Saturday, July 22, 2023

GUINNESS AWARDED RHODODENDRON TREE 269.ரோடோடெண்ட்ரான் கின்னஸ் விருது வாங்கிய பூமரம்

ரோடோடெண்ட்ரான்
கின்னஸ்  பூமரம்

அனேகமாய் கின்னஸ் விருது வாங்கிய பூமரம் இது ஒன்றாகத்தான் இருக்கும்.
ரோடோடெண்ட்ரான்
என்றால் ஓர் அழகு பூமரம், நாகாலாந்தில் மவுண்ட் ஜாப்பு என்ற இடத்தில் வளர்ந்த ரோடோடெண்ட்ரான் தான்  உலகத்திலேயே பெரிய பூவாக பூத்த பூ என்று கின்னஸ் விருது பெற்றது. அத்தோடு உத்தரகாண்ட் மாநிலத்தின் அரசு மரமாகவும் அறிவிக்கப்பட்டது. இமாச்சலப்பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் அரசு மலரும் கூட இதுதான். ரோடோடெண்ட்ரான் கண்களுக்கு விருந்தாகும் நோய்களுக்கு மருந்தாகும் மரம்.

இதன் தாவரவியல் பெயர் ரோடோடெண்ட்ரான் ஆர்போரியம் (RHODODENDRON ARBOREUM), தாவரக் குடும்பத்தின் பெயர் எரிகேசியே (ERICACEAE), தாயகம் இந்தியா, பொதுப்பெயர் ட்ரீ ரோடோடெண்ட்ரான். பிறமொழி பெயர்கள்

தமிழ்: பிளி (BILI)

கன்னடம்: பூ (PU)

மலையாளம்: காட்டுப்பூவரசு (KATTUP PUVARASU)

ஹிந்தி: புரான்ஸ் (PURANS)

சொந்த ஊரும் பரவி இருக்கும் இடங்களும்

பூட்டான், சைனா, இந்தியா, மியான்மர், நேபாளம், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஆகிய இடங்களில் ரோடோடெண்ட்ரான் பரவியுள்ளது.

தமிழ்நாட்டில் நீலகிரி, ஆனைமலை, பழனி, வருசநாடு, ஆகிய மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயன்கள்:

இதன் தளிர் இலைகளை இடித்துக் கூழாக்கி அதனை நெற்றியில் பற்றாக இடுவதால் தலைவலி குணமாகும்.

மரத்தின் பட்டைகளில் இருந்து சாரெடுத்து அதனைக் கொடுப்பதால் இருமல் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கடுப்பை குணப்படுத்தலாம்.

பூவிலிருந்து தயார் செய்யும் கஷாயத்தை குடிப்பதன் மூலம் வாந்தி மற்றும் பசி ஆகியவற்றைப் போக்கலாம். பூக்களில் இருந்து சாறு எடுத்து அருந்துவதன் மூலம், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யலாம்.

இதன் பூக்களை சாப்பிடுவதன் மூலம் தொண்டைகளில் சிக்கிக் கொண்ட எலும்புகளை சுலபமாக நீக்கிவிடலாம். இதுதான் எப்படி என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்க வேண்டும்.

தளிர் இலைகளை சமைத்தும் சாப்பிடலாம் சமைக்காமலும் சாப்பிடலாம்.

பூக்களில் உப்பும், மிளகாய் பொடியும் சேர்த்து ஊறுகாய் தயாரிக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் குறைவாக சாப்பிட வேண்டும். காரணம் இவற்றில் ஒரு வகையான நச்சுப்பொருள் உள்ளது என்கிறார்கள்.

வளரியல்புகள்

ரோடோடெண்ட்ரான் சிறிய வகை மரங்கள். சராசரியாக 12 மீட்டர் உயரம் வளரும். நல்ல சூழலில் வளரும் மரங்கள் 20 மீட்டர் உயரம் கூட வளரும்.

இதன் மரங்கள் சுமாரான தரம் உடையவை, நேபாளத்தில் இவற்றை பலவிதமான மர சாமான்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.

வீடுகளில் உபயோகப்படுத்தும் மரச்சாமான்கள், சிறுசிறு வீடுகளை கட்டுவதற்கான கம்பங்கள், கொம்புகள், உத்தரங்கள், மற்றும் வேலிகள் அமைக்க, பெட்டிகள் அலமாரிகள் செய்வதுடன், வீட்டுக்கான விறகாக பயன்படுத்துவதற்கும் இந்த ரோடோடெண்ட்ரான் மரங்கள் பயனாகின்றன.

சிறுநீரகக் கோளாறுகள், நுரையீரல் புற்றுநோய்,க்சிமா என்னும் சரும நோய் ஆகியவற்றையும் ரோடோடெண்ட்ரான் குணப்படுத்துகின்றது,

இதன் பூக்கள் பட்டைகள் இலைகள். ஆகியவை மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.

இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்து ரோடோடெண்ட்ரான் மரம் கின்னஸ் விருது பெற்றது. நாகாலாந்தில் கொஹீமா மாவட்டத்தில் மவுண்ட் ஜாப் என்ற இடத்தில் உள்ளது இந்த மரம், 1993 ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்டது. இதுதான் உலகத்தின் உயரமான ரோடோடெண்ட்ரான், இதன் உயரம் 108 அடி, இன்னும் கூட அந்த ரம் வளர்ந்து கொண்டே வருகிறது என்கிறார்கள்.

ரோடோடெண்ட்ரான் பூக்கள் கவர்ச்சிகரமான சிவப்பு ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் கொத்து கொத்தாக பூக்கும். இந்த பூக்கள் ஒரே கொத்தில் 15 முதல் 20 பூக்கள் வரை அடர்த்தியாக இருக்கும். பூக்கள் பெரும்பாலானவை ரத்த சிவப்பா இருக்கும். கோவில் மணி போன்ற வடிவத்தில் இந்த பூக்கள் இருக்கும். பூக்கள் இரண்டு முதல் ஐந்து சென்டிமீட்டர் நீளமாகவும், குறுகலான அகலம் கொண்டதாகவும் இருக்கும். நன்கு வளர்ந்த கோழி கொண்டைப் பூ போல தென்படும்.தன் பழங்கள் நெற்றுக்களாக இருக்கும். நீளமாக இருக்கும். முற்றிய நெற்றிக்கள் வெடித்து நுண்ணிய, எண்ணற்ற விதைகளைச் சிதறவிடும்.

புதிய ரோடோடெண்ட்ரான் மரங்களை உருவாக்குவது எப்படி?

ரோடோடெண்ட்ரான் மரங்களை உருவாக்க  நல்ல ஈரப்பசை உள்ள மண்கண்டம் ஏற்றது, ஆனால் போதுமான வடிகால் வசதி வேண்டும், அமிலமண்ணாக இருக்க வேண்டும், அங்கக பொருட்கள் அதிகம் ருக்க வேண்டும். சல்லடையில் வடிகட்டியது போன்ற நிழல் பகுதிகளில்  நன்கு வளரும். மரங்களில், அதன் இலைகள் அகன்றும் கரும்பச்சை நிறம் உடையதாகவும் இருக்கும். காடுகள் மற்றும் மரங்களுக்கு ஊடாக இருக்கும் பகுதிகளில் இவை நன்றாக வளரும்.

என்ன செய்யலாம் ?

மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இதனை அழகு மரமாக வளர்க்கலாம். அவை மருந்தாக கை வைத்தியம் செய்ய பயன்படும் அழிந்து வரும் ஒரு மர வகையை காப்பாற்றும் பெருமையும் நம்மைச் சேரும். சரீங்களா ?

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...