Thursday, July 13, 2023

VARIEGATED MADAGASKAR ALMOND 250. குடைமரம் என்னும் மடகாஸ்கர் பாதாம்.

 

குடைமரம் என்னும் 
  மடகாஸ்கர் பாதாம். 
 

பொதுப்பெயர் வேரிகேட்டட் மடகாஸ்கர் அல்மேண்ட், அம்பரெல்லா ட்ரீ (VARIEGATED MADAGASCAR ALMOND, UMBRELLA TREE)

தாவரவியல் பெயர் டெர்மினேலியா மண்டலி (TERMINALIA  MANTALY)

தாயகம்: மடகாஸ்கர், அந்தமான் தீவுகள், கிழக்கு இந்தியா, மற்றும் மலாய் பெனின்சுலா.

தாவர குடும்பம்: காம்பிரட்டேசி (COMBRETACEAE)

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டிலேயே பல இடங்களில் அழகு மரங்களாக தற்போது வளர்கிறார்கள். இது வேகமாக வளரும். பசுமை மாறாமரம். சாலைகளின் ஓரத்தில் அழகு மரமாக வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றது இந்த மரம்.

மடகாஸ்கரின் இந்த குடை மரத்தை வனமீட்புப் பணிகளில் பயன்படுத்துகிறார்கள்.

மரத்தின் பட்டை, கட்டை ஆகியவற்றை வயிற்றுக் கடுப்பினை சரி செய்ய மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்

ஆப்பிரிக்காவின் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இந்த மரத்தை பயன்படுத்துகிறார்கள்.

இதன் பட்டைகளில் இருக்கும் டானின் சத்தினைப் பயன்படுத்தி கருப்பு நிற சாயம் தயாரிக்கிறார்கள். இதன் விதை எண்ணையை சமையலுக்கு பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை மருத்துவத்திற்கும் பயன்படுத்தலாம்.

 

கட்டிட கட்டுமானத்தில் முதல் தலம் இரண்டாம் தலம் என்பது போல இதன் கிளைகள் அழகாய் அமைந்திருக்கும்.நீங்கள் நேரடியாக அந்த மரத்தை பார்த்தால் தான் நான் சொல்வது புரியும்.

வளரியல்பு

சிறிய மற்றும் நடுத்தரமான மரம். 10 முதல் 20 மீட்டர் உயரம் வளரும். இலைகள் இரண்டரை சென்டிமீட்டர் நீளமும் ஒரு சென்டிமீட்டர் அகலமாகவும் இருக்கும். முழுமையான சூரிய ஒளி வேண்டும். வளர்ந்த மரம் வளர்ச்சியை தாங்கும். அதிக நீர் வேண்டாம்..

ஆஸ்துமா, தொண்டைப்புண், வாந்தி, விக்கல், வயிற்றுப்போக்கு, சீதபேதி, ரத்தமூலம், குடற்புண், இதயம், மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களையும் குணப்படுத்த தேவையான மருந்துகளை செய்ய காலம் காலமாக இதனை பயன்படுத்துகிறார்கள்.

பூக்கள் மற்றும் பழங்கள்: 

இருபால் பூக்கள், ஆண் பெண் பூக்கள் தனித்தனி. நல்ல பழதசை கொண்ட பழங்கள்.

இந்த மரம் தொடர்பாக வேறு சந்தேகங்கள் ஏதும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி, வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...