Monday, September 20, 2021

HOW TO PLANT HYBRID COCONUT SEEDLINGS - விரிய ஒட்டு தென்னங் கன்றுகளை நடவுசெய்யும் வழிகள்

 

தோட்டம் போடலாம் வாங்க - தொடர் 

GARDENING TIPS- SERIAL

விரிய ஒட்டு தென்னங் ன்றுகளை

நடவுசெய்யும் வழிகள்

HOW TO PLANT COCONUT SEEDLINGS 

My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

சமீபத்தில் ஆம்பூருக்கு பக்கத்தில் ரெட்டிமான் கிராமத்தில் இருக்கும் “டீஜே வீரிய ஒட்டு தென்னை நாற்றங்கால்’ லுக்குப் போக பச்சை குப்பம் ரயில்வே கேட்டிற்கு எதிரே பாலாற்றை தரைப்பாலம் தாண்டி ஒல்லியான ஒரு தார் சலையில் சென்று ஒரு கன்றுக்கு 600 ரூபாய் தந்து 20 கன்றுகள் வாங்கி வந்தோம்.

பூமுருகன் என்ற ஒரு அக்ரி டிப்ளமா படித்த தம்பி “டீஜே சம்பூர்ணா” ரகத்தின் சிறப்புகள்பற்றி விளக்கமாக பொருமையாக எடுத்து சொன்னார். சுற்றிலும் இருக்கும் மஞ்சள் மஞ்சளாக கொத்து கொத்தாக காய்த்திருக்கும் குட்டை ரக மரங்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

தென்னங்கன்றுகளை வாங்கிக்கொண்டு வரும்போது பூமுருகன் தம்பி ஒரு கையேடு தந்தார். அதில் தென்னங்கன்றை எப்படி நட்டு வளர்ப்பது என்ற ஒரு கையேடு ஒன்றினை தந்தார்.

அதில் இருந்த விவரங்களின் அடிப்படையில் இரண்டு தென்னங்கன்றுகளை எனது தோட்டத்தில் நட்டேன். அதற்கான வழிமுறைகளை உங்களுக்கு பயன்படும் வகையில் இங்கு தந்துள்ளேன்.  

 

தென்னங் ன்றுள் நடவு

தென்னங் ன்றுகளை நடவு செய்ய 3 x 3 x 3 அடி அளவுள்ள குழிகளை எடுக்கவேண்டும். பாறைகள் மற்றும் கற்கள் நிறைந்த நில பகுதிகள் 4 x 4 x 4 அடி அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும் .

 

இலை தழை மணல் தொழு உரம்

குழிகளை நிரப்பும் போது அவற்றில் இலை தழை , குழியில் இருந்து எடுத்த மேல் மண், அத்துடன்  மணல் , தொழு உரம் கலந்து மண்ணால் நிப்ப வேண்டும் .

ஒவ்வொரு குழியிலும் 10 முதல் 15 கிலோ பசும்தழைகளைப் போடவேண்டும். பசும் தழைகளுக்கு பதிலாக உலர்ந்த இலச்சருகுகளையும் போடலாம்.

அதன் மீது  குழியில் இருந்து எடுத்த மேல் மண்ணை ஒரு அடி நிப்ப வேண்டும் .

 

வேப்பம் பிண்ணாக்கு

மீதமாக உள்ள மேல் மண்ணுடன் சமமான அளவு ன்கு மக்கிய தொழு உரம் 10கிலோ  மற்றும் 5 முதல் 10 கிலோ மணல் மற்றும் அரை கிலோ வேப்பம் பிண்ணாக்கை  கலந்து குழியை நிரப்ப வேண்டும் .

குழிகளில் வெப்பம் பிண்ணாக்கை இடுவதனால் கரையான்கள் மற்றும் வேர் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

 

வேஸ்ட் டிகம்போசர் மற்றும் இ.எம் கரைசல்

குழிகளை நிரப்பும் மன்ணுடன் வேஸ்ட் டீ காம்போஸ்டர் மற்றும் .எம். கரைசலை தெளித்து கலந்து நிரப்பினால் அவை பூச்சிப் பூ தக்குதலில் இருந்து பதுகாக்கும். மண்ணின் கடினத்தன்மையை குறைத்து பொலபொலவென  ஆக்கும். மண்கன்டத்தில் நுண்ணியிர்களை பெருக செய்யும். பயிர் ட்டசத்துகளை பயிர்களுக்கு கிடைக்கச் செய்யும் .

 

ன்றுள் நடவு

நிலமட்டத்தில் இருந்து 6 முதல் 10 அங்கும் கீழ் இருக்குமாறு மண்கவையை நிரப்பிய பின்னர் ன்றுகளை நடவு செய்ய வேண்டும் .

நீர் தேங்கும் நிலப்பகுதிகளில் குழிக்கு மேல் ஒரு அடி உயரம் இருக்கும் மாறு மண்ணை குவித்து அதன் மீது ன்றுகளை நடலாம் .

 

மண்புழுஉரம் குளத்து வண்டல்மண்

ன்றுகளை நடவுசெய்த பின்னால் ஒரு குழிக்கு 2 கிலோ மண்புழு உரம் இருவதால் ன்றுகள் நன்றாக வளரும் .

உங்கள் பகுதியில் குளத்து வண்டல் மண் கிடைத்தால் குழிகளை நிரப்பும் மண்ணுடன் இரண்டு கூடை குளத்து வண்டல் மண் சேர்த்துக் கொள்ளாம் .

குழிகளை நிரப்பி முடித்த பின்னால் அதன் மத்தியில் ஒரு அடி நீளம் அகம் ஆழத்திற்கு பள்ளம் எடுத்து நடவேண்டும்.

ன்றுகளை நட்டுமுடித்த பின்னால் போதிய அளவு தண்ணீர்  ஊற்றவும். இது மண் கலவைகள் ன்கு படியவும் வேர் பிடிக்கவும் உதவும்.

அதன் பின்னர் மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அதிக தண்ணீர் ராமல் அளவாக தர வேண்டும்.

இன்னும் சிறப்பாக தென்னங்கன்றுகளை நடவு செய்யும் அனுபவம் உள்ளவர்கள் அவற்றை என்னோடு பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.  

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

Tuesday, September 14, 2021

DRAGON FRUIT CAN WE GROW ON THE TERRACE?, அது என்ன டிராகன் ஃபுரூட் மாடியில் வளர்க்கலாமா ?

 



GARDENING TIPS – SERIAL

வாங்க தோட்டம் போடலாம்தொடர்

அது என்ன  டிராகன் ஃபுரூட்

மாடியில் வளர்க்கலாமா ?

DRAGON FRUIT CAN WE GROW ON THE TERRACE?

Sunday, September 12, 2021

HOW TO PLAN YOUR HOME GARDEN ?, வீட்டுத்தோட்டம் அமைக்க திட்டமிடுவது எப்படி ?

 


GARDENING TIPS – SERIAL

வாங்க தோட்டம் போடலாம் – தொடர்

வீட்டுத்தோட்டம் அமைக்க திட்டமிடுவது எப்படி ?

HOW TO PLAN YOUR HOME GARDEN ?

CARE TO DESERT ROSE PLANTS, டெசர்ட் ரோஸ் பரமரிப்பு


GARDENING TIPS – வாங்க தோட்டம் போடலாம்

டெசர்ட் ரோஸ் செடிகளை பரமரிப்பது எப்படி ?

HOW TO GIVE CARE TO DESERT ROSE PLANTS ?

உலகம் முழுவதும் டெசர்ட் ரோஸ் என சொல்லப்படும் பாலைவன ரோஜா ஒரு பத்து பன்னிரண்டு அடி உயரத்துடன், பாட்டில் மாதிரி  வளரும் விச்சித்திரமான குறுமரம். ஏலியன் தீவு என சொல்லப்படும் ‘சொகோத்ரா ஐலண்ட்’டிற்கு சொந்தமான மரம் மற்றும் சகாரா  பாலைவன மரம் எனும் பெருமைக்குரியது.

நிறைய இந்திய வீடுகளில் இதனை கற்றாழை வகை செடி என்று நினைக்கிறார்கள். உண்மையில் இது அரளி செடியின்  உறவுக்கார செடி. ‘அப்போசயனேசி’ தாவர குடும்பத்தை சேர்ந்தது. விச்சித்திரமான அதன் உருவத்தினால் கவரப்பட்டும் இதனை ஒரு பிரமிப்புடன் வளர்க்கிறார்கள்.

குறைவான கவனிப்பு, குறைவான தண்ணீர் தேவை, குறைவான ஊட்டச்சத்து, தேவை, மற்றும் நிறைவான சூரிய ஒளியின் உதவியுடன் ஒரு ஆண்டிற்கு ஒரு அடி உயரம் வளரும் அரியவகை மரம்.

ஐம்பது முதல் அறுபது ஆண்டுகளில் பத்து முதல் பன்னிரண்டு அடி உயரம் வளர்ந்து ரோஜா பூக்களை நினைவுபடுத்தும்படியான ஊதா,  மஞ்சள், வெள்ளை, மற்றும் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் அழகான பூக்களைத்தரும் மரம்.

வீட்டுத் தோட்டத்தில் நிலத்திலும் தொட்டியிலும் போன்சாய் செடியாகவும் வைத்து வளர்க்க ஏற்றது இந்த டெசர்ட் ரோஸ் மரம்.

கவனிக்க வேண்டியவை

1. நல்ல சூரிய ஒளியும் கற்றோட்டமும் கிடைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

2. செடியினை எங்கு நட்டாலும் நல்ல வடிகால் வசதி வேண்டும்.

3. வடிகால் வசதியை மேம்படுத்த நிலத்து மண்ணுடன், மணல், செம்மண்,  மண்புழு உரம் ஆகியவற்றை சமமாகக் கலந்து தொட்டி மண்ணை தயார் செய்யலாம்.

4. தொட்டியின் அடிப்பகுதியில் கால்பாகம் சரளையும் பெரு மணலும் கலந்து நிரப்பினால் அதிகப்படியான தண்ணீர் வடிய வசதியாக இருக்கும்.

5. டெசர்ட்ரோஸ்  செடிகளுக்கு தண்ணீர் கொடுப்பதில் “நீர் மறைய நீர் கட்டு” எனும் உத்தியை கடைபிடிக்கலாம்.

6. அதிகப்படியான தண்ணீர் எப்போதும் தங்கி இருந்தால் அதன் வேற்கள் அழுகி செடிகள் இறந்து போகும்.

7. மழைக்காலத்தில் மழை இல்லாத போது மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது.

8. மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யம், வேஸ்ட் டிகம்போசர் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றினை மாதம் ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

9. டெசர்ட்ரோஸ் பற்றிய கூடுதலான தகவல்களை தெரிந்துகொள்ள “DESERT ROSE” என்ற ஆங்கில பெயரிலும் :”ADENIUM OBESUM” என்ற தாவரவியல் பெயரிலும் வலைத்தளத்தில் தேடலாம்.

அன்பின் இனிய நண்பர்களே உங்கள் தோட்டத்தில் “டெசர்ட்ரோஸ்” வைத்திருக்கிறீர்களா ? உங்கள் அனுபவத்தை எனக்கு சொல்ல முடியுமா ? அதுபற்றிய முக்கிய தகவல் தெரிந்திருந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

பூமி ஞானசூரியன், தொலைபேசி எண்: +91 8526195370

 

 

 

  

 

 

PREPARATION OF ORGANIC LIQUID MANURE, இயற்கை முறையில் திரவ உரம் தயாரிப்பு


PREPARATION OF ORGANIC LIQUID MANURE

இயற்கை முறையில் 

திரவ உரம் தயாரிப்பு

 

அதிக செலவில்லாமல், சிக்கனமாக நமக்கு சுலபமாக கிடைக்கும் மூன்று வகையான பழங்களையும் கொஞ்சம் வெல்லமும் ரு கோழிமுட்டையும் சேர்த்து ஒருவாரம் புளிக்க வைத்து தயாரிக்கும், திரவ நுண்ணுயிர் உரம் இது,

எல்லா தாவரங்களையும் வளர்க்க உதவும் இந்த  நூண்ணுயிர் கரைசலை எப்படி தயரிப்பது என்று உங்களுக்கு சொல்லுகிறேன்.

இந்த கரைசலில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக அமிலங்களை உருவாக்குகின்றன. இந்த அங்கக அமிலங்கள் அங்ககப்பொருட்களை விரைவாக மக்க வைத்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்கச் செய்கின்றன.

 

தேவைப்படும் பொருட்கள்

1. கனிந்த வாழைப்பழம் 1 கிலோ

2. கனிந்த ப்ப்பாளிப்பழம் 1 கிலோ

3. கனிந்த பூசணி பழம் 1 கிலோ

4. நாட்டு கோழிமுட்டை – 2

5. நாட்டு வெல்லம் – 1 கிலோ

6. தண்ணீர் – 100 லிட்டர்

7. 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாய் அகன்ற டின் அல்லது பாரல்

செய்முறை

1. மூன்று வகை பழங்களையும் தனித்தனியாக, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அவற்றைத் தனித்தனியாக பிசைந்து கூழாக க்கிக் கொள்ளுங்கள்.

2. அந்த மூன்று வகையான பழக்கூழையும் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின்னில் போட்டுக் கொள்ளுங்கள்.

3. நாட்டு கோழிமுட்டைகள் இரண்டையும் உடைத்து ஓட்டுடன் பழக்கூழுடன் போட்டுக்கொள்ளுங்கள்.

4. நாட்டு வெல்லத்தை நன்கு உடைத்து பொடியாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கட்டிமுட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். அந்த வெல்லக்கரைசலையும் பழக்கூழில் ஊற்றுங்கள்.

5. அத்துடன் நூறு லிட்டர் பேரல் ஏறத்தாழ நிறையும் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

6. பின்னர் நீளமான, உறுதியான ஒரு குச்சியினால் அந்த கரைசலை வலது பக்கம் இஃபட்து பக்கம் என மாற்றிமாற்றி சுழற்றி நன்கு கலக்குங்கள்.

7. பேரலுக்கு மூடி இல்லை என்றால் கவலை வேண்டாம், பருத்தி நூலில் நெய்த ஒரு பெரிய துண்டு அல்லது வேட்டி அல்லது  மெல்லிய போர்வை துணியினால் மூடி கட்டுங்கள்.

8. அந்த திரவ நுண்ணுயிர் அடங்கிய பேரலை நிழலான ஒரு இடத்தில் அல்லது ஒரு மரத்தடியில் வையுங்கள்.

9. தினசரி அந்த பேரலைத் திறந்து அந்த நீளமான குச்சியினால் வலது பக்கம் ஒரு 30 முறையும் இடது பக்கம் ஒரு 30 முறையும் சுழற்றி  நன்கு கலக்குங்கள். பின்னர் மறுபடியும் மூடி வைத்துவிடுங்கள்.

10. ஒரு வாரம் கழித்து இந்த கரைசலில் போதுமான நுண்ணுயிர்கள் பெருகி இருக்கும். இப்போது இந்த திரவ நுண்ணுயிர் உரம் செடிகளுக்கு ஊற்ற தயார்.

எப்படி பயன்படுத்துவது ?

1. இந்த நுண்ணுயிர் திரவ உரக்கரைசல் ஒரு லிட்டருக்கு  ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து எல்லா வகையான  செடிகளுக்கும் ஊற்றலாம்.

2. செடிகளின் அளவைப்பொறுத்து அரைக்குவளை, ஒரு குவளை என ஊற்றலாம், ஒன்று அல்லது இரண்டு லிட்டர் கூட ஊற்றலாம்.

3. இந்த வளர்ச்சி ஊக்கி நுண்ணுயிர் உரக்கரைசலை 15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

4. இந்த நுண்ணுயிர் திரவ உரக்கரைசலை ஏழு நாட்களுக்கு பிறகு முழுவதுமாக பயன்படுத்த வேண்டுமா என்ற சந்தேகம் எழும். இதனை ஒரு மாதம் வரை கூட வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இந்த திரவ நுண்ணுயிர் உரக்கரைசலை தயாரித்து  பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் அனுபவத்தை எனக்கு சொல்லுங்கள்.

பூமி ஞானசூரியன், தொலைபேசி எண்: 8526195370

.

 

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...