Monday, July 17, 2023

PANNUKUCHI MANGROVE FOR COASTAL CONSERVATION TREE 256.பண்ணுகுச்சி வெண்கண்டல் கடலோரப் பாதுகாப்பு மரம்

 

பண்ணுகுச்சி வெண்கண்டல்

பண்ணுகுச்சியின் அடிமரம்


BRUGUIERA CYLINDRICA

பண்ணுகுச்சி என்னும் வெண்கண்டல் மரம் ஒரு சிறிய மரம், 66 அடி உயரம் வளரும். இந்த அலையாத்தி  மரத்தில் பல்வேறு மர சாமான்கள் செய்யலாம். கரிகள் தயாரிக்கலாம். விறகாக, மீன்பிடிப்பதற்கான சாதனங்கள் செய்ய, வாசனைப் பொருட்கள் தயார்செய்ய, வா , மருந்தாக என பல வகைகளில் பயன்படுத்தினாலும் இது ஒரு கடலோரப் பாதுகாப்பு மரம்.

பொதுப் பெயர்: ஒயிட் பர்மா மேங்ரோவ்  (WHITE  BURMA MANGROVE)

பிறமொழிப் பெயர்கள்:

குஜராத்தி: காக்கண்டன் (KAKANDAN)

மலையாளம்: செருகண்டல்  (SERUKANDAL)  

மராத்தி: கண்டல்  (KANDAL)  

ஒரிசா: புக்குள்  (BOGUL)  

தமிழ்: காகண்டல், காகண்டன்,ண்ணுகுச்சி  (KAKANDAL, KAKANDAN, PANNUKUCHI)

தெலுங்கு: உராடா  (URADA)

தாவரவியல் பெயர்: புருவீரா சிலிண்டரிக்கா  (BRUGUIERA CYLINDRIKA)  

தாவரக் குடும்பம்: ரைசோபோரேசி  (RHIZOPHORA)

வளரியல்பு:

20 மீட்டர் உயரம் வரை வளரும் மரம். சாம்பல் நிறம் மற்றும் வழு வழுப்பான பட்டை, எதிரெதிராக வளரும் மெல்லிய இளம் பச்சை நிற கோ வடிவ இலைகள். கொத்தாக அமைந் பூக்கள், மெல்லியதா பூ இதழ்கள் நுனியில் இரண்டு முதல் மூன்று கூர்மையான முப்பது போல இருக்கும், வெண்மையா   நிறத்தில் தொடங்கி காவி நிறமாக மாறும்.பூவிதழ்கள், பருத்த அடிமரம் இதுதான் பன்னுகுச்சி மரம்.

பயன்கள்

ஒரு அலையாத்தி மரம் என்ற முறையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மரம். புயல் சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் வரும்போது அருகமைந்த கிராமங்களை மக்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்கும். எல்லா அலையாத்தி மரங்களைப் போல இதுவும் உறுதியான மரம். கட்டுமானப் பணிகள் மற்றும் மரச் சாமான்கள் செய்ய உதவும், விறகாக பயன்படும். இதன் பட்டைகள் உணவில் பதப்படுத்தும் வாசனைப் பொருளாக பயனாகிறது. இளஞ்செடிகளின் குருத்துவேர்களை சக்கரை மற்றும் தேங்காய் உடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.

தாய்லாந்து நாட்டினர் இதன் வேர்நுனிகள், பட்டைகள், இளம் தண்டுகள், ஆகியவற்றை காய்கறிகளாக சமைக்கிறார்கள். மாலத்தீவுகளிலும் இந்த மரத்தின் பல பாங்கள் உணவாக உபயோகமாகிறது.

மிகையான ரத்தப்போக்கு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இதன் இலைகளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

பரவி இருக்கும் இடங்கள்

இந்தியா, ஸ்ரீலங்கா, தென்கிழக்கு சியா, ஆஸ்திரேலியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், நியூகினியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர்.

இந்தியாவில் மேற்கு மலபார் கடலோர பகுதிகள், மற்றும் அந்தமான் தீவுகள்.

இந்த வெண்கண்டல் மரம்பற்றிய கூடுதலான செய்திகள் தெர்ந்தால் எனக்கு சொல்லுங்கள், நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...