Wednesday, June 28, 2023

FREQUENT ABORTION CONTROL BY ATHIMARAM 150 . அபார்ஷனைத் தடுக்க உதவும் அத்தி மரம்

அபார்ஷனைத் தடுக்க உதவும்
அத்தி மரம்


 CLUSTER FIG, FICUS RACEMOSA, MORACEAE

பொதுப் பெயர்: (CLUSTER FIG)

தாவரவியல் பெயர்: பைகஸ் ரெசிமோசா (FICUS RACEMOSA)

தாவரக்குடும்பம்: மோரேசியே (MORACEAE)

வீட்டுக்கு வராதவர்கள் வந்துவிட்டால்  என்ன இவ்ளோ தூரம் அத்தி பூத்த மாதிரி இருக்குசொல்லுவது வழக்கம். அத்தி மரம் பூக்கவே பூக்காது. அதனால் அத்தி மரப் பூக்களை நாம் யாரும் பார்க்கவும் முடியாது. நான் கூட சிறு வயசில் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். 

அத்தி பூக்காம காய்க்கும்னு கிராமத்தில் சொல்லுவாங்க. ஆனா அது உண்மை இல்ல. அது பூக்கும். அதன் காய்க்குள்ள இருக்கும் பூக்கள். ஒரு வகை குளவிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவியா இருக்கு. அது ரொம்ப சுவாரசியமான கதை.

அத்திப்பழம் என்பதே அதன் பூக்களின் தொகுதிதான். இதன் பெயர் சைகோனியம் (SYCONIUM)

அத்திக் காயை குறுக்காக வெட்டிப் பாருங்கள். அதன் உட்பக்கம் இருப்பவைதான் பூக்கள். இவற்றில் ஆண்பூக்கள், பெண்பூக்கள் தனித்தனியாக இருக்கும். இந்த சைகோனியம் என்பதுதான் அத்திப்பூக்களின் கோட்டை. அதற்குள் பூக்கள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது.

ஆக ஒரு சைகோனியத்தில் 50 பூக்களும் இருக்கும்.  5000 பூக்களும் இருக்கும். இந்த எண்ணிக்கை அத்தி மரத்தின் வகையைப் பொறுத்து வேறுபடும். ஆனால் அதிகபட்சம் 7000 பூக்கள் வரை இருக்கும்.

இந்த அத்திப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்த ஒரு அபூர்வமான எற்பாட்டைச் செய்துள்ளது, இந்தப் பிரபஞ்சம். இதற்கு பிரத்தியேகமான ஒரு குளவி வகைக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. அந்தக் குளவி உள்ளே நுழைவதற்கு என ஒரு சிறிய கேட் சைகோனியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து வகையான அத்தி மரங்களிலும் மகரந்த சேர்க்கை ஏற்படுத்தும் பொறுப்பு அகானிட் (ACAONID) என்ற குளவி வகைக்கு உரிமை அளித்துள்ளது.

ஆக நாம் ஓர் அத்திப்பழம் என்று சொல்லுவது ஒரு பழம் அல்ல, அது ஓராயிரத்துக்கும் மேற்பட்ட பழங்களின் கூட்டு.

சரி ! பூவுக்குள் சென்ற குளவிகள் என்ன ஆனது ?

மகரந்தத் துகள் தயாரானதும் சேகோனியத்தின் துளை குளவிகள் நுழைவதற்கு வசதியாக கொஞ்சம் பெரிதாக விரிவடையும்;. பின்னர் குளவிகள் சைகோனியத்தில் உள்ளே நுழைகின்றன.

அப்படியும் நுழையும்போது அந்தக் குளவிகளின் இறக்கைகள் உதிர்ந்து போகும். பின்னர் மகரந்த சேர்க்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டு , பெண் குளவிகள் முட்டையிட்டுவிட்டு இறந்துபோகின்றன.

இந்த முட்டைகளிலிருந்து அடுத்தத் தலைமுறைக் குளவிகள் வெளியேறுகின்றன. இடைப்பட்ட காலத்தில் அத்திப்பூக்கள் பழங்களாகின்றன.

இதுதான் அத்திப்பூக்கள் பழமான அபூர்வமான கதை.

பல மொழிப் பெயர்கள்

தமிழ்: அத்தி (ATHI)

தெலுங்கு:  பைடி (PYDI)

கன்னடம்: ருமாடி (RUMADI)

மலையாளம்: அத்தி  (ATHI)

மணிப்புரி: ஹைபாங் (HIBANG)

ஒரியா:  டிம்ரி (TIMRI)

இந்தி: கூலார் (COOLAR)

சம்ஸ்கிருதம்: உடும்பரா (UDUMBARA)

நேபாளி: குலர், டும்ரி (CULAR, DUMRI)

தாயகம்: இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி

 மருத்துவப் பயன்கள்:

அத்தி இலை வடிநீரால்  கழுவினால் காயங்கள் மற்றும் புண்கள் குணமாகும். 

அத்திப்பழ சாற்றினைக் குடிப்பதன் மூலம் உடல் தளர்ச்சி, உடல் சோர்வு ஆகியவற்றை நீக்கி உற்சாகத்தை அனிக்கும்.

தொண்டைப் புண்ணை சரி செய்ய இதன் பட்டையில் தயாரிக்கும் வடிநீரை கொப்பளிக்க வேண்டும்.

சீதபேதி, காய்ச்சல் கைகால் வீக்கம், மேலும் அவற்றால் ஏற்படும் வலியினைப் போக்கும்.

இதன் பட்டை மற்றும் பழங்களில் ரத்தக்கொழுப்பை நீக்கும் பண்புகள் உள்ளன. அத்திப் பழங்களைத் தவறாமல் உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தில் அதிகரிக்கும் சக்கரையின் அளவைக் குறைக்கும்.

இதன் பிசினை பசை போல் செய்து மேலாகப் பூச காது மற்றும் இதர பகுதிகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும். 

இதன் இலைகளில் கருப்பு நிறக் கொப்புளங்கள் போன்ற வளர்ச்சிகள் தென்படும். அவற்றை சேகரித்து 3 முதல் 4 கிராம் பாலில் அரைத்து வடிகட்டி அதனைத் தேனுடன் ஒரு நாளைக்கு இரு முறை கொடுக்க சின்னம்மை குணமாகும். இதையே தயிர் மற்றும் தேனுடன் கலந்து கொடுக்க டி.பி என்று சொல்லப்படும் எலும்புருக்கி நோய் குணமாகும்.

சளி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல், உட்பட சைனஸ்போன்றவற்றை அத்தி மரத்துப் பால் குணப்படுத்தும்.

வயிற்று வலியின் போது அத்திப் பழங்களை சாப்பிட்டால் அது விரைந்து குணமாகும்.

அத்திப் பழச் சாற்றினை 5 முதல் 10 மில்லியை சக்கரையுடன் சேர்த்து இரண்டு நாளைக்கு ஒரு முறை கொடுக்க பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் கட்டுப்படும்;.

கருவுற்ற தாய்மார்கள் அத்திப் பழத்தைப் பாலுடன் சேர்த்தோ அல்லது உணவுடன் சாப்பிட கருவில் வளரும் சிசு ஆரோக்கியமாக வளரும். அபார்ஷன் ஏற்படுவதைத் தடுக்கும்.

அத்திப் பழங்களை தயிரில் கலந்து சாப்பிட பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் மிகையான உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.

குறிப்பு: இந்த மருத்துவ மற்றும் சிகிச்சை முறைகளை அன்புகூர்ந்து ஒரு மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

அத்திமரம் பற்றி இன்னொரு சுவையான தகவல். இஷ்வாகு இனத்தைச் சேர்ந்த ராஜாக்கள் தங்கள் கிரீடத்தில் அத்திமரத் துண்டு ஒன்றினை பொருத்தி வைத்திருப்பார்கள். அதுமட்டுமல்ல அத்திமரத்தில் செய்த சிம்மாசனத்தில்தான் அவர்கள் அமர வேண்டும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...