Friday, July 21, 2023

UMBU FRUIT TREE OF BRAZIL WHITE DESERT 267.பிரேசிலின் வெண்ணிற பாலைவன பழமரம் உம்பு

பாலைவன பழமரம் உம்பு



தாவரவியல் பெயர்: ஸ்பாண்டியஸ் டியூபரோசா (SPONDIAS TUBEROSA)

நான் பிரேசில் போனபோது இந்த ம்பு மரத்தை நேரடியாக பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு நான் நபார்டு வங்கிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் தான் அந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் குறிப்பாக பிரேசிலின் வடகிழக்கு பகுதியான பாகியா பேரணாம்புகோ ஆகிய பகுதிகளில் தான் இந்த மரத்தை நான் பார்க்க முடிந்தது. இந்த பகுதியில் இது ரொம்பவும் ஆச்சரியமான  ஒரு மரம். காரணம் ஒட்டகங்களைப்போல, இந்த மரம் வறட்சியான காலத்தில் பயன்படுத்திக்கொள்ள, தனது வேர்களில் அதிகபட்சமாக 3000 லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கின்றன.

பிரேசிலின் வெள்ளைப்பாலைவனம் (WHITE DESERT)என்று சொல்லும்படியான வரட்சியான வடகிழக்கு பகுதியில் இந்த ம்பு பமரத்தைப் பார்த்தேன்.

காடுகளில் தானாக வளர்ந்து இருக்கும் மரம். இது மான்களுக்கு ரொம்பவும் பிடித்தமான மரம் என்று சொன்னார்கள். வெப்பம் அதிகமான கோடைக் காலங்களில் மான்கள் உட்பட பல விலங்குகள் மற்றும் பிராணிகள் இதன் நிழலில் வந்து ஒதுங்கும் என்று சொன்னார்கள். ஆச்சரியமாக இருந்தது, காரணம் கோடையில் அவ்வளவு வெப்பமாக இருக்குமாம்.

செரட்டாவோ, கேட்டிங்கா, ஒயிட் ஃபாரஸ்ட், (SERATAO, CAATTINGA, , WHITE FOREST) என்று சொல்லும்படியான வறண்ட பகுதிகள் என்று அர்த்தம்.  பல வெண்ணிற காடுகளைக் கொண்டதுதான் கேட்டிங்கா என்பது, பல கேட்டிங்காக்களை உள்ளடக்கியதுதான் செரட்டாவோ என்பது. செரட்டாவோ என்பது பிரேசிலின்  வட கிழக்குப் பகுதி என்பது, பாகியா பேரணம்புகொ உட்பட பல பகுதிகளை உள்ளடக்கியதுதான் இது.

வெண்ணிறக்காடுகள் என்பது அங்கிருக்கும் முள் காடுகளைக் குறிக்கும். அந்த முள் காடுகளின் முக்கியமான பிரஜை தான் இந்த ம்பு மரம்.

வறண்ட பாலைவனத்தில் இந்த ஊம்பு படங்கள் இருந்து கிராமப்புற பெண்கள் ஜாம் ஜெல்லி என்று தயாரிக்கிறார்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பழச்சாற்றை பள்ளிக்கூடங்களில் மதிய உணவுடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கட்டிங்கா என்றும் செரட்டோவா என்றும் அழைக்கும் இந்த பாலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கியமான உணவு என்பது மக்காச்சோளம், மொச்சை, மற்றும் ஆட்டிறைச்சி. இப்போது அத்துடன் உம்பு பழமும் சேர்ந்து உள்ளது. இந்த பழங்கள் நாட்டு லந்தை பழங்களை விட கொஞ்சம் பெரியதாக இருக்கின்றன. இந்தப் பழங்கள் சில இனிப்பாகவும், சில  புளிப்பாகவும், சில  இரண்டும் கலந்த சுவையாகவும்  உள்ள.

திரும்பிய பக்கம் எல்லாம் பழச்சாறுகள்

இந்த பகுதியில் உள்ள நகரங்களில் மட்டுமல்ல, பிசிலின் எந்த பகுதிக்குப் போனாலும் சின்ன ஹோட்டல், பெரிய ஹோட்டல், ஸ்டார் ஹோட்டல், நம்ம ஊர் டீக்கடை மாதிரி தட்டி விலாஸ் ஹோட்டலில் கூட ஐந்தாறு வகையான பழச்சாறுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக இருப்பவை மூன்று அவற்றில் ஒன்று இந்த ம்பு ஜூஸ், ரண்டாவது  புளி ஜூஸ், மூன்றாவது மாம்பழ ஜூஸ்.. பிரேசிலில் மாம்பழத்தை போர்ச்சுக்கீசிய மொழியிலும் மாங்கா என்றுதான் சொல்லுகிறார்கள், கேட்டால் உங்கள் ஊரில் இருந்து தானே எங்களுக்கு வந்திருக்கிறது மாங்கா’ என்கிறார்கள்

இந்த ம்பு பத்தின் தாவரவியல் பெயர், ஸ்பாண்டியஸ் ட்யூபரோசா,  அனாகார்டியேசி (ANACARDIACEAE)என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது..மா மற்றும் முந்திரி ஆகியவை அனார்காடியேசி குடும்பத்தை சேர்ந்தவைதான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மருத்துவப் பண்புகள்

சர்க்கரை நோய் உட்பட, செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு, மாதவிடாய் தொடர்பான உடல் உபாதைகள், ஆகியவற்றை குணப்படுத்த ம்பு பத்தில் இருந்து பாரம்பரிய மருந்துகளை தயார் செய்து பயன்படுத்துகிறார்கள்.

இந்த பகுதியில் யாரும் இந்த பழ மரங்களை வளர்ப்பதில்லை. ஆனால் இப்பகுதியில் உள்ள முட்காடுகளில் இயற்கையாக பரவியுள்ளன இப்பகுதியில் உள்ள பெண்கள் சங்கங்கள் இந்த பழங்களை சேகரித்து அவற்றை அருகில் உள்ள நகரச் சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள்.

இந்த மகளிர் குழுக்களுக்கு இப்பகுதியில் உள்ள கூட்டுறவுத்துறை உதவியாக உள்ளது.

அந்த அரசுத் துறையின் உதவியோடு இப்பத்தில் இருந்து பழச்சாறு தயாரிக்கும், ஒரு சிறிய பேக்டரி ஒன்றினை அமைத்திருக்கிறார்கள். அந்த அந்த சிறிய தொழிற்சாலைக்கு நாங்களும் சென்றிருந்தோம். அந்த மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களுடனும் நாங்கள் உரையாடினோம்.

வளரியல்புகள்

இந்த மரங்கள் மிகவும் சிறிய மரங்களாக இருக்கின்றன. அதிகபட்ச உயரமாக 6 மீட்டர் வரை வளரும். மரத்தின் தலைப்பகுதி பரட்டைத்தலை மாதிரி அகலமாக பந்து விரிந்து வளர்கின்றன. இந்த வனாந்திரத்தில் உள்ள  மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 300 கிலோ பழங்களை தருகின்றன என்றால் நம்ப முடியவில்லை. அதுவும் இந்த 300 கிலோவை ஒரே அறுவடையாக செய்கிறார்களாம். இந்த மரங்களின் முக்கியமான அம்சமே இதன் வேர்கள்தான்.  

வடகிழக்கு பிரேசிலில் வெள்ளை பாலைவனம் என்ற பகுதியில் கிடைக்கும் மழை மிகவும் குறைவு. அதனால் ஒருமரம் தனது வேர்களில் கிட்டத்தட்ட 3000 லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்கின்றன.

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சமயங்களில் வேர்த்தொட்டி தண்ணீரை பயன்படுத்திக் கொள்வதாக சொல்லுகிறார்கள்.

இதன் வேர்கள் கிழங்குகள் போல அமைந்திருக்குமாம் இந்த கிழங்குகளில் தேவையான தண்ணீரை இந்த மரம் சேமித்து வைத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு கிழங்கிலும் அதனுடைய அளவுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன.

அந்த மரங்களின் வயது, அதனுடைய வளர்ச்சி,  வேர்களின் அமைப்பு இதைப் பொறுத்து அதை சேமிக்கும் தண்ணீரின் அளவு வேறுபடும்.

இந்த ம்பு பழங்கள் சாதாரணமாக எலுமிச்சம்பழர்களை பழங்களைப் போல தெரிகிறது அளவு கூட ஏறத்தாழ அப்படித்தான் இருக்கின்றன.பார்க்க மஞ்சள் நிறமாக அல்லது பச்சை நிறமாக அல்லது இரண்டும் கலந்த நிறமாக சில சமயங்களில் சிகப்பு நிறமாக கூட இந்த பழங்கள் இருக்கின்றன.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...