Saturday, July 22, 2023

WORLD RENOWNED HEALTHIEST FRUIT TREE MAVILANGAM 272.மாவிலிங்கம் ஆரோக்கியத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பழமரம்

மாவிலிங்கம் ஆரோக்கியத்திற்கு 
அங்கீகரிக்கப்பட்ட பழமரம்

 நீங்கள் உடல் பருமனானவரா ? இதை முழுசா படியுங்க !

உலகின் பல பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட பழமரம் என்கிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பழமரமாக இதனை வளர்க்கிறார்கள்..வைட்டமின் சி சத்தை அபரீதமாக கொண்ட இந்த மரம் பலவிதமான நோய்களை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் பழமரம் என்று பெயரெடுத்துள்ளது..  

தாவரவியல் பெயர்: கிரேட்டீவா ரிலீஜியோஸா (CRAETEVA RELIGIOSA)

தாவரக் குடும்பம்: கப்பாரிடேசி (CAPARITACEAE)

தாயகம்: தெற்கு ஆசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா 

பொதுப் பெயர்கள்த்ரீ லீவ்டு கேப்பர், சேக்ரெட் கார்லிக் பியர், டெம்பிள் பிளான்ட் (THREE LEAVED CAPER, SACRED GARLIC PEAR, TEMPLE PLANT)

பல மொழி பெயர்கள்:

தமிழ்: மாவிலங்கம், மரலிங்கம் (MAVILANGAM, MARALINGAM)

தெலுங்கு: உலிமரி சேட்டு (ULIMARI SETTU)

மராத்தி: ஹத்வர்னா (HATHVARNA)

மலையாளம்:  நிர்மா தலம்  (NIRMA DALAM)

ஹிந்தி: வருணா, வர்ணா (VARUNA, VARNA)

இதன் பூக்கள் சிறு பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் இடையே  மிகவும் பிரபலமானவை. காரணம் இந்த பூக்களில் இருக்கும் கூடுதலான தேன்தான். நீளமான இதன் மகரந்த கேசரங்களை பார்த்தால் நமக்கு சிலந்தி பூச்சிகள் ஞாபகத்திற்கு வருமாம், அதனால் இந்த மரத்திற்கு ஸ்பைடர் ட்ரீ என்றும் பெயர் உண்டு.

பரவியிருக்கும் பகுதிகள்

நடுத்தரமான உயரம் கொண்ட இந்த மரங்கள் அதிகம் பரவி இருப்பது இந்தியா, தெற்கு ஆசிய நாடுகள், மலேசியா மற்றும் பசுபிக் தீவுகள். கடல் மட்டத்திலிருந்து 1050 மீட்டர் உயரம் வரை தாழ்வான பகுதிகளில் பெரும்பாலும் நீர் ஆதாரங்களின் அருகில் வளரும். இதனை புனிதமான மரமாக கருதுவதால் கோயில் வளாகங்களிலும் விரும்பி இதனை வளர்க்கிறார்கள்.

இதர நாடுகளில் இதற்கு வழங்கும் பெயர்கள்

ஆங்கிலம்: (SACRED BURNA)

இந்தோனேசியா: (JARANAN)  

மலேசியா: (KEPAYAN)  

பிலிப்பைன்ஸ்: (SALINGBBOBAG)

தாய்லாந்து: (KUM BOK)  

வியட்நாம்: (BUN THIEU)

மரத்தின் மருத்துவ பயன்கள்

இந்த பட்டை சாற்றினை மலமிளக்கியாகவும், வயிற்றில் இருக்கும் பூச்சிகளை நீக்கவும், மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

வேர்களில் இருந்து கஷாயம் தயாரித்து அதனை பயன்படுத்துகிறார்கள்,

இதன் இலைகள் மற்றும் பட்டைகளை நன்கு இடித்து கூழாக்கி, மூட்டு வீக்கம் உள்ள பகுதிகளில் தடவி குணப்படுத்தும் பழக்கம் இந்தியாவில் பரவலாக உள்ளது.

இதன் இலைகளைதக்கி சாறு எடுத்து அதனை காதுகளில் ஊற்றி காது வலியை குணப்படுத்தும் முறையை சாலமன் தீவு மக்கள் கடைபிடிக்கிறார்கள்.

இதன் பழங்களில் மீன் பொறிகளில் பயன்படுத்தி, மீன் பிடிக்கும் பழக்கம் மேற்கு போர்னியோ பகுதிகளில், புழக்கத்தில் உள்ளது. இதன் இலைகளை இந்தோசைனா மற்றும் இந்தியாவில் கீரைகளாக சமைத்து பயன்படுத்துகிறார்கள். இதன் பழங்களை சாப்பிடலாம். பூக்களை ஊறுகாய் போடலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்கள்

இன்று உலகம் முழுவதும் உடல் பருமனாவது  மிகவும் கவலைப்படும்படியான ஒரு நோயாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்தேன். நிறை வித்தியாசம் இன்றி நிறைய பேரை உடல் பருமமானவர்களை பார்க்க சங்கடமாக இருந்தது. ஆனால் அவர்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. நல்ல வேளை இந்தியாவில் அந்த அளவுக்கு மோசம் இல்லை.

சக்கரை நோய் இதய நோய் புற்றுநோய் என்ற வரிசையில் இன்று வந்து கொண்டிருப்பது இந்த அபாயகரமான உடல் பருமனாதல் எனும் நோய்தான்.

ஊட்டம் நிறைந்த பழம்

மாவிலங்கம் பழங்களை ஊட்டம் நிறைந்த ஒரு சிறு பழம் என்கிறார்கள், அப்படி சொல்வதை விட உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழம் என்று சொல்லலாம்.

யாருக்காவது உடம்பு சரியில்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் போய் பார்க்க வேண்டும் என்றால் உடனே ஆப்பிள் ஆரஞ்சு என்று கையில் பிடித்துக் கொண்டு போவது எனக்கும்தான் பழகிவிட்டது.  நாம் மாவிலங்கம் மாதிரியான சிறு பழங்களை தேடிப் பிடிக்க வேண்டும் என தோன்றுகிறது. டிசம்பர் முதல் மே மாதம் வரை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு இதன் பழங்கள் மார்க்கெட்டில் கிடைக்கும்.

மாவிலிங்கம் படத்தில் இருக்கும் சத்துக்கள் வைட்டமின் சி இதில் அதிகம் உள்ளது. இது தவிர நார்ச்சத்து 31.84 சதமும், மாவுச்சத்து 30.87% சதமும் அடங்கி உள்ளது. இந்த பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் வராது என்கிறார்கள்.

உடல் பருமனாதலை குறைக்கக்கூடிய சக்தி இந்த பழங்களில் உள்ளது. அதனால் எல்லா பழங்களையும் சாப்பிடுவது போல இந்த பழத்தையும் நாம் சாதாரணமாக சாப்பிடலாம். அதைப்போலவே முதியோருக்கு வரும் சர்வதேச நோய் மூட்டு வலி, மூட்டு வீக்கம், மூட்டு பிடிப்பு, மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி இந்த பழங்களில் உள்ளது.

எனக்கு வேண்டிய ஒருத்தர் மூட்டு வலி என்று டாக்டரிடம் போனார், நானும்தான் கூட போயிருந்தேன்.ஸ்டியோபொராசஸ் அது இது என்று சொன்னார். முட்டியில் ஒரே ஒரு ஊசி தான் ஜென்மத்துக்கு முட்டி வலி வரவே வராது என்று சொல்லிவிட்டு ஒரு ஊசி போட்டார் அந்த டாக்டர். அது மாட்டுக்கு போடும் ஊசி மாதிரி  மெகா சைசில் இருந்தது. ஊசிக்கு ஆன செலவு ரொம்ப கம்மி. இந்திய ரூபாயில் 15000 மட்டும் தான்.

மூட்டு வலி 30 நாட்களை திரும்பவும் வந்தது. அப்போதுதான்  தான்  நான் தெரிந்து கொண்டேன் ஜென்ம்ம் என்றால் 30 நாள் என்று.

மாவிலங்கு பழங்களில் எலும்புகளை உறுதிப்படுத்தும் சக்தி உள்ளது. இப்படி இயற்கையான சமாச்சாரங்கள் தான் நமக்கு இனி கை கொடுக்கும் என்று தெரிகிறது. இந்த பழங்கள் கோவை காய்கள் மாதிரி நீளமாக வெளிறிய பச்சை நிறத்தில் வெண்ணிற புள்ளிகளுடன் இருக்கும், பார்த்து வாங்குங்கள்.

இந்த மாவிலங்கு பழங்கள் பற்றிய சந்தேகம் ஏதும் இருந்தால் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...