Sunday, July 30, 2023

HONEY LOCUST TREE OF FODDER & MEDICINE 282.தேன்வெட்டுக்கிளி வட அமெரிக்க தீவன மருந்து மரம்

 

தேன்வெட்டுக்கிளி
தீவன மருந்து மரம்
 


இது ஒரு முள் மரம். இதற்கு ஏன் அப்படி ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் தேனுக்கும் வெட்டு கிளிக்கும் இந்த மரத்திற்கும் என்ன சம்பந்தம் இதன் காய் தசையிலிருந்து புளிக்க வைத்து பீர் பிராந்தி போன்ற மதுபானங்களை தயாரிக்கிறார்கள். எப்படி ? தொடர்ந்து படியுங்கள்.

தாவரவியல் பெயர்: கிளெடிட்சியா டிரையாகேந்தோஸ் (GLEDITSEA TRIACANTHOS)

தாவரக்குடும்பம்: ஃபேபேசி (FABACEAE)

பொதுப்பெயர்கள்: ஹனி லோகஸ்ட், தார்னி லோகஸ்ட், தார்னி ஹனி லோகஸ்ட் (HONEY LOCUST, THORNY LOCUST, THORNY HONEY LOCUST)  

தேன் வெட்டுக்கிளி மரம், வட அமெரிக்காவிற்கு சொந்தமான மரம்,  இது ஒரு முள் மரம், உயரமாக வளரும் மரம், கிட்டத்தட்ட நூறு முதல் 120 ஆண்டுகள் வயதுடைய மரம். 

இதன் நெற்றுக்கள் கால்நடைகளுக்கு தீவனம் ஆகிறது, இதன் காய்கள் தேன் மாதிரி இனிப்பாக இருக்கும், இதனை காய்கறிகளாக பயன்படுத்துகிறார்கள், இதன் காய் தசையிலிருந்து புளிக்க வைத்து பீர் பிராந்தி போன்ற மதுபானங்களை தயாரிக்கிறார்கள். 

இதன் பயிர்ப் பாகங்களை  மருத்துவ சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்துகிறார்கள் அமெரிக்க பழங்குடி மக்கள். உறுதியான வலுவான இதன் மரங்கள் மரச் சாமான்கள் செய்யப் பயன்படுகின்றன.

தேன்வெட்டுக்கிளிமரம் இலை உதிர்க்கும் முள்ளுடைய மரம். ஈரம்மிக்க ஆற்றுப்படுகைகளில் வளரும். ஆயினும் பல்வேறு மண் வகைகளில் பல நாடுகளில் வளரும், பல உள்ளூர் மரங்களை வளரவிடாமல் உபத்திரம் செய்யும் மரமும் கூட.

வளர் இயல்புகள்

ரொம்ப உயரமாக வளரும் மரம், கிட்டத்தட்ட 100 அடி கூட நெடுநெடுவென வளரும், வேகமாக வளரும் மரம், அதிகபட்சமாக 120 ஆண்டுகள் வாழும். இலைகள் சிறியவை பளிச்சென்ற பச்சை நிறமாக இருக்கும்.

இந்த தேன் வெட்டுக்கிளி மரங்களில் ஆண் மரங்கள் தனியாக இருக்கும், பெண் மரங்கள் தனியாக இருக்கும், ஆண் பெண் ஆகிய இருபால் பூக்களையும் கொண்டுள்ள மரங்களும் தனியாக இருக்கும்.

கால்நடைகள் சாப்பிடும்

இதன் நெற்றுக்கள் ஆறு முதல் எட்டு அங்குள்ள நீளமாக இருக்கும். இதன் நெற்றுக்களை கால்நடைகள் சாப்பிட்டுவிட்டு இதன் சாணத்தின் மூலம் விதைகளை பரப்புகின்றன. சாணத்தின் மூலம் பரவும் விதைகள் பிரச்சனை இன்றி வேகமாக முளைக்கின்றன.

நீளமாமுட்கள்

தேன் வெட்டுக்கிளி மரங்களில் ஏகப்பட்ட முட்கள் இருக்கும். இந்த முட்கள் நீளமாக இருக்கும். இவை எட்டு அங்குலம் கூட நீளமாக இருக்கும். இந்த முட்கள் தனியாகவும் இருக்கும், முட்கள் கொத்துக்கொத்தாகவும் இருக்கும்.

பழங்காலத்தில் யானை மாதிரியான, மிகப்பெரிய உயிரினங்கள் இந்த மரத்தினை மேயாமல் இருப்பதற்காகத் தான் இந்த மரங்கள் இப்படிப்பட்ட முட்களுடன் இருந்ததாக சொல்லுகிறார்கள்.

பலவிதமான மர சாமான்கள் செய்ய இம்மரங்கள் பயன்படுகின்றன. இதன் முட்கள் நீளமாகவும் உறுதியாகவும் இருப்பதால் இதனை ம ஆணிகளாக பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக கப்பல் கட்ட இதனை ஆணிகளாகப் பயன்படுத்தினார்கள்.

முள் இல்லாத மரங்கள்

இந்த இன மரங்களில் முள் இல்லாத மரங்களும் இருப்பதாக சொல்லுகிறார்கள். இந்த வகை மரங்கள் சாகுபடி செய்வதற்கானவை, இவை மிகவும் பிரபலமானவை.

இந்த மரங்களை நகரங்களில் அழகு மரங்களாக நட்டு வளர்க்கிறார்கள். இதன் காய்களில் இருக்கும் தசை பகுதி இனிப்பாக இருக்கும். அதனால் தான் இதன் பெயர் தேன் வெட்டுக்கிளி.

காய்களை சாப்பிடுவதோடு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இதனை பயன்படுத்தி வந்தார்கள் அமெரிக்க பழங்குடி மக்கள்.

இதன் காய்களில் இருக்கும் விதைகளை மாவாக்கி அதனையும் உணவாக பயன்படுத்துகிறார்கள். இந்த மரங்கள் தரம் மிக்கவை, நீண்ட காலம் உழைக்கும், அதனால் தேவைப்படும் அளவுக்கு கிடைப்பதில்லை.

இன்னொரு ஆச்சரியமான செய்தி. வழக்கமாக தாவரங்கள் வேர்முண்டுகள் மூலமாகவே நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன. ஆனால் தேன் வெட்டுக்கிளி மரங்கள், வேர்முண்டுகள் இல்லாமலேயே  நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.

தாவர ரசாயனங்கள்

தாவரங்களில் தாவர ரசாயனங்கள் (PHYTO CHEMICALS) இருந்தால் அது மருத்துவ பண்புகள் அதிகம் இருக்கும் என்பார்கள். வெட்டுக்கிளி மரத்தில் சுமார் 60 வகையான தாவர ரசாயனங்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு சொந்தமான தேன்வெட்டுக்கிளி மரங்கள் இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே சில மரங்கள் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்

இதன் காய்கள், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளுக்கு உணவாகிறது. ஆடுகள் மாடுகள் மாடுகள் அணில் முயல் போன்றவை இதனை விரும்பி சாப்பிடுகின்றன. பழங்குடிகள் இந்த காய்களை காய்கறியாக பயன்படுத்துகிறார்கள். 

காய்களில் இருக்கும் தசையினை புளிக்க வைத்து பீர் ஒயின் போன்ற மது வகைகளை தயாரிக்கிறார்கள். இந்த நெற்றுக்களின் கொட்டைகளை வறுத்து பொடி செய்து அதனை காப்பி பொடிக்கு பதிலாக பயன்படுத்துகிறார்கள் 

வறட்சியான பகுதிகளில் இந்த மரத்தின் காய்கள் மற்றும் இலைகளை கால்நடைகளுக்கு முக்கிய தீவனமாக கொடுக்கிறார்கள் இதன் பூக்களில் சுரக்கும் தேன் அதிகமான தேனீக்களையும் வண்டுகளையும் அதிக அளவில் கவருகின்றன.

இதன் விதைகள் உங்களுக்கு தேவையா ? 100 விதைகள் வெறும் ஆயிரம் ரூபாய்தானாம் ஆன்லைனில் கிடைக்கிறது. முளைக்கும் விதைகள் என்று கேளுங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...