Wednesday, September 13, 2017

குடசப்பாலை - சிற்ப வேலைக்கான சிறந்த மரம் KUDASAPPALAI - SUITED FOR MAKING STATUES


குடசப்பாலை - 
சிற்ப வேலைக்கான 
சிறந்த மரம்

KUDASAPPALAI - 
SUITED FOR MAKING
STATUES


1. மரத்தின் தமிழ்ப் பெயர் :  குடசப்பாலை

2. தாவரவியல் பெயர் : HOLLARHENA ANTIDYSENTRICA

3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :  EASTER TREE

4. தாவரக்குடும்பம்  : அபோசையனேசி (APOCYNACEAE)

5. மரத்தின் வகை  :  அலங்கார அழகுமரம்.

6. மரத்தின் பயன்கள்  :

தழை :  கால்நடைகளுக்கு தீவனமாகும்.
   
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.

பூக்கள் : சமைத்து உண்ணலாம்.

காய் : விதைப் பஞ்சு,  தலையணைக்குள்  பொதியலாம்.

பால் : மரத்திலிருந்து எடுக்கும்  பாலில், இரப்பர் மற்றும் ரெஸின் தயாரிக்கலாம். 

பிசின் : கோந்து தயாரிக்கலாம்.
 
மரம் : கடைசல் வேலைகள்  மற்றும் சிற்ப வேலைகளுக்கு ஏற்ற மரம்,

இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க
 விறகாகும். 
 
 சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி
 காற்றை தூய்மைப்படுத்தும். 
    
சிறப்பு செய்திகள் : 

வெண்ணிற பூக்களையுடைய அழகிய குற்று மரம்.
 

ஈஸ்டர் பண்டிகையின் போது,  தேவாலயங்களை அழகுபடுத்துவதற்கென்றே,  பூக்கும்.

சிற்ப வேலைகளுக்கான மரம்; அதனால் 'ஐவரி  ட்ரீ" எனப் பெயர் பெற்ற மரம்.

வால்மீகி இரமாயணம் மற்றும்  காளிதாசரின் காவியங்களில்  கடஜாஎன்று  பெயர் பெற்றுள்ளது. 
          
7. மரத்தின் தாயகம் :  இந்தியா --  வங்காளம்  ஹல்லரினா

8. ஏற்ற மண் :  மணல்சாரி மலை மண்.

9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி.

10. மரத்தின் உயரம் :  9 - 12  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370





No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...