Tuesday, July 18, 2023

WHITE FLOWERED BLACK MANGROVE THIPPARANTHAI 260.வெள்ளைப் பூ திப்பரந்தை கருப்பு அலையாத்தி

வெள்ளைப் பூ திப்பரந்தை 

திப்பரந்தை
கருப்பு அலையாத்தி


வெள்ளைப் பூ பூக்கும் திப்பரந்தை ஒரு கருப்பு அலையாத்தி மரம், நடுத்தரமான மரம், கட்டுமானப் பணிகள், படகுகள்  கட்டுமரங்கள் செய்தல், கரிகள் தயாரித்தல், விறகாக பயன்படுத்துதல், போன்றவற்றிற்கு அற்புதமான மரம், மருத்துவப்பண்புகள் கொண்ட, சுற்றுச்சூழலிலிருந்து அதிக கார்பனை நீக்கி தன் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் மரம், தோலில் ஏற்படும் அரிப்பு, அக்கி என்னும் தீநுண்மநோய் போன்றவற்றை குணப்படுத்த  சாறு தரும் மரம்..

பொதுப் பெயர்கள்: பிளாக் மாங்குரோவ், ஒயிட் பிளவர் மேங்ரோவ் (BLACK MANGROVE, WHITE FLOWER MANGROVE)

தாவரவியல் பெயர்: லுமினிட்செரா ரெஸிமோசா (LUMINITZERA RACEMOSA)

தாவரக் குடும்பம்:காம்பிரட்டேசி (COMBRETACEAE)

மொழிப் பெயர்கள்:

தமிழ் திப்பரந்தை (THIPPARANTHAI)

பெங்காலி: கிர்ப்பா (KIRPA)

கொங்கணி:ரோகம்டெல் (KAROKAMDEL)

கன்னடா: தண்டாரா (TANDARA)

மலையாளம்: கட்டகண்டல் (KATAKANDAL)

மராத்தி: கிர்ப்பா (KIRPA)

ஒரியா: டண்டாரா (TANDARA)

தெலுங்கு: கடிவி (KADIVI)

திப்பரந்தை கருப்பு அலையாத்தி மரம். அதிகபட்சமாக 10 மீட்டர் உயரம் வரை வளரும். நடுத்தரமான மரம். பெரும்பாலான திப்பரந்தை மரங்களில் தரைக்கு மேல் மூச்சு வேர்கள் வளர்வதில்லை. ஈரம் அதிகமான இடங்களில் மட்டும் அரிதாக மூச்சு வேர்கள் வளர்கின்றன.

மரத்தின் பட்டைகள் சாம்பல் நிறமாக இருக்கும். முதிர்ந்த பட்டைகளில் வெடிப்புகள் நீளவாக்கில் தோன்றுகின்றன. காம்புகள் இல்லாத இதன் இலைகள் சிறியவை. தடிமனாக, முட்டை வடிவமாக, இலை ஓரங்கள் அலை அலையாக இருக்கும்.

பூக்கள் சிறியவை, வெள்ளை நிறமானவை, பழங்கள் குடுவை வடிவத்தில் மஞ்சள் நிறமாக, மஞ்சள் நிறம் கலந்த பசுமை நிறமாக இருக்கும்.

வீடுகள், இதர கட்டுமானப் பணிகள், படகுகள், மற்றும் கட்டுமரங்கள் செய்தல், கரிகள் தயாரித்தல், விறகாக பயன்படுத்துதல், போன்றவற்றிற்கு அற்புதமான மரம்.

சிலவகை பூக்களில் ஒரு சொட்டு தேன்கூட இருக்காது, சில வகைகளில் குறைவாக இருக்கும், சிலவற்றில் அபரிதமா இருக்கும், இதில் மூன்றாவது வகையைச் சேர்ந்தது நமது கருப்பு அலையாத்தி, இதன் பூக்களில் ஏகப்பட்ட தேன் சுரக்கும்.

தோலில் ஏற்படும் அரிப்பு,க்கி என்னும் தீநுண்மநோய், சொரி சிரங்குகள், வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்த இதன் சாற்றை நெடுங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

பரவி இருக்கும் இடங்கள்

கேரளாவில் ஆலப்புழா, கொல்லம், கண்ணூர், மற்றும் திருவனந்தபுரம். தமிழ்நாட்டில் பிச்சாவரம், மற்றும் முத்துப்பேட்டை.

ஆப்பிரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் இந்து பசுபிக் பகுதிகளில் இவை பரவியுள்ளன. அதாவது மொசாம்பிக் தான்சானியா, மாலத்தீவுகள், இந்தியா, ஸ்ரீலங்கா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், சைனா, டைவான், கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜாவா மற்றும்  நியூகினியா.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...