Monday, July 17, 2023

WHITE MANGROVE CURE CANCER TUMOURS 255. வெண்கண்டல் மரம் கேன்சர் கட்டிகளை குணப்படுத்தும்

 

வெண்கண்டல் மரம் 

உப்பு சுரப்பிகள்
வெளியேற்றிய உப்புத்துகள்


இதுவும் ஒரு வெண்கண்டல் மரம் தான், இதன் தாவரவியல் பெயர் அவிசென்னியா அபிசினாலிஸ் (AVICENNIA OFFICINALIS). ஒரு தாவரத்திற்கு அவிசென்னியா என்ற பெயர் வைத்தால் அதனை கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம் அவை நோய்களை குணப்படுத்தும் மரம் என்று. கிபி 980 முதல் 1037 வரை அவிசென்னா என்ற ஒரு மருத்துவர் இருந்தார். அவர் அரேபியாவின் பிரபலமான மருத்துவர். அவருடைய பெயரைத்தான் இப்படி தாவரங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். கண்டல் என்பதால் உங்களுக்கு இது அலையாத்தி மரம் என்று தெரியும். வெண்கண்டல் என்றால் இதன் பட்டை வெண்மையாக இருக்கும் என்று பொருள்.

பொதுபெயர்கள்:இண்டியன் மேங்குரோவ், ஒயிட் மேங்குரோவ் (INDIAN MANGROVE, WHITE MANGROVE)

பிறமொழிப் பெயர்கள்

தமிழ்: வெண்கண்டல் (VENKANDAL)

தெலுங்கு: தெல்லமாதா (THELLAMATHA)

பெங்காலி; பனி (BANI)

குஜராத்: செரியான்(CHERIYAN)

ஹிந்தி: பேன்(BAEN)

கன்னடா: உப்பட்டி(UPPATI)

மலையாளம்:ஓராயி(ORAYI)

சமஸ்கிருதம்: சாகரோதுர்கா(SAGARODURGA)

பரவி இருக்கும் இடங்கள்

இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, மியான்மர், நியூகினியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

தமிழ்நாட்டில் பிச்சாவரம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள கடற்கரைகளில் அடர்ந்த காடுகளாக மாறியுள்ளன.

வளரியல்புகள்

ஆறுகள் கடலில்சேரும் கழிமுகம் அல்லது முகத்துவாரப் பகுதிகளில் பொதுவாக எல்லா அலையாத்தி மரங்களும் வளரும். மரங்களுக்கு சாதகமான சூழலில் உள்ள இடங்களில் 12 முதல் 18 மீட்டர் கூட உயரமாக வளர்கின்றன.

இந்த மரங்கள் நெருக்கம் இல்லாத இடங்களில் படர்ந்து வளரும். மரங்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிற பட்டையுடன் இருக்கும். அதனால் தான் இதனை நாம் சாம்பல்நிறக் கண்டல் அல்லது வெண்கண்டல் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் இந்த அலையாத்தி மரங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. கடலோரங்களில் குறைவாகவே இருக்கின்றன. அதனால் தான் இதனை ரிவர்மேங்ரோவ் என்று சொல்லுகிறார்கள்.

வேர்கள்

மேங்ரோவ் மரங்களின் அடியில் சுவாச வேர்கள் (AERIAL ROOTS)வளர்ந்து ஒன்றரை முதல் இரண்டு அடி உயரத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சாதாரணமாக வேர்கள் என்றால் தரையின் உள்ளே செல்லும். ஆனால் அலையாத்தி மரங்களில் மூச்சு வேர்கள் தரையில் இருந்து முளைத்து மூச்சு விட வெளியே வரும்.

இலைகள் துளிராக இருக்கும்போது பளபளப்பாக இருக்கும். முற்றிய இலைகள் கரும்பச்சை நிறமாக இருக்கும்.

இலைகளின் அடிப்பும் வெண்மையாக இருக்கும். உப்புத்துகள் படிந்திருக்கும். உப்பு நீரில் இருந்து உறிஞ்சிய சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்புக்களை இலைகள் உப்புச்சுரப்பிகள் மூலம் வெளியேற்றி இருக்கும். இப்படி தேவைக்கு அதிகமாக உப்புகளை வெளியேற்றுவதன் மூலம் தான் இந்த மரங்களால் உப்பு நீரில் வளர முடிகிறது.

பயன்கள்

கடற்கரை மற்றும் ஆற்றங்கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கும். புயல் மற்றும் சூறாவளி ஏற்படும்போது கடலோர கிராமங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும். நீர்வாழ் உயிரினங்கள் நண்டுகள், நத்தைகள், மற்றும் மீன்கள் இறால் ஆகியவற்றின் இனப்பெருக்கத்திற்கு உதவும்.

நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. இதன் கட்டைகள் மரச் சாமான்கள் செய்ய உதவுகிறது, இதில் டானின் சத்துக்கள் தோல் பதனிட உதவும், சாயம் எடுக்க உதவும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பருவநிலை மாற்றப் பாதுகாப்பிற்கும், இதர மரங்களை விட கூடுதலான பயன்தரக்கூடியதாக விளங்கும். இதிலிருந்து எடுத்த சாயத்தை துணிகளுக்கு வண்ணம் ஏற்ற பயன்படுத்துகிறார்கள் மரத்தின் சாம்பலில், உப்பு நிறைந்து இருப்பதால் இதனை துணிகள் துவைக்க பயன்படுத்துகிறார்கள். இதன் கட்டைகளை வீடுகள்கட்ட, படகுகள் மற்றும் பெட்டிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.

கேன்சர் கட்டிகளைக் குணப்படுத்த, பால் உணர்வுத் தூண்டியாக, காயங்களைக் குணப்படுத்த மற்றும் இதன் பிசினை பாம்புக்டியினை குணப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள்.

அன்பின் இனிய நண்பர்களே நீங்கள் கடலோரப் பகுதியில் வசிப்பவர்களாக இருந்தால் உங்கள் பகுதியில் வெண்கண்டல் இருக்கிறதா இது பற்றிய கூடுதலான தகவல்களை ஏதும் உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். நன்றி 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

3 comments:

இறையரசன் said...

சிறப்பு.
அலையாத்தி என்று பொதுவாக சொல்வதும் இது தானா?

Gnanasuriabahavan Devaraj said...

அலையாத்தி என்பதும், மேங்குரோவ் என்பதும், கண்டல் என்பதும் ஒன்றுதான்,தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா - தே.ஞானசூரியபகவான்.

Gnanasuriabahavan Devaraj said...

தங்களைப்போன்ற தமிழ் அறிஞர்கள், சரித்திர ஆறாய்ச்சி அறிஞர்கள் கருத்துக்களை பதிவு செய்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். தங்களுக்கு நன்றி வணக்கம். தே.ஞானசூரியபகவான்.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...