Wednesday, January 25, 2023

THIRUVARUR SITHAMUR TEMPLE TREE - திருவாரூர் சித்தாமூர் சிவன் கோயில் தலமரம்

 

திருவாரூர்

சித்தாமூர் சிவன் கோயில்

தலமரம்

(FIRE FLAME BUSH)


எறுழம் எனும் அழகு சிறுமரம், பழங்குடி மக்களின் பிரபலமான மூலிகை. மிகுதியாக தேவைப்படும் அருகிவரும் மூலிகைச்செடி, ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியமான மூலிகை. இது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பசுமை மாறா காடுகளில் இருக்கும் ஒரு மரவகை என்கிறது தமிழ் இலக்கியம். 

தமிழ் பெயர்: எறுழம், வேலக்காய், காட்டாத்தி (ERUZHAM, VELAKKAAI, KATTATHI)

பொதுப்பெயர்: பயர் பிளேம் புஷ், ரெட் பெல் புஷ் (FIRE FLAME BUSH, RED BELL BUSH)

தாவரவியல் பெயர்: வுட்ஃபோர்டியா ஃபுரூடிகோசா (WOODFORDIA FRUTICOSA).

தாவரக்குடும்பம்: லித்ரேசியே (LYTHRACEAE)

பலமொழி பெயர்கள் (VERNACULAR NAMES)

இந்தி: தவாய் (DHAVAI)

மராத்தி: தோவாரி (DOWARI)

மலையாளம்: தத்ரிபுஷ்பி (TATRIPUSHPI)

தெலுங்கு:ஜர்கிசெரிங்கி (JARGI SERINGI)

கன்னடா: தாமரபுஷ்பி (THAMARAPUSHPI)

ஒரியா: தோபோ (DHOBO)

கொங்கணி: தவுரி (DHAURI)

உருது: (JETICO)

குஜராத்தி: (DHAWANI)

சமஸ்கிருதம்: (SINDHURI)

நேபாளி: (DHAYANRO)

மிசோ: (AI-NAWN) 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் குறிப்புகள் 

இதன் பூக்கள் குளிர் காலத்தில் பூக்கும்இதன் தண்டும் இலைகளும் நோய் தீர்க்கும் மருத்துவ பண்புகளைக் கொண்டதுஇது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பசுமை மாறா காடுகளில் இருக்கும் ஒரு மரவகை என்கிறது தமிழ் இலக்கியம்.

பெருமழையை எதிர் நோக்கும் இந்த பூக்கள் நீல மணிகள் போல பூத்திருக்கும் அடர்ந்த புதர்களாய் இருக்கும்இவை மழை முடிந்ததும் இதன் பூக்கள் வெண்மையாக மாறி விடும் என்கிறது தமிழ் இலக்கியம் நற்றிணையின்  பாடல் ஒன்று. 

‘ வருமழைக்கு  எதிரிய மணிநிற இரும்புதல்

நரைநிறம் படுத்த நல் இணர்ந்து எறுழ்வீ

தா அம் தேரலர் கொல்லோ சேய்  நாட்டு

களிறு உதைத்து ஆடிய கவிழ்கண் இடு நீறு

வெளிறு இல் காழ் வேலம் நீடிய

பழங்கண் முது நெறி மறைக்கும்,

வழங்கு அருங் கானம் இறந்திசினோரே‘ ?

(நற்றிணை 302 – 4-5 

பொருள் தேடி வெளியூர் சென்றான் தலைவன், மழைக்காலத்தில் வருகிறேன் என்று சொன்னான், கார்காலம் வந்து, கொன்றை பூக்கள் பூத்தது, கூதிர்காலம் வந்து காடுமேடெல்லாம் பூத்துக்கிடக்கும் எறுழம் பூக்களைக்கூடவா பார்க்கவில்லை, என்று வருந்துவதாக மருதன் இள நாகனார் எழுதிய பாடல்,   

நூறு பூக்களைத் தனது ஒரே பாடலில் பாடிய கபிலர் தனது பாடலில் ‘எரிபுரை எறுழம்’ என்று ஏற்றிப் பாடுகிறார்.

பரவி இருக்கும் இடம் (DISTRIBUTION):

  • இந்தியாவின்வடகிழக்கு மாநிலங்கள்
  • தெற்கு கொங்கணம்
  • கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகள்
  • இமய மலையின் தாழ்வான பகுதிகள்
  • மடகாஸ்கர்
  • பாகிஸ்தான்
  • இலங்கை
  • உலகம் முழுக்க பரவலாக

மருத்துவப் பயன்கள் (MEDICINAL USES)

பழங்குடி மக்களின் பிரபலமான மூலிகை. மிகுதியாக தேவைப்படும் அருகிவரும் மூலிகைச்செடி

ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியமான மூலிகை.

மருத்துவப்பயன்: பாரம்பரிய மருத்துவத்தில், பரவலாக பயனாகிறது. கஷாயம், சூரணம், தைலம், குடிநீர், எண்ணெய்மற்றும் இதர வடிவங்களில் மருந்துகள் தயாரிக்கிறார்கள்

பலவிதமான நோய்களை குணப்படுத்தும்.

  • கருத்தரிப்பு
  • மாதவிடாய் சீரின்மை
  • வயிற்றுப்போக்கு
  • சீதக்கழிச்சல்
  • இருமல்கபம்காசம்
  • சிறுநீர்க்கல்நீர்க்கட்டு
  • நீரிழிவு
  • புற்றுநோய்
  • மஞ்சள் காமாலை
  • மூலம்
  • மேகவெட்டை

சில முக்கிய மருத்துவ  குணங்கள் 

  • பூ கசாயம் கருவாய் மற்றும் மலப்புழையின் தசைத் தளர்வை நீக்கும்.
  • பூக்களும் வேர்களும் முடக்கு வாதத்தை குணப்படுத்தும்.
  • முதுகுத்தண்டு மற்றும் விலாஎலும்பு முறிவை சரி செய்யும்.
  • வாய் மற்றும் கால் கோமாரி நோயை குணப்படுத்தும்இது மனிதர்களையும் பிராணிகளையும் தாக்கக் கூடிய ஒரு நோய்இது கொரோனா மாதிரியான சூனாட்டிக் நோய் (ZOONATIC DISEASE).
  • இதன் பூக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்
  • இதன் பூக்கள், இலைகள், பழங்கள், பிசின்வேர் ஆகியவை அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மரங்களின் இயல்பு (PROPERTIES):  

புதராக வளரும் சிறு மரம். அதிகபட்சமாக 3 மீட்டர் வரை உயரமாக வளரும்நொச்சி மாதிரி நீண்ட காம்பில்லாத அசல் பச்சை  நிறக்  கூர்மையான முனை கொண்ட இலைகள்காம்புகளின்றி, தொட்டுப்பார்த்தால் மெத்தென்று தோல் போல இருக்கும்.

பூக்கள 

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வண்டி வண்டியாய்ப் பூக்கும், இலை கணுக்களில் பூக்கள் தோன்றும். 2 முதல் 16 பூக்கள் கொத்தாகப் பூக்கும் 

பூவிதழ்கள் கவர்ச்சிகரமான மிளகாய்ப் பழ சிவப்பு நிறத்தில், வாயகன்ற ஊதுகுழல் மாதிரியான வடிவத்தில், நவீன ஓவியங்கள் மாதிரி பளிச்சென இருக்கும் 

அதனால்தான் இதனை ஆங்கிலத்தில் இதற்குநெருப்புப்புதர்என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

வட இந்தியாவில் இதனை தத்ரிபூவு என்கிறார்கள். மலர்ப் பயிராக சாகுபடி செய்கிறார்கள்.

ஒரு கிலோ உலர்ந்த எறுழம் பூக்கள் மருந்து கடைகளில் இன்றைய தேதியில்  ஆயிரம்  ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

விதைகள்: 

மிகச்சிறியவை, நுண்ணிய விதைகள், ஏராளமான எண்ணிக்கையில் இருக்கும், வறண்ட பகுதிகளில்தரிசு நிலங்களில் மானாவாரியாக முளைத்து கிடக்கும் 

எறுழம் தல மரமாக உள்ள கோயில்கள 

எறுழம் தமிழகத்தில் நான்கு சிவன் கோயில்களில் கோவில் மரமாக கொண்டாடப்படுகிறது.

  • சித்தாமூர் சிவன் கோயில்திருவாரூர் மாவட்டம்.
  • திருச்செங்காட்டங்குடி சிவன் கோயில்நாகப்பட்டினம் மாவட்டம்
  • திருமலை சிவன் கோயில்சிவகங்கை மாவட்டம்
  • நாகமங்கலம் சிவன் கோவில்பெரம்பலூர் மாவட்டம்

வளர்ப்பு முறை (PROPAGATION):

  • விதை முளைப்புத் தன்மை மிகக்குறைவு.
  • 0.5 முதல் ஒரு சதம் வரை.
  • கிளைத் துண்டுகளை நடவு செய்வது சிறப்பு.
  • இதன் சாகுபடியை ஊக்குவிக்கிறார்கள்.
  • தமிழகத்தில் இதனை லாபகரமாகப் பயிரிடலாம்.

 

 

 

 

 

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...