Sunday, July 30, 2023

PANDANUS FLOWERING TREE CUM HERB 281.இந்திய ஆயுர்வேத பூமரம் தாழம்பூ

 

இந்திய ஆயுர்வேத  பூமரம் 
தாழம்பூ



தாவரவியல் பெயர்: பண்டானஸ் ஓடுரொட்டிசிமஸ் (PANDANUS ODOROTISSIMUS)

பொதுப் பெயர்: கேவ்டா, ஃப்ராக்ரண்ட் ஸ்குரு பைன், அம்ப்ரெல்லா ட்ரீ, ஸ்குரூ பைன், ஸ்குரூ ட்ரீ (KEWDA, FRAGRANT SCREW PINE, UMBRELLA TREE, SCREW PINE, SCREW TREE)

தாழம்பூ, பெண்கள் தலையில் வைக்கும் பூக்களின் முக்கியமான பூ, தாழம்பூக்களில் இருந்து வாசனை பொருட்களை தயார் செய்கிறார்கள். இதன் வேர்களில், உறுதியான கயிறுகளை தயார் செய்கிறார்கள். கூடைகள் செய்கிறார்கள்.  பழங்களை சமைத்தும் சமைக்காமலும் சாப்பிடுகிறார்கள், இளமையைப் பாதுகாக்கும் மூலிகையாகவும் பயன்படுத்துகிறார்கள். 

தாழம்பூ மரம்பற்றிய அறிவியல் ரீதியான சில செய்திகளைப் பார்க்கலாம்.

இதன் தாயகம், தென்னிந்தியா, பர்மா, பிலிப்பைன்ஸ், தெற்காசிய நாடுகள், பாலினேசியா, மற்றும் ஆஸ்திரேலியா.

பலமொழிப் பெயர்கள்: 

அசாமிஸ்: கேட்டக்கி (KETAKI) 

பெங்காலி: கேட்டக்கி  (KETAKI) 

குஜராத்தி:கேட்டக் (KETAK)  

இந்தி: காகன்துல் (GAGUN DHUL) 

ன்னடா: கேடகி (KEDAGE) 

கொங்கணி: பொன்னாங் (BONNANG) 

மலையாளம்: கெய்னாரி (KAINAARI)  

மணிப்புரிகேட்டக்கி (KETAKI)  

மராத்தி:கேகட் (KEGAD)  

ஒரியா:கியா (KIA)  

சமஸ்கிருதம்: ஹனில்ஹா (HANILHA) 

தமிழ் : தாழை (THAZHAI)  

தெலுங்கு: மோஹாலி (MOHALI) 

உருது: ஜம்போலா (JAMBOLA)

தாவரக் குடும்பம்: ண்டனேசி (PANDANACEAE)

தமிழ்நாட்டில் பெண்கள் தலையில் வைக்கும் பூக்களின் முக்கியமான பூ தாழம்பூ. கிராமங்களில் பெரும்பாலும் மல்லிகை, முல்லை, துலுக்க சாமந்தி, மற்றும் தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ளுகிறார்கள். தாழம்பூவை தலையில் வைத்துக்கொண்டு, கொஞ்சம் தூரத்தில் போனால் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியும். அவ்வளவு வாசம் உள்ள பூ. தாழம்பூ தலையில் வைத்தால் பேன் பிடிக்கும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆனால் தாழம்பூ பற்றிய ஒரு பழமொழி ரொம்பவும் பிரபலம், ஒய்யாரக் கொண்டயில் தாழம்பூவாம் அதன் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.

இன்னொன்று அந்த காலத்தில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதில் முக்கியமான அம்சம் தாழம்பூ வைத்து சடை தைப்பது என்பது.

வளரியல்புகள்

தாழம்பூ மரம், சிறிய கிளைகளை உடைய மரம், பனைமரம் மாதிரி இதில் ஆண்மரம் பெண் மரம் தனித்தனியாக இருக்கும். இதன் அடிமரம் செங்குத்தாக இருக்காது, வளைந்தும் நெளிந்தும் (FLEXUOUS TRUNK) இருக்கும் அத்துடன் அடிமர வேர்களுடன் (BRACE ROOTS)இருக்கும்.

மக்காச்சோளம் போன்ற பயிர்களின் தண்டுகளின் கணுக்களிலும் இது போன்ற வேர்களைப் பார்க்கலாம்.

தாழம்பூ மரங்கள் சிறு மரங்கள், சுமார் 4 மீட்டர் உயரம் வரை வளரும். தாழம்பூ மரங்கள் பெரும்பாலும் மழை அதிகமாக பெய்யும் இடங்களில் வளரும். அல்லது ஆற்றங்கரைகளில் மற்றும் ஓடைக் கரைகளில் வளரும்.

கிளை நுனிகளில் கொத்தாக வளரும் இலைகளின் இருபுறமும் முட்கள் இருக்கும். இவற்றின் லைகள் உருவிய வாள் போல, பசுமையும் நீலமும் கலந்த நிறத்தில் இருக்கும். இதன் இலைகளில் கூட வாசம் வீசும். இலைகள் 1.5 அடி முதல் 2.5  அடி நீளம் உள்ளதாக இருக்கும்.

மிகுந்த வாசமுள்ள இதன் பூக்கள் கோடை காலத்தில் பூக்கும்.

தாழம்பூ மரங்களின் அடியில் முளைக்கும் கன்றுகளை எடுத்து  நடவு செய்யலாம் விதைகளை விதைத்தும் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.

தாழம்பூக்களில் இருந்து வாசனை பொருட்களை தயார் செய்கிறார்கள். அடிமர கணுக்களில் தோன்றும் வேர்கள் உறுதியானவை, அதிலிருந்து எடுக்கும் நார்களில், உறுதியான கயிறுகளை தயார் செய்கிறார்கள். கூடைகள் செய்கிறார்கள். தாழம்பூ பழங்களை சமைத்தும் சமைக்காமலும் சாப்பிடுகிறார்கள்.

முகத்தில் சுருக்கம் வருகிறது, வயதான தோற்றம் வருகிறது, என்று நினைப்பவர்கள், தாழம்பூ இலைகளை இடித்து கூழாக்கி அத்துடன் சிறிதளவு ஆலிவ் ண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி இமையான தோற்றம் ரும்.

அதுபோல அடிக்கடி மன இறுக்கங்களுக்கு ஆளாகி தூக்கம் வராமல் அனுதினமும் அவதிப் படுபவர்கள்,  தாழம்பூ இலைகளின் சாற்றில் தேனீர் தயாரித்து குடித்தால் மன இறுக்கம் நீங்கும், துக்கம் போய் தூக்கம் உங்கள் கண்களைத் தேடி வரும். நாளைக்கே சோதித்துப் பாருங்கள்.

பல நோய்களை குணப்படுத்தும் சக்தி இருப்பதால் இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் புற்றுநோய்,, தொழுநோய், ஹெப்படைட்டிஸ், அம்மை, குடற்புண், சிபிலிஸ், தலைவலி, மூட்டுவலி, ஜலதோஷம், சொறிசிரங்கு, போன்றவற்றை குணப்படுத்துவதோடு ஆண்மைப் பெருக்கியாகவும்,  செயல்படுகிறது. இதற்கான தாவர ரசாயனங்கள் இதில் அடங்கியுள்ளன.

தாழம்பு இலைகளை பல நாடுகளில் சமையலில் பயன்படுத்துகிறார்கள் அவை இந்தோனேசியா மலேசியா சிங்கப்பூர் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம்.

தாழம்பூ இலைகளுடன் பார்லி சேர்த்து தேனீர் தயாரித்து அருந்து பழக்கம் பல நாடுகளில் உள்ளது கோடை பருவத்தில் நம்மை உற்சாகப்படுத்தும் தேநீர் இது என்கிறார்கள்.

த்துடன் இஞ்சி மற்றும் லெமன்கிராஸ் சேர்ப்பது  அதன் சுவையைக் கூட்டும் சுவையின் சூட்சும்ம் என்கிறார்கள்.

பிரியாணியில் சேர்க்க 'டீவ்ரா வாட்டர்'

ரோஜா பூக்களைக் கொண்டு தயாரிப்பது ரோஸ் வாட்டர், அதுபோல தாழம்பூவைப் பயன்படுத்தி பயன்படுத்துவது டீவ்ரா வாட்டர் (DEWRA WATER). பிரியாணி தயாரிக்கும்போது இந்த டீவ்ராா சேர்ப்பதனால் அதில் தனியான சுவையும் மணமும் சேரும் என்கிறார்கள்.

பெண்கள் தலையில் சூடும் பூக்களைத் தரும் பூமரம்  புற்று நோயிலிருந்து கூட   நம்மை காப்பாற்றுகிறது  என்று நாம் தெரிந்து கொண்டோம். புதிய செய்திகள் ஏதும் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள், நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR). 

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...