீண்டும் சரிவர செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

1990 ஆம் ஆண்டு, இந்தியாவின் மத்திய அரசு இந்த காவேரியின் நீர் பங்கிட்டினை சரி செய்வதற்காக ஒரு அமைப்பினை உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் பெயர் காவேரி வாட்டர் டிஸ்ப்யூட்ஸ் ட்ரிபூனல் (CAUVERY WATER DISTRIBUTES TRIBUNAL- CWDT) என்பதாகும். 

1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த காவிரி ட்ரிபுனல் புதியதாக ஒரு பங்கீட்டு அளவை நிர்ணயம் செய்தது.  அதன் பிரகாரம் 419 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர்  தண்ணீர் தமிழ்நாட்டிற்கு தரவேண்டும்.  270 ஆயிரம் மில்லியன்  கியூபிக் மீட்டர் ((TMC) தண்ணீர் கர்நாடகாவிற்கு அளிக்க வேண்டும் 30 ஆயிரம் மில்லியன் கி. மீ. (TMC) தண்ணீர் கேரளாவிற்கும் 7 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் (TMC) தண்ணீர் புதுவை மாநிலத்திற்கும் அளிக்க வேண்டும் 

இன்னொரு வழிகாட்டுதலையும் அளித்தது இந்த காவேரி வாட்டர் டிஸ்ட்ரிபூட்ஸ் ட்ரிப்யூனல்(CWDT).  அது என்னவென்றால் கர்நாடக அரசு ஒவ்வொரு மாதமும் இந்த தண்ணீரை  அங்கு இருக்கும் தண்ணீரின் அளவை பொறுத்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்க   வேண்டும். 

கடந்த செப்டெம்பர் 26 ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் ஒரு முக்கியமான முடிவினை எடுத்தார்கள். அந்த முடிவு படி தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3000 கன அடி என்ற அளவில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரைக்கும் 18 தினங்களுக்கு தண்ணீரை கர்நாடகம் விடுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரைப்படி தண்ணீர் வழங்க இயலாது பருவ மழை காலம் முடியப்போகிறது என்று கர்நாடகா சார்பில் வாதிடப்பட்டது. மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் 10 தினங்கள் இடைவெளி அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கோரிக்கை வைத்தது.

அதன் பிறகு காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 25 வது கூட்டம் (செப்டம்பர் 29ஆம் தேதி)  நடைபெற்றது இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகளின் படி தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை தண்ணீரை கர்நாடகம்  விடுவிக்க வேண்டும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்தது. 

தமிழகத்திற்கு தண்ணீரை விடுவிப்பதில் சற்று இடைவெளி தேவை என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது.

தற்போது அணைகளில் நீர் இருப்பு இல்லாததால் எங்கள் மாநிலத்தில் போராட்டம் நடைபெறுகிறது எனவே தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்க  ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசிப்போம் என்று தெரிவித்துள்ளார் கர்நாடக  அரசின் செயலர் ராகேஷ்சிங் அவர்கள்.

காவேரி நதி நீரினை பிரச்சினை இல்லாமல் பங்கிட்டுக்கொள்வது எப்படி என்று உங்கள் கருத்தினை பதிவிடுங்கள், அடுத்தப் பதிவில் மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்.

இன்னும் காவிரி நீர் வரும் !

பூமி ஞானசூரியன்

EMPTY BOAT GEN STORY காலி படகு ஜென் கதை

CHUANG TZU

காலி படகு

THE EMPTY BOAT

(ஓஷோ சொல்லும் கதைகளில் ஒன்று இது.தாவொ வின் சிந்தனைகள் பற்றி சொல்லும் கதை. இதனை எழுதியவர் தாவொ சிந்தனையாளர் சுவாங்க் சு (CHUANG TZU) என்பவர், 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த கதை அவருடைய பிரபலமான கதைகளில் ஒன்று)

 ஜென் துறவிகள் என்றாலே வித்தியாசமான துறவிகள் என்று அர்த்தம். அவர்களின் நடை உடை பாவனைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அப்படிப்பட்ட ஜென் துறவிகளில் வித்தியாசமாக ஒரு துறவி இருந்தார் அவரை கோபம் வராத துறவி என்று சொல்லுவார்கள்.

நிறைய பேர் அவரைப் பார்க்க வருவார்கள் வந்து அவரிடம் கோபம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை பெறுவார்கள். கோபம் வராமல் இருக்க என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

 கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபப்படாமல் இருக்கலாமா ? அப்போது மட்டும் கோபப்படலாமா ? இப்படி எல்லாம் கூட அவரிடம் எக்கு முடக்காக கேள்விகளை கேட்பார்கள்.

 இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் எப்படி கேட்டாலும் என்ன கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்லுவார். இந்த கோபம் வராத சாது சாமியார்.

 இவர் ஒரு ஜென் துறவி என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஜென் துறவிகள் அனைவருமே வித்தியாசமாக இருப்பார்கள். ஜென் கதைகளும் அதுபோல வித்தியாசமாகவே இருக்கும்.

 சராசரியாக இருக்கும் கதைகளில் ஒரு தொடக்கம் இருக்கும். அதன் தொடர்ச்சி இருக்கும். அதற்குப் பிறகு ஒரு எதிர்பாராத அல்லது சுவையான ஒரு முடிவு இருக்கும். அது போன்ற ஃபார்முலா கதைகளை ஜென் கதைகளில் எதிர்பார்க்க முடியாது.

 சில சமயங்களில் இது ஒரு கதையா என்று கூட யோசிக்க தோன்றும். இந்த கதை முடிந்து விட்டதா இல்லையா என்று கூட சில கதைகளில் அதன் முடிவு சந்தேகமாக இருக்கும்.

 ஆனால் அந்த கதைகளில் யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதை தான் இந்த கதையும். 

 ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் இழப்புகளை கணக்கிட்டு சொல்ல முடியாது அதனால் தான் நமது தமிழ் பெரியவர்கள் கூட கோபமே குடிகெடுக்கும் என்று சொன்னார்கள்.

 சிலர் எப்போதுமே சிறுசிறுவென இருப்பார்கள். கோபம் அவர்கள் மூக்கு நுனியில் எப்போதும் தயாராக உட்கார்ந்திருக்கும். அது எப்போது வேண்டுமானாலும் குதிக்கும் என்று சொல்லுவார்கள்.

 இந்த மூக்கு நுனிக்கும் கோபத்திற்கும் என்ன சம்பந்தம் உண்மையிலேயே கோபம் அங்கு தான் குடியிருக்குமா என்று உங்களுக்கு சந்தேகம். ஏற்பட்டிருக்கிறதா என்று சொல்லுங்கள்.

 இப்போது நாம் கதைக்கு வருவோம் கோபப்படாத நம்முடைய சாமியாரிடம் ஒருத்தர் கேட்டார், நீங்கள் எப்படி கோபம் வராத சாமியாராக மாறினது ? ஆரம்ப காலத்திலேயே உங்களுக்கு கோபம் வராதா ? இயற்கையாக கோபம் வராத மனிதரா நீங்க ? நீங்கள் கோபம் வராத மனிதராக மாறினீர்கள் ? தை சொல்ல முடியுமா என்று கேட்டார்.

அவருடைய கேள்விக்கு அந்த துறவி என்ன பதில் சொன்னார் என்பதை நான் உங்களுக்கு  தொகுத்து சொல்கிறேன்.

 இந்த துறவிக்கு  எப்போதும் தனியாக படகில் பயணம் செய்ய பிடிக்கும். அதுபோல படகில் செல்லும் போது  எங்காவது ஒரு கரையோரம் அதனை நிறுத்திவிட்டு, மணி கணக்கில் தியானம் செய்வது வழக்கம்.

 அதுபோல, ஒரு நாள் படகில் உட்கார்ந்தபடி  கண்களை மூடியபடி தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் திடீரென்று அவருடைய படகின் மீது ஏதோ ஒன்று  மோதியது.  என் படகின் மீது யார் மோதியது ? என்று கோபத்துடன் கேட்டபடி கண்களை திறந்து பார்த்தார்.

 அங்கு அவர் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் அங்கு யாரும் இல்லை. ஒரு காலி படகு தான் அங்கே நின்று கொண்டிருந்தது. அந்த படகிலும் யாரும் இல்லை. அந்த படகு தான் தானாக வந்து, அவருடைய படகின் மீது வந்து மோதியது, என்பதை புரிந்து கொண்டார்.

 படகுத் துறைகளில் படகுகளை கட்டி வைத்திருப்பர்கள். கட்டி வைத்திருக்கும் அந்த கயிறுகள் அறுந்து போகும்.. அல்லது அவிழ்ந்து போகும். அந்த படகுகள் காற்று வீசும் திசையில் அசைந்து அசைந்து போகும். அப்படி அசைந்து வந்த காலி படகு தான் இது என்பது அவருக்கு புரிந்தது.

 அது காலி படகு என்பதால் யார் மீது கோபப்படுவது என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் அவர் தனது கோபத்தை விட்டுவிட்டு மௌனம் சாதித்தார்.

 அதன் பிறகு அவர் பல சமயங்களில் கோபப்பட வேண்டிய மனிதர்களை சந்தித்தார். அப்படிப்பட்ட பல சூழல்கள் அவருக்கு ஏற்பட்டது. அது போன்ற சமயங்களில் எல்லாம் அவர்களை காலி படகாகக் கருத ஆரம்பித்தார்.

 அதனால் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி கோபம் உண்டாக்குபவர்களை காளி படகுகளாக நினைத்துக் கொள்ளுங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் உங்களுக்கு கோபப்படுவதற்கு வாய்ப்பு வராது. 

இதுதான் அந்த கோபப்படாத சாமியார் கோபப்படாமல் இருப்பதற்கு சொன்ன வழி. 

கோபப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்று தெரிந்து கொள்ள ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. உலகத்திலேயே அதிக கோபமான மனிதர் அடால்ஃப் ஹிட்லர்.

அவர் சிறு வயதிலிருந்து யூதர்கள் மேல் பெரும் கோபம் கொண்டிருந்தார். அந்த கோபத்தின் விளைவாக 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக கோபப்படுவது என்றால் என்ன என்று பார்க்கலாம். நாம் கோபப்படும் சமயம் நமது உடல் முழுக்க, அட்ரினல் சுரப்பிகள் ஒரு விதமான ஹார்மோன்களை சுரக்கும் அவற்றின் பெயர் ஒன்று அட்ரினலின் இன்னொன்று  கார்ட்டிசால்.

கோபத்தின் போது சுரக்கும் இந்த இரண்டு திரவங்களும் மூளைக்குள் பாயும். அட்ரினலின் மற்றும் கார்ட்டிசால் கலந்த ரத்தத்தை மூளை தசைகளுக்குள் பாய்ச்சும். இதன் மூலம் தசைகள் தாக்குதலுக்கு தயாராகும். இதயத்துடிப்பு அதிகமாகும். சுவாசம் அதிகரிக்கும். உடல் வெப்பம் அதிகரிக்கும்.  தோல் வியர்க்கத் தொடங்கும்.

 கோபத்தை பற்றி அதிகமாக எழுதி உள்ள எழுத்தாளரின் பெயர் ரேமண்ட் நோவாகோ என்பவர். அவர் கோபத்தை மூன்று வகையாக பிரிக்கிறார் ஒரு கோபம் அறிவை பாதிக்கும், இரண்டாம் கோபம் உடலை பாதிக்கும், மூன்றாவது கோபம் நமது நடத்தையை பாதிக்கும்.

இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா பிடித்திருந்தால் மறக்காமல் கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி வணக்கம். 

Friday, September 29, 2023

DEMISE OF MS SWAMINATHAN FATHER OF GREEN REVOLUTION - பசுமைப் புரட்சியின் தந்தை எம் எஸ் சுவாமிநாதன் மறைவு

DEMISE OF MS SWAMINATHAN 

FATHER OF GREEN REVOLUTION

இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை

விவசாய விஞ்ஞானி

எம் எஸ் சுவாமிநாதன் மறைவு

உலக அளவிலான வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் தனது 98 வது வயதில்சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை இயற்கை எய்தினார். அவர் ஒரு உழவியல் நிபுணர் வேளாண்மை விஞ்ஞானிமற்றும் சமூகவியல் அறிஞர். இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என கொண்டாடப்படுபவர்

இந்தியாவில் ஏற்பட்ட பசுமை புரட்சிக்கு,அடித்தளமாக மூல வேராக விதையாக விளங்கியவர்  எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள். இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக அளவிலான வேளாண்மை நிபுணராக அறியப்பட்டவர்.

வேளாண்மை ஆராய்ச்சியின் மூலமாக புதிய பயிர் ரகங்கள் புதிய பயிர் உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் என்று உருவாக்கி நாட்டின் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கி  உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்ற நிலையை உருவாக்கியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் சுமார் 31 பெரிதுமான பஞ்சங்கள் தோன்றின கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் செத்துப் போனார்கள். 

அப்போது இருந்த மக்கள் தொகைக்கு தேவையான உணவு தர இறக்குமதியை நம்பி இருந்தோம். 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 34 கோடியாக இருந்தது.  இன்ரைய இந்தியாவின் மக்கள் தொகை 143 .16.கோடி.  இன்று இந்தியா  பிற நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நிலையில் உள்ளது.  அதற்கு முக்கியக் காரணம் பசுமைப் புரட்சி. அதற்கு அடித்தளம் அமைத்த எம் எஸ் சுவாமினாதன் அவர்கள்.

எம் எஸ் சுவாமினாதன், முதுமை காரணமாக சில காலம் சென்னையில் தேனாம்பேட்டை உள்ள தனது இல்லத்தில் ஓய்வாக வசித்து வந்தார். அண்மை காலமாக உடல் நலிவுற்றிருந்த அவர் வியாழக்கிழமை காலை 11 20 மணிக்கு இயற்கை  எய்தினார்.

எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.  அவருடைய குடும்பம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் குடியேறியது. அங்கு  அவர் பிறந்தது 1925 ஆம் ஆண்டு. அங்கேயே வளர்ந்து கும்பகோணத்திலேயே அவர் தனது பள்ளி படிப்பை படித்து முடித்தார். 






அவருடைய தந்தை பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர்.அவருடைய  பெயர் எம் கே சாம்பசிவம். சுதந்திர போராட்டத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

சுவாமிநாதன் இளம் வயதில் தனது தாய் பார்வதி தங்கம்மாள் அரவணைப்பில் வளர்ந்தார் இளம் வயதிலேயே அவருக்கு வேளாண்மையில் நாட்டம் இருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்ததும் அவர் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலும் கோவை வேளாண்மை கல்லூரியிலும்  இளநிலை பட்டங்களை பெற்றார்.

1949 ஆம் ஆண்டு  வேளாண்மை ஆராய்ச்சியைத் தொடங்கிய தனது இறுதி மூச்சு வரை அதனைத்  தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆனது அதன் உணவு உற்பத்தி என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். உணவு உற்பத்தி இல்லாமல் அல்லது அதனை தவிர்த்து விட்டு இதர வளர்ச்சிகளை உருவாக்குவது என்பது அடித்தளம் இல்லாமல் வீடு கட்டுவது போன்றது என்று அவர் நம்பினார்.

ஆரம்ப காலத்தில் அவர் உருளைக்கிழங்கு நெல் மற்றும் கோதுமை ஆகிய பயிர்களின் மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சிகளை செய்து வந்தார்.

அமெரிக்காவின் வேளாண்மை விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்ற நார்மன் போர்லக்குடன்  இணைந்து அவருடைய ஆலோசனையுடன் இந்தியாவிற்கான உயர்  விளைச்சல் தரும்  கோதுமை ரகங்களை கண்டறியப்பட்டது.

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த உயர்வு விளைச்சல் கோதுமை ரகங்கள் தான் இந்தியாவில் ஏற்பட்ட பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக விளங்கியது. அதனால் தான் இந்தியாவின் பசுமை புரட்சியின்  தந்தை என்று இன்றளவும் போற்றப்படுகிறார்.

இந்தியாவிலும் பல அயல் நாடுகளிலும் இயங்கி வந்த ஆராய்ச்சி நிறுவனங்களில், பல உயர் பொறுப்புகளை அவர் வகித்து வந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு மத்திய வேளாண்மை துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார்.

சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் தலைவராகவும் தேசிய விவசாயிகள் ஆணையம் மற்றும் உலக உணவு பாதுகாப்பு அமைப்பின் நிபுணர் குழுவின் தலைவராகவும் ஆக்கப்பூர்வமாக பணியாற்றியுள்ளார்.

 2007 ஆம் ஆண்டு அன்றைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் , ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,   சாந்தி ஸ்வரூப் பட் நாகர்,   மகசேசேசர்வதேச உணவு பாதுகாப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.இதுவரை 84 கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், பொருளாதார நிபுணர் மதுரா சுவாமிநாதன்சமூக செயல்பாட்டாளர் நித்யா ராவ் ஆகிய மூவரும் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் அஞ்சலிக்காக அவருடைய உடல் தரமணியில் உள்ள எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 30ஆம் தேதி) காலை 10 மணி வரை வைக்கப்பட உள்ளது இறுதி சடங்கும் அன்று  நடைபெற உள்ளது.

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதையுடன் சனிக்கிழமை(செப்30) அன்று இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நமது குடியரசு தலைவர் திரவ்பதி முர்மு அவர்கள், உணவு பாதுகாப்பிற்காக தொலைநோக்கு பார்வையுடன் ஓய்வின்றி உழைத்தவர் என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் அவர்களின் இரங்கல் செய்தியில் உணவுப் பாதுகாப்பை பல  லட்சக்கணக்கான விவசாயிகளின் வளமைக்கும் ஏற்பாடு செய்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அவருடைய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது, நமது தேசத்தின் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்தது என்று தெரிவித்துள்ளார்.

நவீன பாரதத்தை கட்டமைத்தவர் அவர், எப்போதும் நம் இதயங்களிலும் மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார், என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேட்டிவ் மேல்நிலை பள்ளி  மாணவர்கள்  எம் எஸ் சுவாமினாதன் அவர்களுக்கு, தங்கள் பள்ளியின் பழைய மாணவர் என்ற  முறையில் அஞ்சலி செலுத்தினர்.

 பூமி ஞானசூரியன்

PORTSMOUTH ALIAS HISTORY OF ENGLAND 5. போர்ட்ஸ்மவுத் இங்கிலாந்தின் வரலாறு

 

THE HARBOUR OF
PORTSMOUTH

இதுதாம்ப்பா போர்ட்ஸ் மவுத்தின் கடற்கரை .. இதுதான் இங்கிலீஷ் கால்வாய். இதில் ஒரு தீவுதான் போர்ட்ஸ்மவுத்..” என்றான் என் மகன் ராஜா.

இங்கிலீஷ் கால்வாய் என்றால் அதுவும் ஒரு கடல் என்று எனக்கு தெரியாது.பார்க்க பார்க்க பிரமிப்பாய் இருந்தது.

அந்த காலத்தில் இங்கிலாந்து மீது எந்த நாடு சண்டைக்கு வந்தாலும், முதல் குண்டு போடணும்.. போர்ட்ஸ் மவுத் எங்க இருக்குன்னுதான் கேப்பாங்களாம்..சண்டை போடறதுக்கு ராசியான ஊர் இது தானாம்.

போர்ட்ஸ்மவுத்ல் இருந்து  ஃபிரான்ஸ் எவ்ளோ தூரம் இருக்கும் ? அது ரொம்ப பக்கமா இருக்கும்னு எனக்கு தோணிச்சி.”

நீங்க நினைக்கறது சரிதான்..ஃபெர்ரியில போனா சுமார் ஆறு மணி  நேரம் ஆகும்.”

அதைவிட வேகமா போக முடியாதா ?”

கொஞ்சம் வேகமா  போகும்  ஃபெர்ரியும் இருக்கு ..அதில்  போனால்.. 35 நிமிஷத்தில் போய்ச்சேரலாம்..”

அது எவ்ளோ தூரம்னு சொல்ல முடியுமா ?”

“27 நாட்டிகல் மைல்ஸ்.. அப்படின்னா 50 கி,மீ. ன்னு அர்த்தம்..”

“35 நிமிஷத்துல போகறதுன்னா .. போர்ட்ஸ்மவுத்ல இருந்தா ? ?

ஃபோல்க்ஸ்டோன் (FOLKESTONE) என்ற இடத்தில் இருந்து ஃபிரான்ஸில் கெலைஸ் (CALAIS)என்ற இடத்துக்கு போகும் நேரம்தான் இது..”

கெலைஸ் என்ற இடம் ஃபிரான்ஸை சேர்ந்ததா ?”

இங்கிலாந்துலருந்து ரொம்ப பக்கமா இருக்கும் துறைமுக நகரம் இந்த கெலைஸ் தான் .. போர்ட்ஸ்மவுத் உட்பட மூன்று துறைமுகங்கள்ளருந்து ஃபிரான்சுக்கு படகு சர்வீஸ் இருக்கு.. ஒரு நாள்ல சரசரியா 25 தடவை படகுங்க போயிட்டு வருது..” ராஜா

இதைச் சொன்னதும் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது, “ ஆமா லண்டன்லருந்து ரயில் சர்வீஸ் இருக்கா ?”

லண்டன்ல ஏறி உட்கார்ந்தா இரண்டேகால் மணி நேரத்தில் அய்ஃப்ஃபல் டவரை பாத்துகிட்டே பாரீஸ்ல போயி இறங்கலாம் ..”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அங்கு 60 நாள் அங்கு போர்ட்ஸ்மவுத்தின் அடிவாசலில் இருந்தபடி ஃபிரான்ஸ் போகாமல் வந்து விட்டது எனக்கு ஆதங்கமாக இருந்தது. அதுமட்டுமல்ல, போர்ட்ஸ்மவுத் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையே வந்தது. பின்னர் போர்ட்ஸ்மவுத் பற்றிய செய்திகளை தேடித்தேடி  துருவித்துருவிப் படித்தேன். 

1338 ஆண்டு ஃபிரான்ஸிலிருந்து  நிகோலஸ் பெஹுசெட் (NICHOLAS BEHUCHET) என்பவன் வந்தான். அவனோடு வந்த வீர்ர்கள், அல்ல அல்ல  காட்டுமிராண்டிகள்

கண்ணில் கண்டதை எல்லாம் அடித்தார்கள், உடைத்தார்கள், இடித்தார்கள், எரித்தார்கள். போர்ட்ஸ்மவுத்தை  தீக்கிரையாது. பெண்களை மானபங்கப்படுத்தினார்கள், பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தினார்கள்.

அதில் மிஞ்சியது ஒரு மருத்துவமனையும் ஒரு மாதாகோயிலும்,. இன்றும் இருக்கிறது அந்த மாதாகோயிலும்  மருத்துவமனையும், அதன் இன்றைய பெயர் ராயல் ஹாரிசன் சர்ச்.

ஹென்றி 3  மற்றும் எட்வர்ட் 1 ஆகிய  இரு மன்னர்களும் பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான கடற்படை தாக்குதல்களை நடத்த வேண்டும் என்றால் உடன் அவர்கள் வந்திறங்குவது  போர்ட்ஸ்மவுத் துறைமுகம்தான்.

1265 ஆம் ஆண்டில் நடந்த ஒரு போரில் போர்ட்ஸ்மவுத் நகரம் எதிரிகளால் முழுவதுமாக எரித்து சாம்பலாக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் போர்ட்ஸ்மவுத் துறைமுக பட்டினத்தில் வசித்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.

போர்கள் ஓய்ந்து 14 ஆம் நூற்றாண்டில் ரோமம், தானியங்கள், கோதுமை, அரக்கு, இரும்பு என இறக்குமதி தொடங்க வியாபாரம் சூடு பிடித்தது ஆயினும் ஒயின்  வியாபாரம் தான் இங்கு கொடி கட்டி பறந்தது.

மன்னர் ஜேம்ஸ் இன் தரைக்கோட்டை வாயில்கள் பிராக்ஹர்ஸ்ட் (FORT BROCKHURST) கோட்டைபோர்ட் செஸ்டர் கோட்டை (PORTCHESTER CASTLE)ஆகியவையும் ஸ்போர்ட்ஸ் மவுத்தின் இன்றைய முக்கியமான சுற்றுலா தங்கள்.

இங்கிலாந்தின் சரித்திரம் பேசும் போர்ட்ஸ்மவுத்தின் கோட்டைகள், ராயல் ஹாரிசன் சர்ச்சில் இருந்து 20 மைல் தொலைவில்  போர்ட்செஸ்டர்  கோட்டையும், ஜேம்ஸ் இன் தரைக்கோட்டை வாயில்களும் உள்ளன.

போர்ட்ஸ்மவுத்தின் சரித்திரத்தை புரட்டுவது என்பது இங்கிலாந்து சரித்திரத்தை புரட்டி பார்ப்பது மாதிரி.

அதன் பிறகு மீண்டும் ஒரு சோதனை போர்ட்ஸ் மவுத்திற்கு வந்தது அதனை திக்கு முக்காடச் செய்தது பாண்டிய நாட்டிற்கு வந்த சோதனை மாதிரி. இங்கிலாந்தை தலை குப்புற புரட்டிப்போட்டது பிளாக் டெத் என்னும் தொற்றுநோய். 

பிளாக்டெத் (BLACK DEATH)என்னும் தொற்று நோய் என்பது எலிகள் மூலம் பரவும் பிளேக் (PLAGUE) என்னும் நோயைத்தான் குறிக்கும். இது ஐரோப்பாவில் நூற்றுக்கு 60 பேர் என்ற கணக்கில் கொன்று குவித்தது.

உலகத்தின் மக்கள் தொகையை 450 மில்லியன் இருந்து 350 முதல் 375 மில்லியனாக குறைத்தது. அப்படி என்றால் அது எவ்வளவு மோசமான தொற்று நோய் என்று யோசித்துப் பாருங்கள்.

இந்த ப்ளேக் என்னும் மரண பிசாசு கருப்பு எலிகளின் மீது ஏறி கப்பல் பிரயாணம் செய்து ஐரோப்பாவின் காலடி வைத்து மனித உயிர்களை மக்கன் பேடாவாக சுவைத்தது.

1563 ல் போர்ட்ஸ்மவுத்ல் மட்டும் பிளேக் நோய் 300 பேரைக்கொன்று குவித்த்து.

1369 1377 மற்றும் 1380 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு படைகள் போர்ட்ஸ்மவுத் நகரை கிழித்துப் போட்டது.

பொர்ட்ஸ்மவுத் அண்ட் காஸ்போர்ட் என்னும் லோக்கல் பத்திரிகை ஒன்று 1845 ஆம் ஆண்டு வெளிவர தொடங்கியது.

1805 ம் ஆண்டு நடந்தது உலகப்பிரசித்தி பெற்ற டிராஃபல்கர் போர். இந்த போரில் இங்கிலாந்தை எதிர்த்தது15 ஸ்பானிஷ் கப்பல்க்கள், 18 ஃபிரான்சு கப்பல்கள். 2600 பீரங்கிகளுடன் கூடிய 30000 போர்வீர்ர்கள். அத்தனையும்  ஓடஓட விரட்டியது  இங்கிலாந்தின் கடற்படை

அந்த வெற்றி மகுடம் சூட  கருவியாக இருந்தது எச் எம் எஸ் விக்டரி ஆனால் அதற்கு இங்கிலாந்து கொடுத்த விலை நெல்சனின் உயிர்.

அந்த வெற்றி மகுடக்கப்பல் எச் எம் எஸ் விக்டரி இன்று பொர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில்தான்  நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

1916 ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் போது  விமானம் வீசிய குண்டு மழை போர்ட்ஸ்மவுத்தை சல்லடை ஆக்கியது.

இரண்டாம் உலக போரின் போது 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் நாள் ஹிட்லரின் விமானங்கள் 1320 குண்டுகளையும் 38 ஆயிரம் வேப்பம் போன்ற ஏறி குண்டுகளையும் இங்குதான் வீசியது.

30 சர்ச்சுகள் எட்டு பள்ளிகள் ஒரு மருத்துவமனை உட்பட 80 ஆயிரம் வீடுகளும் எரிந்து சாம்பலாகின. 930 பேர் உயிரிழக்க 1216 பேர் படுகாயம் அடைந்தனர். விளைவு போர்ட்ஸ் மவுத் சுடுகாடாக மாறியது.

போர்ட்ஸ்மவுத்பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் உலக சரித்திரத்தை உள்ளங்கையில் ஏந்திப்பிடித்திருக்கும் நகரம் என்று சொல்ல்லாம்.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா பிடித்திருந்தால் கமெண்ட் பகுதியில் ஒரு வார்த்தை பதிவிடுங்கள். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...