Tuesday, May 31, 2016

இயற்கை விவசாயம் - பஞ்சகவ்யம் அமுதக்கரைசல் தயாரிப்பது எப்படி ? - HOW TO PREPARE PANCHAKAVYAM ?

இயற்கை விவசாயம்

பஞ்சகவ்யம்  

அமுதக்கரைசல் 

தயாரிப்பது எப்படி ?


HOW TO PREPARE

PANCHAKAVYAM &

AMUTHA KARAISAL ?


  • பஞ்சகவ்யம் ஒரு இயற்கை உரம்.
  • பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது.
  • உரமாகவும், பூச்சிக் கொல்லி மற்றும் பூசணக் கொல்லியாகவும், பயன்படுகிறது.
  • மண்ணிண் பௌதீக தன்மையை மேம்படுத்தி, நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவுகிறது.
  • இதை காசு கொடுத்து வாங்க  வேண்டாம். நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
பஞ்சகவ்யம் தயாரிக்க தேவையான பொருட்கள்.

  • பசுவின் சாணம் - 7 கிலோ
  • பசுவின் கோமியம் - 10 லிட்டர் 
  • பசு நெய்      -1 கிலோ 
  • பசும்பால் - 3 லிட்டர் 
  • பசுவின் தயிர் - 2 லிட்டர் 
  • தண்ணீர்        -10 லிட்டர் 
  • இளநீர் - 2 லிட்டர் 
  • வெல்லம் -3 கிலோ 
  • நன்கு கனிந்த பூவன் வாழைப்பழம்  - 12 
  • அகன்ற வாய் உள்ள பிளாஸ்டிக் (அ) மண் பாத்திரம் - 1 
  • பாத்திரத்தின் வாயை கட்டி மூடுவதற்கான துணி – 1 
  • பஞ்சகவ்யத்தை கலக்குவதற்கான கொம்பு (அ) குச்சி – 1

செயல்;முறை விளக்கம்.

  • பசும் சாணம் 7 கிலோவுடன் 1 கிலோ பசுநெய்யை ஊற்றி நன்கு பிசையவும்.
  • சாணம் நெய் கலவையை, அந்த பாத்திரத்தில் இட்டு, துணியினால் அதன் வாயினை கட்டி, 3 நாட்களுக்கு வைத்திருக்கவும்.
  • பாத்திரத்தை ஒரு நிழலான இடத்தில் வைக்கவும.;
  • அந்த பாத்திரத்தில், 4 வது நாள், 10 லிட்டர் கோமியம், 10 லிட்டர் தண்ணீர், ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரைக்கவும்.
  • பாத்திரத்தின் வாயினை துணியினால், வேடு கட்டி மூடவும்.
  • இந்த கலவையை 15 நாட்களுக்கு வைத்திருக்கவும்
  • ஓவ்வொரு நாளும். காலை (அ) மாலை வேளையில், ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிவிட வேண்டும்.
  • பதினாறாவது நாள், பசுவின் பால் 3 லிட்டர், பசுவின் தயிர் 2 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 3 கிலோ, கனிந்த பூவன் வாழைப் பழங்கள் 12, ஆகியவற்றை இந்த கலவையுடன் சேர்த்து, நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • மீண்டும் பாத்திரத்தை மூடி, நிழலில் 30 நாட்கள் வைத்திருக்கவும்.
  • ஒவ்வொரு நகளும் மறவாமல், கலவையை, நன்றாக கலக்கிவிட வேண்டும்.
  • முப்பத்தி ஒன்றாவது நாள், பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் விதம்
  • பெருந்துளிகளாக வீழ்வதற்கேற்ப, கைத்தெளிப்பானில் தெளி முனையை மாற்றிக் கொள்ளவும்.
  • ஒரு எக்டேர் பரப்பிற்கு, 50 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை, பாசன நீரில் கலந்து பாய்ச்சலாம்;.
  • நடவு செய்யும் பயிர் நாற்றுக்களை, 3 சத பஞ்ச கவ்யம் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம்.
  • இஞ்சி, மஞ்சள், போன்றவற்றின் விதைக் கிழங்குகளையும், பஞ்ச கவ்யம் கரைசலில், நேர்த்தி செய்து, நடவு செய்யலாம்.
  • கரும்பு விதைக் கரணைகளை, 3 சத பஞ்ச கவ்யா கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து நடவு செய்யலாம்.
  • சேமிக்கும் விதைகளை 3 சத பஞ்ச கவ்யா கரைசலில், நனைத்து,       உலர வைத்து, பாதுகாக்கலாம்.
  • பஞ்சகவ்யம் 3 சத கரைசல் தயார் செய்ய 300 மிலியை, 10 லிட்டர் நீருடன் கரைத்துக் கொள்ளவும்.

அமுதக்கரைசல்

  • மிகவும் சுலபமாக தயாரிக்கக் கூடிய இயற்கை உரம்.
  • பசும் சாணம், பசும் கோமியம், பயறு மாவு, வெல்லம் ஆகியவை இருந்தால் போதும்.
  • முக்கியமாக மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி பயிர் மகசூலை அதிகரிக்கும் திரவ உரம். 
  • 20 லிட்டர் அமுதக்கரைசல் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவைப்படும் பொருட்கள்

  • 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரம் -  1
  •  புதிய சாணம் - 2 கிலோ  
  • பசுவின் கோமியம் - 2 லிட்டர்  
  • கருப்பட்டி அல்லது வெல்லம் - 200 கிராம்,;, 
  • பயறு மாவு - 200 கிராம் 
  • தண்ணீர் - 20 லிட்டர்.

செயல்முறை விளக்கம்

  • 20 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், பயறு மாவு, வெல்லம்,  அனைத்தையும் கரைக்கவும்.
  • மண் பாண்டம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் இந்த கரைசலை தயாரிக்கவும்.
  • பாத்திரத்தின்; வாயினை ஒரு துணியினால் வேடுகட்டி மூடவும்.
  • பாத்திரத்தை நிழலான இடத்தில் 48 மணி நேரம் வைத்திருக்கவும்.
  • காலையும் மாலையும் ஒரு குச்சியினால் நன்கு கலக்கவும்.
  • மூன்றாவது நாள் அமுதக்கரைசல் தயார்.
  • இதனை ஒரு லிட்டர் அமுதக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களின் வேர்ப்பகுதியில் ஊற்றவும்.
  • அல்லது பாசன நீரில் கலந்து விடலாம்.
  • தொடர்ந்து அமுதக் கரைசலை வேர்ப் பகுதி மண்ணில் ஊற்றுவதால் அதனை வளமானதாக மாற்ற முடியும்.
Image Courtesy; Thanks Google

2 comments:

Unknown said...

Good messages

Unknown said...

Need Pancha kaviyam, amudakaraisal ... Pls contact me

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...