Thursday, June 1, 2023

SACRED TEMPLE TREE PLUMARIA கோவில் பூமரம் பெருமாள் அரளி

 

 

பெருமாள் அரளி  PLUMARIA
PLUMARIA RUBRA


பெருமாள்அரளிப் பூக்களில் அழகு இருக்கும். ஆனால் தேன் இருக்காது.  வாசனையால் கவரப்படும் பூச்சிகள்  தேன்தேடி வந்து ஏமாந்து போனாலும், மகரந்தசேர்க்கைக்கு உதவ மட்டும் மறக்காது.  பூச்சிகளின் புத்தியைக் கிறங்கடிக்கும் வாசனைதான் இதன் துருப்புச்சீட்டு.

16. பெருமாள் அரளி மரம்

(TEMPLE TREE)

88888888888888888888888888888888888

தாவரவியல் பெயர்: புளுமேரியா ரூப்ரா (PLUMARIA RUBRA)

தாவரக் குடும்பம்: அப்போசயனேசி (APOCYANACEAE)

தாயகம்: மெக்சிகோ

பொதுப் பெயர்கள்: டெம்பிள் ட்ரி, பிராங்கிபாணி, புளுமேரியா (TEMPLE TREE, FRANGIPANI, PLUMARIA)

மெக்ஸிகோ, பசிபிக் தீவுகள், கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகிய இடங்களை சொந்த பூமியாகக் கொண்டது, இந்த பெருமாள் அரளி.

இந்த மரம், மிகவும் வாசனையான, வெள்ளை நிறப் பூக்களைப் பூக்கும்.  பூ இதழ்களின் உட்புறம்; ‘லைனிங்கொடுத்தது பொல பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பிராங்கிப்பாணிஎன்பது ஒரு இத்தாலி நாட்டின் பிரபலமான வாசனைத் திரவியம் (TEMPLE TREE). பாலினேசியன் கலாச்சார மக்கள் இதனை பூக்களின் ராணி (QUEEN OF FLOWERS) என்று கொண்டாடுகிறார்கள்.  அங்கு பெண்கள், இதை காதலை சொல்லும்; பூவாக பயன்படுத்தினார்கள்.  வலது காதின் ஒரத்தில் பூவை வைத்தால் காதல் வேகன்சிஇருக்கிறது, முயற்சி செய்யலாம் என்று பொருள். 

வலது காதில் வைத்தால், ‘எல்லாம் முடிந்தது, மூடிக் கொண்டு போஎன்று அர்த்தம்.  ஆனால் காதுல பூஎன்பதுதான் நம்மைப் பொருத்தவரை நெருடலான சமாச்சாரம். தமிழ்நாட்டில் காதில் பூ வச்சிட்;டான்னு சொன்னா அதுக்கு ஏமாத்திட்டானனு அர்த்தம். அதையே இப்போ காதுல பூ சுத்திட்டான்னு சொல்றாங்க. மாத்தி யோசிக்கறாங்க !   

இத்தாலியில் மார்கஸ் பிராங்கிபாணி என்பவர், கையுறைகளுக்கு (GLOVES) நறுமணம்தர ஒருவகை சென்ட்ஐ (வாசனைத் திரவியம்) உருவாக்கினார்.  அதற்குப் பிறகுதான் நமது புளுமேரியா மரத்தினையும் பூக்களையும் கண்டுபிடித்தார்கள்.  அந்த பூக்களின் வாசைனயும் அது மாதிரியே இருந்ததால், இதற்கும் அந்தப் பெயரையே வைத்தார்கள்;.  அப்படித்தான் பெருமாள்அரளி பிராங்கிப்பாணிஆனது.

இதன், மரம், கிளைகள் எல்லாமே மிகவும் மிருதுவானவை.  நகத்தால் கிள்ளினால் கூட நகம் புதைய பால்வடித்து அழும். இந்த மரங்கள் பெரிய செடி ஆனால்; சிறிய மரம்.

பெருமாள்அரளிப் பூக்களில் அழகு இருக்கும். ஆனால் தேன் இருக்காது.  வாசனையால் கவரப்படும் பூச்சிகள்  தேன்தேடி வந்து ஏமாந்து போனாலும், மகரந்தசேர்க்கைக்கு உதவ மட்டும் மறக்காது.  பூச்சிகளின் புத்தியைக் கிறங்கடிக்கும் வாசனைதான் இதன் துருப்புச்சீட்டு.

இதன் கிளைகளை வெட்டிவைத்தால் சுலபமாக வளரும்.  வெட்டிய கிளைகளை ஐந்து பத்து நாட்களுக்கு வெய்யிலில் வாட்டி பின்னர் நடலாம்.  ஈரம் தூக்கலான மண்கண்டத்தில் நட்டால் கிளைகள் அழுகிப்போகும்.  வெட்டிய புத்தம்புது கிளைகளை நடுவது புத்திசாலித்தனம் ஆகாது.  கிளைகளில் இருக்கும் இலைகளை நீக்கி விட்டு வெய்யிலில் வதக்கி நடலாம்.

1.         பெருமாள்அரளி மரத்தின் பெயர்

1.1       பெங்காலி: காத் சம்ப்பா (TEMPLE TREE)

1.2       இந்தி: சம்ப்பா (CHAMPA)

1.3       குஐராத்தி: சம்ப்போ (CHAMPO)

1.4       மராத்தி: சாஃபா (CHAFA)

1.5       தெலுங்கு: தேவகன்னேரு (DEVA GANNERU)

1.6       ஹவாய்: மீலியா (MELIA)

1.7       மலையாளம்: பாலா, சம்பகம் (BALA, CHAMPAGAM)

1.8       ஸ்ரீலங்கா: அரேளியா (ARELIA)

1.9       ஆங்கிலம்  பொதுப் பெயர்: டெம்பிள் ட்ரீ (TEMPLE TREE)

1.10     தாய்: லீலா வாடி (LILA WADI)

1.11     பாலினேசியா: டைபேனி (TIPANIE)

1.12     பிலிப்பைனிஸ்: காலா சுச்சி (KALA CHUCHI)

மாயா நாகரீகக் காலத்திலும் (MAYA CIVILIZATION) மெக்சிகோவில் நிலவிய அஸ்டெக் (AZTEK – MESO AMERICAN CIVILIZATION) அரசாட்சிக் காலத்திலும், ‘பெருமாள்அரளிமரங்களை, சிறுதெய்வ வழிபாட்டுக்குரியதாக வணங்கி வந்தார்கள்.  குறிப்பாக குழந்தைப்பேறு, பெண்களின் பாலியல் உறவு போன்றவற்றிற்கான சாமி மரமாகக் கருதினர். சில பழங்குடி மக்கள் இதனை துஷ்ட ஆவிகளின் இஷ்டமரமாகவும் கருதி வந்தனர். வேப்ப மரத்தில் முனீஸ்வரன் இருக்கும் என்பது நம்ம ஊர் நம்பிக்கை.

நான், சிறுவயதில், வேப்ப மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்.  கால்கள் இல்லாமல் வெள்ளை வெளேரென்று பறந்துபோகும் மூனீஸ்வரன் இருக்கா என்று உற்றுப் பார்ப்பேன்.  குறிப்பாக உரிம நேரத்திலும் மாலை மயங்கும் நேரத்தில்தான் மூனிஸ்வரன் கண்ணுக்குத் தெரியும்.  உரிம நேரம் என்றால் பகல் 12 மணி. இப்போதுகூட வேப்ப மரங்களைப் பார்த்தால் எனக்கு மூனீஸ்வரன் ஞாபகம்தான் வரும்.  ஆனால் இது நாள் வரை, ஒரு நாள் கூட நான் மூனீஸ்வரனைப் பார்க்கவே இல்லை.  ஆனால் அந்தப் பெயரில் எனக்கு ஒரு நெருங்கிய நண்பர் உள்ளார். அவரை அடிக்கடி பார்ப்பேன்.

முனிஸ்வரன்கள்எப்படி தயாராகின்றன ? தெரியுமா உங்களுக்கு ? தவம் செய்யும் தபசிகள் தவறு செய்தால்;, அவர்களை ஈஸ்வரன் தண்டிப்பார். அவர்கள்தான் தண்டனைக் காலம் முடியும்வரை மூனீஸ்வரன்களாக அலைவார்கள்.

இந்து, ஜெயின், மற்றும் புத்த மதத்துடன் நெருங்கியத் தொடர்புடையது இந்த பெருமாள்அரளி மரம்.

பசிபிக் தீவுகளான, தாகித்தி, பீஜி, சமோவா, ஹவாய், நீயூசீலண்ட், டோங்கா மற்றும் குக்தீவுகளில், விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்களை வரவேற்கவும், விடைதரவும் பெருமாள்அரளிபூமாலைகளை, பயன்படுத்தும், வழக்கம் இன்றும் உள்ளது.

நிகரகுவா மற்றும் லாவோஸ் நாடுகளில் இதனை தேசிய மரமாக அங்கீகரித்துள்ளார்கள். இந்தியாவில் மேற்கு வங்கத்தில் இதன் பூக்களை சாவு மற்றும் இறுதிச் சடங்குகளைப் பயன்படுத்தும் பழக்கம் இன்றளவும் உள்ளது. 

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மற்றும் மலேசிய நாடுகளிலும், இடுகாடுகள் மற்றும் சமாதிகளில் இந்த மரங்களை நட்டு வைக்கிறார்கள்.  ஆயினும் சாலை ஒரங்கள், பொது இடங்கள், மற்றும், வீட்டுத் தோட்டங்களில் கூட அழகுக்காக பெருமாள்அரளி மரங்களை நட்டு வளர்க்கிறார்கள்.

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில், இந்த மரங்களின் பூவாசனையை போன்டியானக்என்ற பெண் பேயின் அடையாளமாக நம்புகிறார்கள்.  இது பற்றிய நாட்டுப்புறக் கதைகள் அங்கு நிறைய உள்ளன.

இந்தப் பூக்களின் வாசனை மற்றும் சந்தன மரங்களின் வாசனை இரண்டையும் சேர்ந்த கலவையான வாசனை வரும்படியான பொருட்கள் நாக்சம்ப்பாஎன்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள்.  நாக்சம்ப்பா அகர்பத்திகள், நாக்சம்ப்பா சோப்புகள், நாக்சம்ப்பா மெழுகுவர்த்திகள், கழிவறைகளில் பயன்படுத்தும் இதர நாக்சம்ப்பா பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தின் மேற்குமலைத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஒரு பகுதியில், மணமக்கள், திருமணத்தின் போது பெருமாள்அரளிப்பூ மாலைகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் இன்றளவும் உள்ளது.  வேறு பூமாலைகள் இதற்கு செல்லுபடி ஆகாது. தாய்லாந்து போன்ற நாடுகளில் பல்வேறு வண்ணங்களில் புதுப்புது வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கி உள்ளார்கள்.

ஊட்டச்சத்து நிறைந்த மண்ணில் நன்கு வளரும்.  ஆயினும் களி, மணல், இருமண்மாடான மண்கண்டத்திலும் நன்கு வளரும்.  நல்ல சூரியவெளிச்சம் மற்றும் நிழலான இடங்களிலும் நன்கு வளரும்.  கிளைகளின் நுனிப் பகுதியை 30 முதல் 60 செ.மீ.  நீளத்திற்கு நறுக்கி பயன்படுத்தலாம்.

பெருமாள் அரளியின் பூ, இலை, பட்டை போன்றவை பல நோய்களை குணப்படுத்த உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.

இதன் வேரில் ஒரு சிறிய துண்டினை எடுத்து சுத்தப்படுத்தி, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்துப் பின்னர் வடிகட்டி தினமும் சாப்பட்டுவர சக்கரை நோய் குணமாகும்.

அடிபட்டதனால் ஏற்படும் வீக்கங்கள், உடலில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் காயங்கள், புண்கள், மருக்கள், பற்குழிகள், பாதவெடிப்பு, தோல் நோய்கள், செரிமானப் பிரச்சினைகள், ஆகியவற்றை சரிசெய்ய, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்த, இதன் வேர்கள், இலைகள், மற்றும் பூக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

பற்களில் குழி ஏற்படுவதால் தாங்க முடியாத வலி ஏற்படும்.  அதனை அனுபவித்தவர்களுக்கு அதன் வலியின் பரிமாணத்தை உணருவார்கள்.  அப்படிப்பட்ட வலிக்கு சுலபமான வழி சொல்லுகிறது பெருமாள் அரளி.  ஓன்று அல்லது இரண்டு இலைகளை எடுத்து, கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அதனைப் பஞ்சில் நனைத்து, பல்குழி வலி எடுக்கும் இடத்தில் அழுத்திப் பிடிக்க வலி சரியாகும்.

இந்த மருத்துவ முறைகளை கைக் கொள்ள ஒரு மருத்துவரின் பரிந்துரை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

POST A COMMENT PLEASE, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

8888888888888888888888888888888888888

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...