Friday, January 27, 2023

TSUNAMI SHIELDING TREE MANGROVE - சுனாமியைத் தடுக்கும் மரவகை கண்டல்



(Kandelia Candel)


சுனாமியின் உயரமான அலைகளையும் அவற்றின்   வேகமான அலைகளையும்  தடுக்கும் ஒரே சாதனம், மீன்கள், இறால், நண்டு மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை, பெருக்குவது அலையாத்தி மரங்கள்தான். கண்டல், பூக்கண்டல், துவர்க்கண்டல் என்று அழைக்கப்படும், சுனாமியைத் தடுக்கும்  அலையாத்தி மரம், 10 மீட்டர் உயரம் வரை வளரும், தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் மரம், அரிதான அலையாத்தி மரவகைமரக்கட்டையாக, சிறந்த விறகாக, கரிகள் உற்பத்திச்செய்ய, வீடுகள் மற்றும் தட்டிகள் கட்ட, இப்படி கடலோரச் சமூகத்தினரையும், கடலோரச் சூழலையும்  பாதுகாக்கவும், பயன்படும் மரம். 

பட்டைகள் முரட்டுத் தோல்களைப் பதனிட உதவும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சாயம் ஏற்ற உதவும், இதில் 17 சதவிகிதம் டேனின் சத்து அடங்கியுள்ளது.

தமிழ் பெயர்கள்: கண்டல், பூக்கண்டல், துவர்க்கண்டல் (KANDAL, PUKKANDAL, THUVAR KANDAL)

பொதுப்பெயர்: NARROW LEAVED KANDELIA, DICHOTAMOUS CYMED MANGROVE

தாவரவியல் பெயர்: கண்டேலியா கேண்டல் (Kandelia Candel)

தாவரக்குடும்பம்: ரைசோப்போரேசி (RHIZOPHORACEAE)

பிற மொழிப் பெயர்கள்:

பெங்காலி: குரியா (GURIA)

கன்னடா: கண்டேல் (KANDALE)

மலையாளம்; செரு-அன்டெல்(CHERU-ANTEL)

மராத்தி: கண்டல் (KANDAL)

ஒரியா: ரசூனியா(RASUNIA)

தெலுங்கு: கண்டிகலா, துவர்கண்டன் (KANDIKALA, THUVARKANDAN) 

பரவி இருக்கும் இடங்கள் 

தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, மேற்கு இந்தியா முதல் போர்னியோ வரை, மற்றும் வியட்னாம் முதல் ஜப்பான் வரை கடலோரப் பகுதிகளில், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மலெசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்  இந்த வகை மரங்கள் பரவியுள்ளன. முக்கியமான இன்னொரு சிறப்பு, இவை எல்லாம் மாங்குரோவ் மரங்கள் இருக்கும் இடங்கள்  

பண்புகள்:

மாங்குரோவ் அல்லது அலையாத்தி மரங்கள் வளரும் இடங்களுக்கு மூன்று அடிப்படை பண்புகள் இருக்கும். ஒன்று வெதுவெதுப்பான தட்பவெப்பநிலை, இரண்டாவது உப்புத்தன்மையுடன் கூடிய சூழல் மற்றும் எப்போது நீர் கோர்த்தபடி இருக்கும் சதுப்பு நிலம்.

தாவர  வகைப்பாடு: புதர்ச்செடி / குறுமரம்

தாவரப்பண்புகள்

மரம்: சிறிய மரம், 10 மீட்டர் அல்லது சுமார் 30 அடி உயரம் வரை வளரும், சாம்பல் நிறம் முதல் சிவப்பு மற்றும் காவி  நிறத்தில்இருக்கும். பருத்த அடிமரம், மற்றும் மூச்சு வேர்கள் இந்த வகை மரத்தில் இல்லை.   

இலைகள்: எதிரெதிர் அமைந்த இலைகள், இலைப் பரப்பு பளபளப்பாக இருக்கும், இளம் பச்சை நிறமாக இருக்கும், நீண்ட கோள வடிவில் இருக்கும்,

ரைசோபோரேசி தாவர குடும்பம்

இந்த குடும்பத்தில் 147 வகை தாவர இனங்கள் உள்ளன, இதில் அலயாத்தி மரவகைகளும் உள்ளன, இதர மரவகைகளும் உள்ளன. அலையாத்தி மரவகைகளில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன, அவை ரைசோபோரா, கண்டேலியா, மற்றும் ப்ருகுயெரா (RHIZOPHORA, KANDELIA, SEIOPS, BRUGUIERA). அதிக உப்புத்தன்மையை தாங்கும் திறன், மூச்சு வேர், கன்றுகளை உற்பத்தி 

பூக்கள்: வெண்மையான பூக்கள், எண்ணற்ற மகரந்த்த் தாள்களுடன் இருக்கும்,

விதைகள்: 25 முதல் 40 செ.மீ. கன்றுகளாக உற்பத்தி செய்யும்

வளரும் இடம்: அலை வீசும் ஆற்றங்கரைகள், மற்ற அலயாத்தி தாவர வகைகளுடன் வளர்வதைப் பார்க்கலாம். ஆனால் இதனை அரிதான அலையாத்தி மரவகை என குறிப்பிடுகிறார்கள்.

தோல் பதனிடலாம்

மரக்கட்டைப் பயன், சிறந்த விறகு மரம், கரிகள் உற்பத்தி செய்யலாம், வீடுகள் மற்றும் தட்டிகள் கட்டலாம்.  

பட்டைகள் முரட்டுத் தோல்களைப் பதனிட உதவும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சாயம் ஏற்ற உதவும், இதில் 17 சதவிகிதம் டேனின் சத்து அடங்கியுள்ளது.

மருத்துவப்பயன்களைக் கண்டுபிடிக்க ஆய்வுகள் தேவை.

சிவன் கோயில் கோயில்மரம்

நாகப்பட்டினம் மாவட்டம், மகேந்திரபள்ளி திருமேனி அழகேஸ்வரர் சிவன் கோயிலின் கோயில் மரம்.

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்

உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காடு என்னும் பெருமைக்கு உரியது பிச்சாவரம் காடுகள் என்று சொல்லுகிறார்கள். இது வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் முகத்துவாரங்களுக்கு இடையே அமைந்துள்ளது  பிச்சாவரம் அலையாத்திக் காடுகள். 

பிச்சாவரம் காடுகளின் அலையாத்தி மரவகைகள், அவிசென்னியா ஆல்பா (Avicennia alba), அவிசென்னியா பலனோபோரா (A.balanophora), அவிசென்னியா பைகலர் (A.bicolor), அவிசென்னியா ஜெர்மின்னஸ் (A.germinans), அவிசென்னியா இன்டெக்ரா(A.integra), அவிசென்னியா மெரினா (A.marina), அவிசென்னியா அவிசென்னியா அஃபிசினாலிஸ் (A.officinalis), அவிசென்னியா (A.schaueriana), அவிசென்னியா (A.tonduzii moldenki). 

பிச்சாவரம் காடுகளின் முக்கிய அலையாத்தி மரவகைகள், ரைசோபோரா முக்ரனேடா(Rhizophora mucranata), ரைசோபோரா (அப்பிகுலேட்டா) (Rhizophora apiculata), ரைசோபோரா மேங்கில் (R.mangle), ரைசோபோரா ஹரிசோனி (R.harrisonii), ரைசோபோரா ரெசிமோசா (R.racemosa), ரைசோபோரா சமோயென்சிஸ் (R.samoensis), ரைசோபோரா ஸ்டைலோசா(R. stylosa). 

சுந்தர்பன் காடுகள்

உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் என்பது சுந்தர்பன் காடுகள். சுந்தர்பன் அலையாத்திக் காடுகள் வங்காள தேசத்தில் உள்ளது.

வங்காளதேசத்தில் பலேஷ்வர் மற்றும் ஹரின்பங்கா ஆறுகளுக்கு இடையே உள்ளது சுந்தர்பன் அலையாத்தி காடுகள். 1,40,000 எக்டர் நிலப்பரப்பில் சுந்தர்பன்  காடுகள் அமைந்துள்ளது.

கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா ஆறுகளின் முகத்துவாரப் பகுதியில் உள்ளது இந்த சுந்தர்பன் அலையாத்திக் காடுகள்.  

மொத்த சுந்தர்பன் அலையாத்தி காடுகளில் 60 சதம் வங்காள தேசத்திலும் 40 சதம் இந்தியாவிலும் உள்ளது.

அலையாத்திக் காடுகள்  சர்வதேச அளவில் 19% இந்தோனேசியாவிலும் 10 % ஆஸ்திரேலியாவிலும், பிரேசில் மற்றும் நைஜீரியாவில் தலா 7% ம் உள்ளன.

அலையாத்தி வகைகள் 

சிவப்பு அலையாத்தி (Rhizophora mangle),வெள்ளை அலையாத்தி (Laguncularia racemosa) , கருப்பு அலையாத்தி (Avicennia germinans), மற்றும் பட்டன்வுட் (Conocarpus erectus)என நான்கு அலையாத்தி வகைகள் உண்டு. 

1076 கிலோமீட்டராக இருக்கும் தமிழ்நாட்டின் கடலோரத்தில் முகத்துவாரப் பகுதியில் அல்லது  உப்பங்கழிகளின் கரையோரங்களில் அலையாத்தி மரங்களை நட்டு வளர்ப்பது, ஏற்கனவே இருக்கும் மரங்களைப் பாதுகாப்பது, பராமரிப்பது. மட்டுமே நம்மை சுனாமி சூறாவளி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும், மீன்கள், இறால், சுரா, நண்டு  ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.  

இந்த செய்தியை  உங்களுக்குத் தெரிந்த கடலோரத்தில் வசிக்கும் மீனவ நண்பர்களுக்கும் இதர நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். இதுபற்றி விளக்கம் அல்லது விவரம் தேவை என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.  

GNANASURIA BAHAVAN DEVARAJ

gsbahavan@gmail.com

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...