Saturday, July 29, 2023

FOOD MEDICINE MATERIAL TREE RIVER MAHUA 280. மூட்டுவலியை குணப்படுத்தும் ஆற்றிலுப்பை

மூட்டுவலியை குணப்படுத்தும்
ஆற்றிலுப்பை

மூட்டுவலி பூட்டுவலி நீக்கி கூந்தல் வளர்க்கும்  மூலிகை  இது. 

ஆற்றிலுப்பை ஒரு இலையுதிர் மரம், உணவாக, ஊறுதியான மரமாக, உடல்  நோய்  நீக்கும் மருந்தாக உபயோகம் ஆகும் ஒரு  நடுத்தரமான மரம், சப்போட்டேசி என்னும் இலுப்பை தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது, எதனைக் கிள்ளினாலும் உடைத்தாலும் பால் வடியும், குறிப்பாக ஓடைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் இவை வளரும். 

பூக்களை உணவாக பயன்படுத்துகிறார்கள், பூக்களை இதன் எண்ணையை சித்த மருத்துவத்தில் மூட்டு வலி, ஆஸ்துமா, போன்ற நோய்களை குணப்படுத்தவும், கூந்தல் எண்ணையை தயார் செய்யவும், உறுதியான வலுவான, ஆற்றிலுப்பை மரக்கட்டைகள் மரச்சாமான்கள் செய்யவும் ஏற்றவை. 

தாவரவியல் பெயர்: மதுக்கா நெறிபோலியா (MADHUCA NERRIFOLIA)

பொதுப்பெயர்:இல்லிப்பி பட்டர் ட்ரீ(ILLIPPI BUTTER TREE)

பலமொழிப்பெயர்:

இந்தி: மஹுவா (MAHUA)

மராட்டி: டூபா (TUPA)  

தமிழ்: ஆத்து இலுப்பை (ATHU ILLUPPAI)  

மலையாளம்: ஆத்து இலிப்பா, காட்டு இலுப்பை (ATTU ILLIPPA, KATTU ILLUPPEI)  

கன்னடா: நீரிப்பி  (NEERIPPE)  

தவர குடும்பம்: சப்போட்டாசி (SAPOTACEAE)

தாயகம்: தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் ஸ்ரீலங்கா

வளர் இயல்புகள்:

ஆற்றிலுப்பை ஒரு இலையுதிர் மரம் அதிகபட்சமாக 10 மீட்டர் உயரம் வரை வளரும்.

இலை, பூ, தண்டு, கிளை இப்படி எதனைக் கிள்ளினாலும் உடைத்தாலும் பால் வடியும்.

பரவி இருக்கும் இடங்கள்:

கிழக்கு ஆசியா, தென்னிந்திய மாநிலங்கள், மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் இந்த ஆற்றிலுப்பை மரங்கள் பரவியுள்ளன. பசுமை மாறா காடுகளில் பரவி உள்ளன குறிப்பாக ஓடைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் இந்த மரங்கள் வளர்கின்ற. 1200 மீட்டர் வரை உள்ள பகுதிகளில் ஆற்றிலுப்பை மரங்கள் காணப்படுகின்றன.

பயன்கள்

ஆற்றிலுப்பை பூக்களை உணவாக பயன்படுத்துகிறார்கள். மூட்டு வலி, ஆஸ்துமா, வயிற்று பூச்சிகள், போன்றவற்றை குணப்படுத்த இதன் பழங்களை பயன்படுத்துகிறார்கள்.

ஆற்றிலுப்பை கொட்டைகளிலிருந்து எடுக்கும் எண்ணை மூட்டு வலியை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இதன் எண்ணையிலிருந்து கூந்தல் எண்ணையை தயார் செய்கிறார்கள்.

ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆற்றிலுப்பை மரக்கட்டைகள் உறுதியானவை வலுவானவை, மரச்சாமான்கள் செய்ய ஏற்றவை

இதன் கொட்டைகளை விதைத்து புதிய கன்றுகளை உருவாக்கலாம். ஆற்றிலுப்பை தளிர் இலைகள் இளஞ்சிவப்பு மற்றும் பசுமை கலந்த சிவப்பு நிறத்துடனும், முதிர்ந்த இலைகள் பசுமை நிறத்துடனும் இருக்கும். நீளமான அகலம் குறைந்த மா இலைகள் போல இருக்கும்.

சப்போட்டேசி (SAPOTACEAE) என்னும் தாவர குடும்பத்தில் 700 வகையான மர வகைகள் மற்றும் புதுச் செடிகள் உள்ளன.

வளரியல்புகள்

பசுமை மாறாமரங்கள், அதிகபட்சமாக 15 மீட்டர் உயரம் வரை வளரும், பட்டைகள் அடர்த்தியான காவி நிலத்தில் ஆழமான வெடிப்புகளுடன், சில சமயம் பட்டைகள் நீளவாக்கில் உறிந்து விழும். கிளையின் நுனிகளில் கொத்தாக இருக்கும் பூக்கள், மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த நேரத்தில் இரு பாலின பூக்களாக பூக்கும்.

ஆற்றிலுப்பை  பரவி இருக்கும் இடங்கள்

கர்நாடகாவில் சிக்மகளூர், கூர்க், ஹாசன், மைசூர், வடகானரா, ஷிமோகா, மற்றும் தென்கானரா.

கேரள மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும் பரவி உள்ளன. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த ஆற்றிலுப்பை மரங்கள் பரவியுள்ளன.

ஆற்றிலுப்பை மரங்கள் உங்கள் ஊரில் இருந்தால் ஒரு புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள். ஆற்றிலுப்பை பற்றி வேறு சுவாரசியமான தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். இதில் சந்தேகம் ஏதும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி,  வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...