Friday, July 21, 2023

APPLE MANGROVE SONMUNTHIRI A MULTI USE TREE 265. சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ்

 

சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ்


சோன்
முந்திரி மற்றும்  கண்டலங்காய்  என்று தமிழில் சொல்லப்படும் அலையாத்தி மரத்தை உலகம் முழுவதும் சொல்லும் பெயர் ஆப்பிள் மேங்குரோவ், அலையாத்தி சூழலின் ஒரு முக்கியமான மரம், இந்தியாவில் 11 மாநிலங்களில் பரவியுள்ளது, மின்மினி பூச்சிகளின் சரணாலயமாக, இதன் பழங்கள் ஊட்டம் மிகுந்த தின்பண்டமாக, விதைகள் கூந்தல் தைலமாக, படகுகள் முதல் பலவிதமான பாத்திர பண்டங்கள் செய்யும் தரமான மரமாக விளங்குகிறது, கூடுதலான கரியமிலவாயுவை சுற்றுச்சூழலிருந்து    நீக்கி காலநிலை மாற்ற விளைவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

பொதுப் பெயர்கள்: ஆப்பிள் மேங்க்ரோவ், கேன்ன்பால் மேங்ரோவ், செடார் மேங்ரோவ்(APPLE MANGROVE, CANNON BALL MANGROVE, CEDAR MANGROVE, PUZZLENUT)

தாவரவியல் பெயர்: சைலோகார்ப்பஸ் கிரனேட்டம்  (XYLOCARPUS GRANATUM)

தாவர குடும்பம்: மிலியேசி  (MELIACEAE)

மொழிப் பெயர்கள்:

பெங்காலி: தண்டுல்  (DHUNDUL)

மராத்தி: கார்ப்பா  (KARPA)

ஒரிசா: பீட்டாமாறி  (PITAMARI)

தமிழ்: சோன்முந்திரி, கண்டலங்காய்  (SONMUNTHIRI, KANDALANKAI)

தெலுங்கு:  செனுகா  (CHENUGA)

பரவி இருக்கும் இடங்கள்  (DISTRIBUTION)

இந்தியாவில் 11 மாநிலங்களில் இந்த சோன்முந்திரி ஆப்பிள் மேங்ரோவ் பரவியுள்ளது. அவை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், டாமன் டையூ, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் வெஸ்ட் பெங்கால்.

பரவி இருக்கும் நாடுகள்:

கென்யா, தன்சானியா, மொசாம்பிக், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நியூகினியா.

பயன்கள்  (USES)

இதன் விதைகளில் இருந்து எடுக்கும் எண்ணையை கூந்தல் தைலமாக பயன்படுத்துகிறார்கள்.

இதன் வேர்களில் இருந்து தயார் செய்யும் மருந்து காலரா, சீத கடுப்பு, காய்ச்சல், மலேரியா, வைரஸ் நோய்கள், ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.

இதனை போம்கிரனேட் சீட் ஆயில் என்று சொல்லுகிறார்கள். சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ்ல் ஆண்டி ஆக்சிடன்ட்டுகள் நிரம்ப உள்ளன.

சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ்

சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ் எண்ணெயைத்  தலையில் தேய்ப்பது தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. தலைமுடி அடர்த்தியாக ஆரோக்கியமாக வளர உதவுகிறது. பெண்கள் தங்கள் கூந்தலை பாதுகாக்க பரமரிக்க மேம்படுத்த இதனை அதிகம் விரும்புகிறார்கள்.

வளரியல்புகள்  (DESCRIPTION)

இந்த சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ் சிறு மரம் அல்லது நடுத்தரமான மரமாக வளரும். அதிகபட்சமாக 12 மீட்டர் உயரம் வரை கூட வளரும். இதன் அடிமரம் பருத்து இருக்கும்.

மரத்தின் பட்டைகள் காவி நிறமாக வழுவழுப்பாக இருக்கும். பட்டைகளை காகிதம் போல சுலபமாக உரித்து எடுக்கலாம்.

இளம் இலைகள் வெளிர் பச்சை    நிறமாகவும் முதிர்ந்த இலைகள் அடர் பச்சையாகவும் இருக்கும்.

சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ்ன் இலைக் கணுக்களில் அல்லது கிளை நுனியில் சிறிய பூங்கொத்துகள் உருவாகும். பூக்கள் வெண்மையாக இருக்கும் அல்லது ஊதா மற்றும் மஞ்சள் நிறம் கலந்தது போல இருக்கும்.

இதன் பூக்கள் மிகவும் அழகான சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனை ரூபி ரெட் என்று வருணிக்கிறார்கள்.

அதன் பூக்கள் பலவிதமான பூச்சிகளையும் இரவு நேரங்களில் கவருகின்றன. இதற்குக் காரணம், இந்தப் பூக்கள் மாலை வேளையில் பூக்க ஆரம்பிக்கின்றன. பூக்கள் ஒரே ஒரு இரவு தான் மரத்தில் இருக்கும். காலையில் உதிர்ந்து போகும். ஆகையினால்  நிறையப் பூச்சிகள் இரவு நேரத்தில் இந்த மரங்களை சுற்றி சுற்றி வருகின்றன.

அப்படி இந்த மரத்திற்கு வரும் பூச்சிகளில் மிகவும் முக்கியமானது மின்மினி பூச்சிகள்.

சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ் பூக்க ஆரம்பித்ததும், இரவு நேரத்தில் குறிப்பாக ஏகப்பட்ட மின்மினி பூச்சிகள் இந்த மரங்களுக்கு படையெடுக்குமாம். அதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் மலேசிய நாட்டில் இந்த மரங்களைத் தேடிப் போவார்களாம். அந்த அளவுக்கு மேங்ரோவ் ஆப்பிளின் பூக்கள் பிரபலமானவை.

இதன் மரக்கட்டைகள் உறுதியானவை, வலுவானவை. இதில் படகுகள் கட்டலாம். கட்டுமான பணிகளில் பயன்படுத்தலாம். மேஜை நாற்காலி இத்தியாதி மரச்சா மான்கள் செய்யலாம். கருவிகளுக்கான கைப்பிடிகள் செய்யலாம், இதர தட்டுமுட்டுச் சாமான்களும் சிறப்பாக செய்யலாம்.

இதன் பட்டைகளில் கூடுதலான டானின் சத்து இருப்பதால், கயிறுகளை பலப்படுத்த, துணிகளுக்கு நிறம் ஏற்ற, இதனைப் பயன்படுத்தலாம். இதன் பட்டைகள் விதைகள் ஆகியவை பாரம்பரிய மருத்துவ முறைகளில்  நோய்களை குணப்படுத்த மூலிகையாக வெகுகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ்ன் பழங்கள் பெரியதாக உருண்டையாக, மரக்கட்டை போல இருக்கும். இவற்றை உடைத்தால் நான்கு பகுதிகளாக உடையும் அதற்குள் அதிகபட்சமாக 12 விதைகள் வரை இருக்கும்.

இதன் பழங்கள் வியாபார ரீதியில் பயன்படுவதில்லை ஆனால் உணவாகவும் இயற்கை மருந்தாகவும் உட்கொள்ள பயன்படுத்துகிறார்கள்.

இதன் பழங்களை கிராப் ஆப்பிள் (CRAB APPLE)என்று சொல்லுகிறார்கள் இந்த மங்கள் வெகுவாக அழிந்ததனால் இதன் பழங்கள் மார்க்கெட்டுக்கு அதிகம் வருவதில்லை

சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவ்ன் பழங்களில் வைட்டமின்கள் அபரிதமாக அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்களும் இதில் அடங்கியுள்ளன. அதனால் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பல்வேறு முக்கிய உறுப்புகளை பிரச்சனைகள் இன்றி செயல்பட உதவுகிறது.

பற்கள் மற்றும் எலும்புகளை உறுதிப்படுத்தவும் காயங்கள் ஏற்பட்டால் நிறைவாக குணமடைவதற்கும் இதன் பழங்கள் உதவியாக உள்ளது.

இவை தவிர தோள்களில் ஏற்படும் எரிச்சல் பூச்சிக் கடிகள் சிறு காயங்கள், இரத்தப்போக்கு ஆகியவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த உதவுகின்றது.

மேங்ரோவ் ஆப்பிள் பழங்களைப் பறித்து அப்படியே சாப்பிடலாம். பழங்கள் லேசாக புளிக்கும். ஆனால் பாடைக் கட்டி போல வாசம் வீசும். இதனை சமைத்தும் சாப்பிடுகிறார்கள். இந்த பழங்களுடன் உப்பு சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலுடனும் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உள்ளது.

இதன் பழங்கள் முக்கிய உடன் உதிர்ந்து தண்ணீரில் மிதந்து செல்லும். அதைப் பார்த்து தான் மேங்கோ ஆப்பிள் அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று கண்டுபிடிக்கிறார்கள்.

சிங்கப்பூர் உட்பட தென்கிழக்காசியா, கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக், கிழக்கு ஆப்பிரிக்கா, ஆகிய இடங்களில் இதன் பழங்கள் கடைத்தெருக்களில் விற்பனையாகின்றன என்று சொல்லுகிறார்கள்.

சோன்முந்திரி ஆப்பிள் மேங்குரோவினால் ஏற்படும்  சுற்றுச்சூழல் பயன்கள்

கடலோரத்தில் சதுப்பு நிலப்பகுதியில் எல்லைப் பகுதிகளில் வளர்ந்திருக்கும் அலையாத்தி சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் மரம்.

கடலோரத்தில் ஏற்படும் மண்ணரிப்பை சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறது.     

நீங்கள் யாராவது மேங்ரோவ் ஆப்பிள் சாப்பிட்டு இருந்தால், உங்கள் அனுபவங்களை எனக்கு சொல்லுங்கள் நன்றி

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...