Sunday, July 16, 2023

NARIKANDAL A BLACK MANGROVE TREE 254. நரி கண்டல் எனும் கருப்பு அலையாத்தி மரம்

 

நரி கண்டல் எனும் கருப்பு அலையாத்தி மரம்  

குட்டிச்செடி புராப்பகியூல்

இந்தியாவில் மொத்தம் 4900 சதுர கிலோமீட்டர் பரப்பில் அலையாத்தி காடுகள் இருக்கின்றன. இதில் 66% மேற்கு வங்காளம் மற்றும் குஜராத்தில் இருப்பதாக சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டையிலும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் கிராமத்திலும் உள்ள அலையாத்தி காடுகளும் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாட்டில் இருக்கும் பத்துப்பதினைந்து  அலையாத்தி மரங்களில் நரி கண்டல் மரம் பற்றி இன்று நாம் பார்க்க போகிறோம். கண்டல், அலையாத்தி, மேங்குரோவ் இந்த மூன்றும் ஒன்றுதான்.

பொதுப் பெயர்கள்:பிளாக் மேங்க்ரோவ், ரிவர் மேங்குரோவ், கோட்ஸ் ஹார்ன் மேங்க்ரோவ், காஸ்லி (BLACK MANGROVE, RIVER MANGROVE,GOATS HORN MANGROVE OR KHASLI.)

தாவரவியல் பெயர்: ஏஜிசெராஸ் கார்னிகுலேட்டம் (AEGICEROS CORNICULATUM) 

தாவரக்குடும்பம்: பிரைமுலேசியே (PRIMULACEAE)

பிறமொழி பெயர்கள்:

தமிழ்: நரிக்கண்டல் (NARIKANDAL)

தெலுங்கு: குக்கிலம்  (GUGGILAM)  

கன்னடா: கஞ்சலா  (KANJALA)

மலையாளம்; பூக்கண்டல்  (PUKANDAL)  

பெங்காலி; காஜலா  (KAJALA)

வளரியல்புகள்:

பெருஞ்செடி அல்லது குறு மரமாக வளரும், அதிகபட்சமாக 23 அடி உயரம் வரை மரமாக வளரும்.

இலைகள் 30 முதல் 100 மில்லி மீட்டர் நீளமும், 15 முதல் 50 மில்லி மீட்டர் அகலமாகவும், தோல் போல தடிமனாகவும், தொட்டு பார்க்க மெதுவாகவும் இருக்கும்.

பூக்கள் சிறியதாக, வெண்மையாக, வாசம் உடையதாக, பத்து முதல் 30 பூக்களை கொண்ட கொத்தாக இருக்கும்.

பழங்கள் வளர்ந்து உருண்டையாக,  நீளவாக்கில் ஆட்டுக்கொம்புகள் போல வளைந்து கூர்மையாக, இளம் பசுமை முதல் ஊதா நிறம் வரை, 25 முதல் 75 மில்லி மீட்டர் நீளமாக இருக்கும்.

இலைகளின் மீது சிறுசிறு சுரப்பிகள் (GLANDS) இருக்கும். அந்த சுரப்பிகள் மூலம் மிகையான உப்புத் துகள்களை அது வெளியேற்றும். உப்பு நீரில் உவர் நிலத்தில் அது வளர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பூக்கள் சிறியவை வெண்மையாக அழுகிய வாழைப்பழ வாசனை வீசும். பிராணிகள் குட்டி போடுவது போல அலையாத்தி மரங்கள் நேரடியாக இளம் கன்றுகளை உற்பத்தி செய்யும். இதனை ஆங்கிலத்தில் பிராப்பக்யூல்ஸ் (PROPAGULES)என்று சொல்லுகிறார்கள். இவை நீளமான தடிமனான பென்சில் மாதிரி இருக்கும். இவை லேசாக வளைந்து இருக்கும்.

பயன்கள்

இதனை வலி நிவாரணியாகவும் சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும், இதன் இலை வேர் பட்டை ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

இதில் உள்ள தாவர ரசாயனங்கள் இப்படிப்பட்ட மருத்துவ பண்புகளை இந்த மரத்திற்கு அளித்துள்ளது.

இதன் இலைகளை சமைத்து சாப்பிடலாம், சமைக்காமலும் சாப்பிடலாம். மொலுக்காஸ் பகுதிகளில் இந்த இதனை உணவு பண்டமாக உபயோகப்படுத்துகிறார்கள்.

இதன் கட்டைகளை விறகாக பயன்படுத்துகிறார்கள். இதன் பூக்கள் வாசம் உள்ளவை. சில நாடுகளில் பெண்கள் இதனை கூந்தலில் வைத்துக் கொள்கிறார்கள். இதன் விதைகள் மற்றும் பட்டைகளில் சப்போனின் (SAPPONIN) என்னும் தாவர ரசாயனம் இருக்கிறது. அதனால் இதனை மீன்பிடி நஞ்சாக பயன்படுத்துகிறார்கள். பழங்குடி மக்கள் ஒரு காலத்தில் இதனை மீன்பிடிக்க உலகம் முழுக்க பயன்படுத்தி வந்தார்கள்.

பரவி இருக்கும் இடங்கள்

இந்தியா, தெற்கு சீனா, நியூகினியா மற்றும் ஆஸ்திரேலியா.தமிழ்நாட்டில் உள்ள அலையாத்தி மரங்களின் சில வித்தியாசமான பெயர்கள் கழுதைமுள்ளி, நரிக்கண்டல், வெண்கண்டல் பன்னிகுத்தி, கருங்கண்டல், தில்லை,  தி ப் பி த் தை, நெட்டை, சுரபுன்னை, சோமுந்திரி  ஆகியவை. நரிக்கண்டல்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...