Monday, July 17, 2023

YELLOW MANGROVE TREE OF BIODIVERSITY 258. பன்றிக்குத்தி பல்லுயிர்க்கும் படியளக்கும் மரம்

பல்லுயிர்க்கும் படியளக்கும் மரம்
பன்றிக்குத்தி


பன்றிக்குத்தி கடலோர சூழல் பாதுகாப்பு மரம், காலநிலை மாற்ற கட்டுப்பாட்டு மரம், அலையாத்தி மரங்களில் ஒன்று, மஞ்சள் கண்டல் என்னும் பெயருடைய மரம், இதன் பூக்கள் பத்து மகரந்தக் கேசரங்கள் கொண்ட சிறப்புடையவை, தோல்நோய் முதல் தொழு நோய் வரை  குணப்படுத்தும் மூலிகை மரம் கூட.

தாவரவியல் பெயர்: செரியாப்ஸ் டிகேண்ட்ரா (CERIOPS DECANDRA)

பொது பெயர்கள்: டாகல் மாங்குரோவ், காம்பவுண்ட் சைம்டு மேங்ரோவ், ஸ்பர்டு மேங்ரோவ், எல்லோ மேங்க்ரோவ் (TAGAL MANGROVE, COMPOUND CYMED MANGROVE, SPURRED MANGROVE, YELLOW MANGROVE)  

தாவர குடும்பம்: ரைசோபரேசி (RHIZHOPORACEAE)

மொழிப்பெயர்கள்:

பெங்காலி: மாத் கொரான் (MOTH GORAN)

குஜராத்தி: கனாரி (KANARI)

கன்னடா: சவுரி (CHOWRI)

மலையாளம்: ஆனக்கண்டல் (AANAKANDAL)

மராத்தி: சவுரி (CHOWRI)

தெலுங்கு: கிடாரா (GEDARA)

தமிழ்: பன்றிகுத்தி (PANRIKUTHI)

செரியாப்ஸ் டிக்கான்ட்ரா, என்பதில் கிரேக்க மொழியில் டிகன்ட்ரா’ என்றால் 10 ஆண்கள் என்று அர்த்தம்.தன் பூவில் பத்து மகரந்தங்கள் இருப்பதால் இதனை இப்படி குறிப்பிடுகிறார்கள்..

முக்கியமாக காயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் முக்கியமான மூலிகை இது. மிகுதியான ரத்த போக்கினை கட்டுப்படுத்த இதன் பட்டை கஷாயத்தை பயன்படுத்துகிறார்கள். கடுமையான குடற்புண்ணையும் இது குணப்படுத்துகிறது. ஆப்பிரிக்காவில் சில கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள், இதன் இலைகள் மற்றும் தண்டுகளில் இருந்து தயாரிக்கும் குடிநீரை பயன்படுத்தி, தொழுநோய், மலேரியா, மற்றும் தோல் நோய்களை கட்டுப்படுத்துகிறார்கள்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்தியாவிலும் இதன் இலைகள் மற்றும் பட்டைகளை தோல் பதனிட பயன்படுத்துகிறார்கள்.

இதன் பட்டை சாற்றில் கருப்பு நிற சாயம் தயாரிக்கிறார்கள். இந்த மரங்களின் கட்டைகள் பந்தல்கால்களாக, கம்பங்களாக, கரிகள் தயாரிக்க, விறகாக என பல வகைகளில் பயன்படுகிறது.

பரவி இருக்கும் இடங்கள்:

இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, நியூகினியா, இந்தோசைனா,யாம், மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா.

தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம், ஒரிசாவில் கட்டக், கோராபுட் மாவட்டங்கள்.

வளரியல்புகள்:

சிறுமரம் அல்லது பெருஞ்செடி. இரண்டு முதல் ஐந்து மீட்டர் உயரம் வளரும். பட்டைகள் சாம்பல் நிறமாக இருக்கும். பட்டைகளை சுலபமாக உரித்து எடுக்க வரும். இலைகள் 4 முதல் 9 சென்டிமீட்டர் நீளமாகவும், 2.50 முதல் 6.00 சென்டிமீட்டர் அகலமும் இருக்கும். பூக்கள் பூங்கொத்துக்களாக இருக்கும். ஒரு கொத்தில் ஆறு முதல் 20 பூக்கள் இருக்கும். பூ இதழ்கள் மஞ்சள் நிறமாக இருக்கும்.

சூழல் தொடர்பான பயன்கள்:

சுற்றுச்சூழலை மேம்படுத்தும். ஆற்றங்கரை மற்றும் கடலோரங்கள் மண்ணரிப்பை தடுக்கும். இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்தும்.. புயல் மற்றும் சூறாவளிகளில் எழும் முரட்டு அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்தும். அலையாத்தி மரங்கள் வளரும். சூழல், பல்வேறு பிராணிகள், பறவைகள், பூச்சிகள், நண்டுகள், நத்தைகள், மீன்கள், இறால்கள், போன்றவற்றிற்கு இருப்பிடம் தந்து இனப்பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

இது தவிர குறிப்பிடும்படியான செய்திகள் வேறு ஏதும் உங்களுக்கு தெரிந்திருந்தால், அன்பு கூர்ந்து எனக்கு தெரிவியுங்கள், நன்றி.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...