Friday, June 16, 2023

WHITE MULBERRY OR SILKWORM MULBERRY 23. வெள்ளை மல்பெரி மரம்

 

பட்டுத் தொழிலின் ஆதார சுருதி
வெள்ளை மல்பெரி

வெள்ளை மல்பெரி மரம்> வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டு உற்பத்தி செய்யும் இடங்களில் எல்லாம் மல்பெரிதான் பட்டுத் தொழிலின் ஆதார சுருதி> வியாபார ரீதியான பட்டுக்கூடு உற்பத்திக்கு உதவுகிறது> அமெரிக்காவின் செரோக்கி என்றும் பழங்குடிகள் இந்த மரத்தின் நாரில் ஒருவகையான லினன் துணிகளை நெய்து பயன்படுத்திவந்தார்கள்>  இதன் இலைச்சாறு இந்திய விரியன் பாம்பு வித்தைக் கூட முறிக்கக் கூடிய சக்தி உடையது> கிட்டத்தட்ட 90 சத பட்டுப்புடவைகள் மல்பெரி பட்டில்தான் தயாராகின்றன.  உலகிலேயே மிகவும் விலை அதிகமான பட்டுப்புடவைகள் என்பவை காஞ்சிபுரம் பட்டு நெசவில் உருவானைவதான்.  அத்தனைக்கும் அடிப்படை நமது மல்பெரி மரங்கள்தான்.

பொதுபெயர்: ஒயிட் மல்பெரி, காமன் மல்பெரி,சில்க் வேர்ம் மல்பெரி (WHITE MULBERRY, COMMON MULBERRY, SILK WORM MULBERRY)

தாவரவியல் பெயர்: மோரஸ் ஆல்பா (


MORUS ALBA)

தாவரக் குடும்பம் பெயர்: மோரேசியே (MORACEAE)

தாயகம்: மத்திய மற்றும் கிழக்கு சைனா

பட்டுத் தொழிலின் ஆதார சுருதி.   

மல்பெரி மரத்திற்கு பட்டுப்பூச்சி மரம் என்று பெயர். பட்டுப் புழு வளர்க்கும் இடங்களில் எல்லாம் அதுதான் பெயர்: வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டு உற்பத்தி செய்யும் இடங்களில் எல்லாம் மல்பெரிதான் பட்டுத் தொழிலின் ஆதார சுருதி.

மல்பெரி மரம் 10 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் வயது சுமார் 250 ஆண்டுகள். இதற்கு சைனா சொந்த மண். ஆனாலும் மெக்சிகோ> ஆஸ்திரேலியா> கிர்கிஸ்தான்> அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில்> இது பரவியுள்ளது.

சிவப்பு வெள்ளை வகைகள்    

பட்டுப்புழு வளர்க்கும் வகைக்கு வெள்ளை மல்பெரி என்று பெயர். வியாபார ரீதியான பட்டுக்கூடு உற்பத்திக்கு உதவுகிறது. குளிர்ச்சியான பகுதிகளில் இது இலை உதிர்க்கும் மரம். வெப்பமான பகுதிகளில் இது பசுமை மாறாத மரம். 

இதில் சிவப்பு> கருப்பு என இருவகை உண்டு.  சிவப்பு மல்பெரியின் தாவரவியல் பெயர் மோரஸ் ருப்ரா. (MORUS RUBRA)  வெள்ளை மல்பெரி பெயர் மோரஸ் ஆல்பா (MORUS ALBA)

விர்ஜீனியாவின் பூர்வக்குடிகள்    

17 ம் நூற்றாண்டு வாக்கில் விர்ஜீPனியாவின் பவ்ஹாத்தன் பழங்குடி மக்கள் இந்த சிவப்பு மல்பெரி மரங்களை போற்றி வளர்த்தார்கள். பவ்ஹாத்தன் பழங்குடிகள் கிழக்கு விர்ஜீனியாவின் பூர்வக்குடிகள்.  காரணம் இதன் பழங்களை பச்சையாகவும் சமைத்தும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.  இன்றும் கூட மல்பெரி பழங்களை சாப்பிடுகிறார்கள். கேக் மற்றும் இனிப்பு வகைகளில் இதனை பயன்படுத்துகிறார்கள்.    

மல்பெரி விறகுகள்

மல்பெரி மரத்தின் கட்டைகளில் இறைச்சி சமைத்தால்.  அதற்கான சுவை கூடும் என்று நம்புகிறார்கள். மல்பெரி விறகுகளில் சமைக்கும் இறைச்சியின் மணம் மறு தெரு வரை மணம் வீசும் என்கிறார்கள்.     

அமெரிக்காவின் செரோக்கி என்றும் பழங்குடிகள் இந்த மரத்தின் நாரில் ஒருவகையான லினன் துணிகளை நெய்து பயன்படுத்திவந்தார்கள்.

புட் பாய்சனிங்க்   

 புட்பாய்சனிங் என்னும் உணவு நஞ்சு ஆகுதல் இன்று ரொம்ப சாதாரணமான சமாச்சாரம். பல  நேரங்களில் இது பாடாய்ப்படுத்தி விடும். ஹோட்டல் ஃபாஸ்ட்புட் என்று சாப்பிடுபவர்களுக்கு இது அடிக்கடி நிகழும். இதற்கு மல்பெரி மரத்தின் வேர்களின் பட்டையைக் கொடுத்து இதனை சரி செய்யும் பழக்கம் இன்றும் உள்ளது.

சக்கரை  நோய்க்கு மருந்து    

இதன் இலைச் சாற்றில் சக்கரை நோயை குணப்படுத்தும் சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது: இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.  அநேகமாய் இந்த இலைச்சாறு சக்கரை நோய்க்கு மருந்தாக கடைகளுக்கு விரைவில் வரலாம்.

விரியன் பாம்புகள்     

வெள்ளை மல்பெரியின் இலைச்சாறு இந்திய விரியன் பாம்பு வித்தைக் கூட முறிக்கக் கூடிய சக்தி உடையது. விதி முடித்தவர்களைத்தான் விரியன் பாம்பு கடிக்கும் என்பார்கள். அது மட்டுமல்ல கோப்ரா என்னும் நல்லபாம்பை விட விரியன் பாம்புகள் 20 மடங்கு அதிக விஷம் உடையவை.

இந்தியாவில் உள்ள விஷப் பாம்புகளை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள்: அவை இண்டியன் கோப்ரா> காமன் கிரெய்ட்> ரஸ்ஸல் வைப்பர்> சா ஸ்கேல்டு வைப்பர் (INDIAN COBRA, COMMON KRAIT, RUSSLE VIPER, SAW SCALLED VIPER) பிக்பாஸ் என்பது மாதிரி இந்த நான்கும் பிக் ஃபோர்.

மிழில் காமன் கிரெய்ட் என்பது கட்டுவிரியன். ரஸ்ஸல் வைப்பர் என்பது கண்ணாடி விரியன். சா ஸ்கேல்டு வைப்பர் என்பது சுருட்டை விரியன். இண்டியன் கோப்ரா என்பது நல்ல பாம்பு என்னும் நாகப்பாம்பு.  நல்ல பாம்பு தவிர மற்றவை மூன்றும் விரியன் வகையைச் சேர்ந்தது.

மல்பெரி இலையின் சாறு> விரியன் பாம்பு விஷத்தைக் கூட முறிக்கக் கூடியது என்பது ஆச்சரியமான தகவல். இதன் வேர்ச்சாற்றைப் பயன்படுத்தி லியூக்கேமியா என்னும் வெண்புள்ளி நோயைக் கூட கட்டுப்படுத்த முடியும் எனவும் கண்டறிந்துள்ளார்கள்.

ஒபீசிட்டி என்னும் குண்டு மனிதர்கள்    

இது மட்டுமில்லாமல் இன்று உலகின் மிகப்பெரிய பிரச்சினை ஒபீசிட்டி என்னும் குண்டு மனிதர்கள்.  ஹார்ட் அட்டாக் மற்றும் டயபெட்டிஸ் கூட வயசாளிகளின் பிரச்சினை என்று பின்னால் தள்ளி விட்டார்கள். 

இன்று குண்டு மனிதர் பிரச்சினைதான் முதல் நிலையில் உள்ளது.  இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் நம்பிக்கையான முடிவுகளைத் தந்துள்ளது. பிரச்சினையைத் தீர்ப்பதில் நம்பிக்கையான முடிவுகளைத் தந்துள்ளது. கொழுத்த குண்டு எலிகளை எல்லாம் ஸ்லிம் பியூட்டி களாக மாற்றிவிட்டன நமது மல்பெரிச் சாறு.

மல்பெரியின் மாயாஜாலம்    

மல்பெரி இன்னொரு நல்ல செய்தியைத் தருகிறது இளைஞர் மற்றம் இளைஞிகளுக்கு.  கருப்புதான் எனக்கப் புடிச்சக் கலரு என்று சினிமா பாடினாலும் சிவப்பழகு கிரீம் விற்பனை குறைய வில்லை.  நாற்பதைத் தாண்டிய பின்னால் கூட சிவப்பழகு கிரீமின் பின்னால்  நாடிச் செல்லுவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று சொல்லுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

மல்பெரோ சைட் எப் (MULBERROSIDE F) என்றும் மாயாஜாலம் மல்பெரியில் இருக்கிறது.  இது கருப்பழகு வராமல் உங்கள் தோலுக்கு வெள்ளழகு தருகிறது.  இதற்குள் காரணமாக இருக்கும் மெலனின் என்னும் நிறமி வராமல் தடுக்கிறது> இதுதான் மல்பெரியின் மாயாஜால ரகசியம்.   

அத்தோடு வீக்கம் நீக்கியாக (ANTI INFLAMATORY) நோய் தடுப்பியாக ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவை குறையும் குளுகோஸ் அளவையும்> குறைக்கிறது: கேன்சர் திசுக்கள் உருவாவதைக் கட்டுப்படுத்துகிறது. உடல் மற்றும் மனச்; சோர்வு ஏற்படுவதைத் தடுக்கிறது.    

இதில் இருக்கும் பிளேவனாய்ட்ஸ்> ஆல்கலாய்ட்ஸ் மற்றும் ஸ்டில் பினாய்ட்ஸ்> இவை நுண்ணுயிரிகளின் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.   

நினைவாற்றலை மேம்படுத்த உதவும்

இன்று இளைஞர்களை எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு பிரச்சினைக்கும் மல்பெரி தீர்வு தருகிறது. ன்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் பரிட்சை ஹாலில் உட்காந்ததும் படித்தது எல்லாம் மண்டையிலிருந்து ஆவியாகிவிடுகிறது. 

விரைந்து கற்றுக் கொள்ளும் சக்தி மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது மல்பெரிமல்பெரி இலைச்சாறு மூளையின் என்.சி.எஃப் (NERVE GROWTH FACTOR) அளவை அதிகரிப்பதால் இது சாத்தியமாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.   

அடிக்கடி ஏற்படும் மனச்சோர்வு

அத்தோடு சிலருக்கு அடிக்கடி ஏற்படும் மனச்சோர்வு (DEPRESSION) மற்றும் அற்பமான காரியங்களுக்கு எல்லாம் ஏற்படும் படபடப்பு (ANXIETY) மன இறுக்கம் (STRESS) போன்றவற்றை எல்லாம் சரி செய்யும் சஞ்சீவி மூலிகையாக உள்ளது மல்பெரி.    

தமிழ்நாட்டில் மல்பெரிக்கு வழங்கும் பெயர் பட்டுப் பூச்சிச் செடி.  பட்டு உற்பத்தித் தொழிலுக்கு அடிப்படையாக இருப்பது மல்பெரி  மரங்கள். ஒரு ஏக்கரில் மல்பெரி போட்டு பட்டுப்புழு வளர்ந்தால் மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பது சுலபம். 

நபார்டு வங்கியின் உதவி

எனது பூமி நிறுவனம் நபார்டு வங்கியின் உதவியடன் 110 மலை வாழ் மக்களுக்கு பட்டு வளர்ப்பை அறிமுகம் செய்துள்ளது.  அரை ஏக்கரில் மல்பெரி போட்டு மாதாமாதம் ரூ 15000 முதல் ரூ 20000 சராசரியாக வருமானம் எடுக்கிறார்கள். பல விவசாயிகள்: அதிகபட்சமாக சிலர் 21 நாட்களில் ரூ 50000   வரை கூட வருமானமாக எடுக்கிறார்கள்.  வேலை கூட அதிகம் இல்லை.   

உலகத்திலேயே 2018ல் பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டவது இடத்தில் உள்ளது.  பட்டுத் தொழிலை உலகிற்கு அறிமுகம் செய்த சைனா முதலிடத்தில் உள்ளது. இன்று இந்;தியாவில் 52000 கிராமங்களில் சுமார் 8 மில்லியன் மக்கள் பட்டு உற்பத்தி செய்கிறார்கள்.    

நான்குவகைப் பட்டு

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டு நான்கு வகையாக உற்பத்தி ஆகின்றது. அவை மல்பெரி பட்டு> ஸ்ஸார் பட்டு> ஈரி பட்டு மற்றும் முகா பட்டு (MULBERRY SILK, TASAR SILK, ERI SILK, MUGA SILK). இந்த நான்கு வகைளில் 92 சதவிகி பட்டு உற்பத்தி ஆவது மல்பெரி பட்டில்தான். இந்த நான்கு வகையான பட்டு உற்பத்தியும் இருப்பது இந்தியாவில் மட்டும்தான்.  மல்பெரி தவிர்த்து மற்ற அனைத்து வகைக்கும் பெயர் வான்யா பட்டு (VANYA SILK).    

கிட்டத்தட்ட 90 சத பட்டுப்புடவைகள் மல்பெரி பட்டில்தான் தயாராகின்றன.  உலகிலேயே மிகவும் விலை அதிகமான பட்டுப்புடவைகள் என்பவை காஞ்சிபுரம் பட்டு நெசவில் உருவானைவதான்.  அத்தனைக்கும் அடிப்படை நமது மல்பெரி மரங்கள்.

கொசுறு

இந்தியாவில் மல்பெரி பட்டு விவசாயம் செய்வதில் 90 நிலப்பரப்பு> கர்நாடகா> ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளன.  மீதம் உள்ள 10  மல்பெரி பட்டு விவசாய நிலப்பரப்பு மேற்கு வங்காளம்> இமாச்சலப் பிரதேசம்> மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன.       

REFERENCES

WWW.FAO.ORG/ MULBERRY CULTIVATION AND UTILIZATION IN INDIA

WWW.QUORA.COM-‘WHAT ARE THE DIFFERENT TYPES OF SILK IN DIFFERENT PARTS OF INDIA’

WWW.BIZHIBE.COM/ ‘TOP 10 LARGEST SILK PRODUCING STATES IN INDIA 2018 (908 WORDS)

PLEASE POST YOUR COMMENTS, REGARDS – GNANASURIA BAHAVAN D (ATHOR)

99999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...