Saturday, July 22, 2023

GLOBALLY FAMILIAR INDIAN TREE HERB NEYKOTTAN 270. அழகு இந்திய மூலிகை நெய்கொட்டான்

அழகு இந்திய மூலிகை
நெய்கொட்டான் 


நெய்
கொட்டான் மரம் அதிகமாக ஒரு மூலிகை, குறைவாக மரச் சாமான்கள் செய்ய உதவும் மம், அழகு பூமரமாகக் கொஞ்சம். உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஓர் அழகு இந்திய மரம்.

தாவரவியல் பெயர்: லெபிசாந்தஸ் டெட்ரோபில்லா (LEPISANTHES TETRAPHYLLA)

தாவர குடும்பம்: சாப்ப்பிண்டேசி (SAPINDACEAE)

தாயகம்: இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசிய நாடுகள்

பொதுப் பெயர்கள்: ஃபோர் லீவ்டு சோப் வுட்(FOUR LEAVED SOAP WOOD, TORCH WOOD)

பிறமொழி பெயர்கள்:

தமிழ்: நெய்கோட்டான், கரடிப்புங்கன், மாசமதி (NEYKOTTAN)  

தெலுங்கு: பொத்தமாமிடி (POTHAMIDI)

கன்னடம்: குர்ப்பா (KURPA)

மலையாளம்: பூவல் மரம் (KUVAL MARAM)

கொங்கணி: லோகாண்டி (LOKANDI)

மராத்தி: குர்ப்பா (KURPA)

மரத்தின் சொந்த ஊர்: இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு சொந்தமான மரம்.

நெய்கொட்டான் பரவியிருக்கும் இடங்கள்

இந்தியாவில் அசாம், அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் கேரளாவில் அதிகம் பரவியுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மரங்களைப் பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனா, ரெய்காட், ரத்தனகிரி, சிந்துதுர்க், தானே ஆகிய மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலத்தில் பெல்காம், கூர்க், ஹாசன், சவுத்கெனரா, நார்த்கெனரா ஆகிய இடங்களிலும் இந்த மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

உலக அளவில் இந்தியா உட்பட, ஸ்ரீலங்கா, மியான்மர், தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூகினியா ஆகிய இடங்களிலும் பரவி உள்ளன. சுருக்கமாக சொல்வதானால் இந்தோ மலேசியா, இந்தோசைனா மற்றும் ஆப்பிரிக்காவிலும் பரவி உள்ளன.

வளரியல்புகள்

இவை சிறு குறு மரங்களாகவும், நடுத்தரமான மரங்களாகவும் வளரும். இதன் கிளைகள் ஒழுங்கின்றி வளைந்து வளைந்து அழகாக வளரும். இதன் பூக்கள் வெள்ளையாக, ஊதா நிறமாக, பூங்கொத்துக்களாக பூக்கும். இரு பாலின பூக்களாக பூக்கும். பூங்கொத்துக்கள் 10 முதல் 12 சென்டிமீட்டர் நீளமும், இரண்டு சென்டிமீட்டர் அகலமும் உள்ளதாக இருக்கும். பூக்கள் வாசனை உடையவைகளாக இருக்கும்.

காய்கள் மஞ்சள் மற்றும் காவி மற்றும் ஊதா நிறங்களில் இருக்கும். முற்றிய கனிகள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமாக இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் இரண்டு முதல் மூன்று விதைகள் இருக்கும்.

மருத்துவ பயன்கள்:

பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், ஆயுர்வேத மருத்துவ முறைகளிலும், இதன் இலைகள் பட்டைகள் விதைகள் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

இதன் இலைகள், தண்டுகள், பட்டைகள், விதைகள்,வேர்கள்,  ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யும் மருந்துகளில் இருமல், தலைப்பொடுகு, யானைக்கால் நோய், எக்சிமா மற்றும் சொரியாசிஸ் போன்ற சரும நோய்கள், காய்ச்சல், வலிப்பு நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த முடியும்.

பாரம்பரிய மருத்துவத்தில் இதன் இலைகளைப் பயன்படுத்தி ஷாம்பு, மற்றும் கிளீன்ஸர்கள் என்னும் சுத்தப்படுத்திகள், மற்றும் துணிகளை துவைப்பதற்கான கிளீனிங் பவுடர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

மரக்கட்டை உபயோகம்:

சராசரியான ஒரு மரமாக இருந்தாலும் அது உள்ளூரில் மரச்சாமான் தேவைகளை நிறைவு செய்கிறது. மேஜை நாற்காலி போன்ற மரச்சாமான்கள் செய்யவும், கடைசல் வேலைகள் மூலமாக பல வகையான சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது.

எங்கு வளரும் ?

வறண்ட நிலப் பகுதிகளில், ஆற்றங்கரைகளில், சதுப்பு நிலப்பகுதிகளில், ஓடைக்ரைகளில் நன்கு வளரும்.

பரவலான மண் வகைகளிலும் பிரச்சனைகள் ஏதுமின்றி வளரும்.

புதிய கன்றுகள்

இந்த குடும்பத்தைச் சேர்ந்த பல தாவரங்கள் லேட்க்ஸ் (LATEX)என்னும் பால் உடையவை.

மேலும் நச்சுத்தன்மை உடைய, சேப்பனின்கள் இருக்கும். அது மட்டுமல்ல இதன் இலைகள், விதைகள் மற்றும் வேர்களில் சோப்புகளுக்கு உரிய  போன்ற குணநலன்கள் நிறைந்திருக்கும்.

சேப்பிண்டேசி (SAPINDACEAE) குடும்பத் தாவரங்கள்

சேப்பன்டேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் பெரும்பாலும் பூக்கும் தாவரங்கள். இதில் 1858 வகையான தாவர இனங்கள் உள்ளன. இதில் நமக்குத் தெரிந்தவை அல்லது பிரபலமானவை என்று பார்த்தால் இரண்டு மரங்களை சொல்லலாம், அவற்றில் ஒன்று மேப்பிள் இரண்டாவது லிச்சி பழம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...