Tuesday, July 4, 2023

JOSEPH LAUREL ENDANGERED TREE HERB OF WESTERN GHATS 227.அருகிவரும் மூலிகை மரம் ஜோசப் லாரல்

 

அருகிவரும் மூலிகை மரம்
ஜோசப் லாரல்


1.தாவரவியல் பெயர்: லிட்சியா ஸ்டாக்சி (LITSEA STOCKSII )

தாவரக் குடும்பம்: லாரேசி (LAURACEAE)

பசுமை மாறாத மேற்கு தொடர்ச்சி மலைக்குரிய நடுத்தரமான மறைந்து வரும் அல்லது அழிந்து வரும் மரங்கள் (ENDANGERED)என அறிவிக்கப்பட்ட மரங்களில் ஒன்று இது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நாமக்கல், நீலகிரி ஆகிய இடங்களிலும் கர்நாடகாவில் சிக்மகளூர், ஷிமோகா, ஆகிய இடங்களிலும் கேரளாவில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம், விநாடு ஆகிய பகுதிகளிலும் இந்த மரங்களைப் பார்க்கலாம்.

இந்த லாரேசி தாவரக் குடும்பத்தில் சுமார் 400 தாவர வகைகள் இருக்கின்றன. இதில் இந்தியாவில் இருப்பவை மட்டும் 45 இனங்கள். இதில் 40 வகைகள் தீபகற்ப இந்தியாவில் மறைந்து வரும் இனங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 12 இனங்கள் வடகிழக்கு இந்தியாவிலும் 11 இனங்கள் கர்நாடகாவிலும் காணப்படுகின்றன.

இந்த ஜோசப் லாரல் மரத்தின் இலைகள் மற்றும் பட்டைகள் ஆகியவற்றில் மருந்துகள் தயாரிக்க உபயோகப்படுத்துகிறார்கள்.

சிட்ரால், லாரிக்ஆசிட், ஒலிக்ஆசிட், போன்ற தாவர எண்ணெய்கள் (ESSENTIAL OILS)இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் இருந்து வாசனை திரவியங்கள், உணவு மணம் ஊட்டிகள் மற்றும் பூச்சி மருந்துகள் வியாபார ரீதியில் தயாரிக்கிறார்கள்.

இந்த லாரேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனங்கள் பற்றிய ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகின்றன. அந்த ஆய்வுகளை முடுக்கிவிடுவதன் மூலம் இந்த மர வகைகளை நல்ல முறையில் நாம் பயன்படுத்த முடியும்.

அது மட்டுமல்ல இயற்கை ஆர்வலர்கள் மறைந்து வரும் மர வகைகளை தேடிப்பிடித்து நட்டு அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பசுமை மாறாத இந்த மரம் நல்ல உயரமாக வளரும். சுமார் 100 அடி உயரம் கூட வளரும் . அதிகம் இதனை மரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். அழகான இதன் இலைகளுக்காகவே இவற்றை அழகு மரங்களாகவும் பூங்காக்களிலும் சாலைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த மரங்கள் இந்தியா தெற்கு சைனா மியான்மர் தாய்லாந்து வியட்நாம் மலேசியா இந்தோனேஷியா ஆகிய தெற்கு ஆசிய நாடுகளில் அதிகம் பரவியுள்ளன.

மலைச்சரிவுகளில் ஏற்படும் மண் மற்றும் நிலச்சரிவுகளை தடுக்கவும், குறைக்கவும், பாதுகாக்கவும், பராமரிக்கவும், நலிவுற்ற காடுகளை வலுப்படுத்தவும் இந்த மரங்களை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் இந்த மரங்களை பாலங்கள் கட்ட,  கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கான சட்டங்கள் செய்ய, பொதுவான மரச்சாமான்கள் மற்றும் தேயிலை பெட்டிகள் செய்ய, மேதை நாற்காலி வகையான சாமான்கள், ஒட்டு பலகைகள், வீனீர்கள் செய்ய என பரவலான மர வேலைகளுக்கும் உபயோகப் படுத்துகிறார்கள்.

இதன் இலைகள் பார்க்க பாப்ளார் (POPLAR) இலைகளைப் போல நீண்ட இலை காம்புகளுடன் இருக்கும்.மென்மையாக வீசும் காற்றில் கூட இலைகள் பல படக்கும்.

மாடுகளும் மான்களும் நிறைந்த இடத்தில் இந்த மரங்களை போதிய பாதுகாப்பின்றி வளர்க்க முடியாது. இதனை கால்நடைகளுக்கான நல்ல தீவன  மரமாக வளர்க்கலாம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...