Friday, April 25, 2025

ஒரு நாள் ஒரு தேவதை வரும் - WAITING FOR OPPORTUNITIES


ஒரு நாள் ஒரு தேவதை வரும்


குடோ ன்னு சொன்னா போதும் ராஜாவே எழுந்து நிப்பார். அவ்ளோ மரியாதை. சாதா ஜனங்க பேர்ல உசிரையே வச்சிருப்பார். எப்பவும் ஒடிகிட்டே இருப்பார்…” இப்படி எல்லோருமே குடோ ஜென் குரு பற்றி பேசுவார்கள்

அவரைத் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபலமான ஜென் துறவி. துறவிகளுக்கெல்லாம் தலைமை துறவி என்று சொல்லுவாங்க.

குடோ ஒரு நாள் கிராமத்துப்பக்கம் போயிட்டு இருந்தார். நல்ல மழை. வானம் பொத்துக் கொண்டு ஊற்றியது. குடோ மழையில் சிக்கிக் கொண்டார்.

தொப்பரையாக நனைந்துவிட்டார். அந்த நேரம் பார்தது கால் செறுப்பின் வார் அறுந்து போனது. அதனை பழுதுபார்க்க முடியாத அளவிற்கு பிய்ந்து போனது. அதனால் குடோ அதனைத் தூக்கி எறிந்து விட்டு வெறுங்காலால் நடந்தார்.

அங்கு ஒரு சிறிய வீடு இருப்பதைப் பார்த்தார். அந்த வீட்டின் வெளியே ஒரு மரத்தால் செய்த ஸ்டேண்ட் ஒன்றில் இரண்டு ஜோடி செறுப்புகள். அது விற்பனைக்கு என்பது தெரிந்தது. உடனே அந்த வீட்டிற்குப் போனார். விலை கேட்டார். அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பிட்டார்

அப்போது மழை, பேய் மழைபோல ஊற்றிக் கொண்டிருந்தது. “ஜாஸ்தியா மழை பேயுது இருந்து போங்க சாமி என்றாள் அந்த வீட்டின் பெண்மணி.

அவரும் “சரி” என்று திண்ணையில் உட்கார்ந்தார். அப்போது அந்தப் பெண்மனி வயதான தனது தாயாரையும் அவருக்கு அறிமுகப்படுத்தினாள். தனது குழந்தைகளையும் அறிமுகம் செய்தாள்.

மழை விடுவதாகத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் ஜென்குரு புத்தர்சிலையை எடுத்து வைத்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். பிரார்த்தனை முடிந்த பின்னரும் மழை விடுவதாகத் தெரியவில்லை. “ராத்திரி நேரத்துல நீங்க எங்க சாமி போகப்போறீங்க இங்கயே தங்கிட்டு காலையில் போங்க” என்றாள் அந்தப் பெண்மணி

“உங்க விட்டுக்காரர் என்ன செய்யறார் ? எத்தனை குழந்தைகள் ? உங்க விட்டுக்காரர் சம்பாதனை போதுமா ? “ என்றும் கேட்டார் குடோ

“அதை ஏன் சாமி கேக்கறீங்க. வேலை முடிஞ்சி வந்தா நேரா சாராயக்கடைதான். நடுராத்திரிக்குதான் ஊட்டுக்கு வரும். ரொம்பக் குடிச்சிட்டா எங்கயாச்சும் விழுந்து கெடக்கும். நாங்க போயிதான் கைத்தாங்கலா கூட்டிகிட்டு வரணும்.” குடோ அவர்களுக்கு கேட்கவே சங்கடமாக இருந்தது

மடை திறந்த வெள்ளம் போல அந்தம்மா பேசிக் கொண்டே போனார். “என்ன வேலை செய்யறார்? தினமும் வேலைக்குப் போறார? எவளோ சம்பளம் ?” என்றார் குடோ

“கூலிதான் சாமி. தினமும் அம்பது நூறுன்னு கிடைக்கும். அதை வாங்கிகிட்டு அது சாராய கடைக்குப் போயிட்டா, அஞ்சிப்பத்து கூட எங் கைக்கு வராது.. அஞ்சி புள்ளைங்கள எப்படி காப்பாத்தறது சாமி ?”

“வேலை வெட்டி கிடைக்கலன்னா ஊட்டுல இருக்கற பாத்திர பண்டங்கள  எடுத்துட்டு போயி அடமானம் வச்சிக் குடிப்பாரு.. ரொம்ப கறாரா கேட்டா.. மட்டு மரியதை இல்லாமப் பேசுவாறு.. மாட்டை அடிக்கறமாதிரி  அடிப்பாரு. கையில கிடைச்சதை எடுத்து அடிப்பாறு.. எம் பையன் வந்து தடுப்பான், அவனையும் அடிப்பாரு..”

அப்போது குடோ அந்தா பெண்ணிடம் கொஞ்சம் பணம் கொடுத்தார். “சாப்பிடுவதற்கு நிறைய வாங்கிக் கொண்டு வாம்மா” என்றார். “நான் இன்று இரவு சாப்பிட்டுவிட்டு இந்தத் திண்ணையில் படுத்துக் கொள்ளுகிறேன்..” என்றார். அந்தப் பெண்மணி பழங்கள் ரொட்டி மற்றும் பானங்கள் வாங்கி வந்தார் குடோவிடம் கொடுத்துவிட்டுப் போனார் அவள் வீட்டிற்குள் சென்றதும் குடோ தனது தியானத்தை மறுபடியும் தொடங்கினார்.

நள்ளிரவு ஆனது. பெருஞ் சப்தத்துடன் அந்த வீட்டின் கதவு “தடார்” என்று திறந்தது. கதவு உடைந்து  விட்டதோ என்று பயந்தார் குடோ.

அந்த வீட்டுக்காரன். அந்த பெண்மணியின் கணவன். குடிகாரன்.  வீட்டிற்குள் வந்தான். சாராயவாடை தூக்கலாக இருந்தது

“பொறுக்கி நாயே எங்கடிப் போன ? அதுகுள்ள படுத்துட்டியா ? எனக்கு யாருடி போடுவான் சாப்பாடு ? உங்கப்பன் வந்து போடுவானா ? ங்கோத்தா வந்து போடுவாளா ? “என்று கேட்டு  குழறிக்குழறிப் பேசினான்.

அப்போது குடோ எழுந்து அவனிடம் சென்று பேசினார், “நான் ஒரு வழிப்போக்கன். மழை வந்ததால இங்க அனுமதி வாங்கிகிட்டு தங்கிட்டேன். உங்களுக்காக ரொட்டி மீன் சரக்கு எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். நானும் இன்னும் சாப்பிடல. உனக்காகத்தான் காத்திருக்கேன் “ என்று சொல்லி அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போனார்.

என்ன ஆச்சரியம் ! அவன் எதுவும் பேசவில்லை. குடோவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவரை வணங்கினான். குடோவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவரோடு உட்கார்ந்து வயிறு முட்ட சாப்பிட்டான். கொஞ்சம்  குடித்தான். அவ்வளவுதான். அப்படியே சாய்ந்து குறட்டையுடன் தூங்கினான்.

அவரோடு சாப்பிட்டு முடித்த குடோ தனது தியானத்தைத் தொடர்ந்தார்.

அடுத்த நாள் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டுக் கிளம்பினார். அப்போது அவன் கண்விழித்து குடோவைப் பார்த்தான்.

“ஆமா நீங்க யாரு ? எண் வீட்டுல நீங்க என்ன பண்றீங்க ?” என்று அதிகாரமாகக் கேட்டான், அந்தப் பெண்ணின் குடிகாரக் கணவன்

“குடோ என் பெயர்.  நான் ஒரு துறவி. கியோட்டோ நகரைச் சேர்ந்தவன் “ என்று சொல்லிவிட்டு எப்படி இங்கு வந்தார் ? மழை எப்படி வந்தது ? அவர் மணைவி எப்படி அவருக்கு உதவினாள் ? என்று விளாவாரியாகச் சொன்னார்

“உங்க பேரு எனக்குத் தெரியும். ராஜாவுக்கே நீங்க புத்திமதி சொல்லுவீங்க.. நீங்க எனக்குத் தெரியும்..” அதன் பிறகு அவன் குரலில் பணிவு தெரிந்தது

“என்னை மன்னித்து விடுங்கள்.. தெரியாமல் பேசிவிட்டேன். மரியாதை குறைவாகப் பேசிவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள் நான் உருப்படாதவன். நான் ஒரு குடிகாரன்” என்று சொல்லி அழுதான்

குடோ அவனை சமாதானப்படுத்தினார் “நீ நல்லவன் உனக்கு நல்லது கெட்டது தெரிகிறது.. உன் மனைவியை குழந்தைகளைப் பார். யார் அவர்களைக் காப்பாற்றுவார்கள்..” என்று குடோ கேட்க கேட்க அவன் அமைதியாக இருந்தான்

குடோவுக்கு செத்துப்போன அவன் அப்பா பேசுவது போல இருந்தது குடோ பேசுவது அவன் மானத்தைத் தொடுவது போல இருந்தது

அவர் பேசி முடித்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு குடோ அங்கிருந்து கிளம்பினார்

“நான் உங்கள் பைகளை தூக்கிக் கொண்டு கொஞ்சதூரம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மூட்டையாக இருந்த அவருடைய பையினை அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். பின்னர் குடோ அவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார்

குடோவின் மூட்டையை தூக்கிக் கொண்டு அவர் பின்னால் நடந்தான் அவன் மனைவியும் குழந்தைகளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்

இப்போது சுமார் 3 மைல் தூரம் நடந்திருப்பார்கள் “சரிப்பா ரொம்ப மகிழ்ச்சி ! நீ வீட்டுக்கு திரும்பிப் போ “என்று சொன்னார் குடோ

“உங்க மூட்டை கனமா இருக்கு. இந்த ரோடும் சரியில்ல. இன்னும் ஒரு அஞ்சி மைல் நான் தூக்கிட்டு வாறேன்” .. என்றான் அவன்

பாறைபோல இருக்கமாக வறண்டிருந்து அவன் முகம். அந்த முகத்தில் ஈரம் இல்லாமல் வற்ண்டிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. அமைதியாக அவர் “சரி” என்றார். வேறு எதுவும் பேசவில்லை.

ஐந்து மைலும் நடந்து முடித்தார்கள். “இது போதும் இனிமே நான் என் மூட்டையை சுமப்பேன்.. எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை.. நீ போ உனது மனைவியும் பிள்ளைகளும் உனக்காக காத்திருப்பார்கள்” என்றார் குடோ

இப்போது அவன் குனிந்து குடோவின் பாதங்களைத் தொட்டு “சாமி என்னை இன்னும் 10 மைல் உங்களோடு வர அனுமதி தாருங்கள். என்னை விரட்டினால் நான் எங்கே போவேன் ? அது உங்களுக்குத் தெரியும்” என்றான் குடோ எதுவும் பேசாமல் அவன் முகத்தைப் பார்த்த மறுபடியும் சரி என்றார்

அடுத்த 10 மைல் நடந்து முடிந்தது இப்போது குடோ கறாரான குரலில் சொன்னார் “இது போதும். நீ திரும்பிப் போ. உன் மனைவியைப் பார்த்துக் கொள். உன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்..” என்றார். இந்த முறை மிகவும் உறுதியான கண்டிப்பான குரலில் சொன்னார் குடோ

“சுவாமி இனிமேல் என்னால உங்கள விட்டு போக முடியாது.. இனி முழு நாட்களையும் உங்களோட தான் இருப்பேன் இனிமே எப்பவும் உங்களோட தான் இருப்பேன்..” அதற்குமேல் அவனை சமாதனம் செய்ய முடியவில்லை

பல ஆண்டுகள் உருண்டோடின. அந்த கிராமத்துப் பெண்ணின் குடிகாரக் கணவன் குடோவின் பிரதான சிஷ்யன் ஆனான். மூ நான் என்பது அவன் பெயர்

மூ-நான் பின்னாளில் குடோ வைப்போல ஜப்பானில் பெரிய ஜென் குரு ஆனான் அவன் கீழ் நூற்றுக் கணக்கான மாணவர்கள் ஜென் பயிற்சி பெற்றார்கள்.

“ஒரு நாள் ஒரு தேவதை வரும் காத்திருங்கள். அதன் அழகிய கரங்களைப்  பிடித்துக்கொள்ளுங்கள். அது வேறு உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும்” தனது மாணவர்களுக்கு இதைத்தான் காலம் முழுக்க போதித்து வந்தார்.

பூமி ஞானசூரியன்

 

Thursday, April 24, 2025

பஞ்சும் நெருப்பும் கதை THE FIRE AND COTTON LINT

பஞ்சும் நெருப்பும் கதை 


தான்சான் என்ற ஒரு புத்தமதகுரு இருந்தார். அந்த குருவிடம் எக்கிடோ என்ற மாணவத் துறவி இருந்தான்.

தான்சான் வயதான துறவி. ஆனால் எக்கிடோ மாணவத்துறவி, வயசுபையன்.

ஒரு நாள் தான்சான் தன்னுடைய மாணவர்களுக்கு புத்தமத தத்துவங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பொதுவாக துறவிகள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? எப்படி பேசவேண்டும் ? பஞ்சு நெருப்பிடமிருந்து  விலகி இருக்க வேண்டும் ?  பையன்கள் பஞ்சுமாதிரி. சுலபமாய்ப் பற்றிக் கொள்ளுவார்கள்.  இது பற்றி மிகவும் விளக்கமாகச் சொன்னார்.

அடுத்த நாள் அந்தத் தலைமைக்குருவும் எக்கிடோவும் ஒரு கிராமத்திற்கு போய்க் கொண்டிருந்தார்கள்.

 அப்போது அவர்கள் ஒர் ஆற்றினை கடந்து செல்ல வேண்டி இருந்தது.

 அவர்கள் இருவரும் ஆற்றங்கரையை அடைந்தார்கள்.

ஆற்றின் இருகரையும் தொட்ட மாதிரி தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

 தண்ணீரில் மரத்தின் உடைந்த கிளைகள் செடிகள் அவற்றின் இலைகள் பூக்கள் எல்லாம் அடித்துக் கொண்டு வந்தன.

 சிவப்பு நிறத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. புதுவெள்ளம் எனபது தெரிந்தது.

 ஆற்றங்கரையில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாள்.

 பார்க்க அம்மன் சிலைபோல இருந்தாள். சிவப்பு பச்சை என அமுத்தமான நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள்.

அவள் ஆற்றில் ஒடும் தண்ணீரைப் பார்த்தபடி தரையில் நின்று கொண்டிருந்தாள்.

இவர்களும் அவள் அருகில் போனார்கள்.

அங்கு சென்றதும் அந்த வயதான துறவி அவளை விசாரித்தார்.

ஏன் கரையிலேயே நிற்கிராய் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டுமா என்று கேட்டார்.

"ஆமாம் ஐயா,  அக்கரையில் இருக்கும் கிராமத்துக்கு நான் செல்ல வேண்டும். இப்படி வெள்ளம் வரும் என நான் நினைக்க வில்லை. யாரும் உதவி இல்லாமல் பாதுகாப்பாக இந்த ஆற்றை என்னால் கடக்க முடியாது என்று சொன்னார்.

உனக்கு ஆட்சேயான இல்லை என்றால் "நான் உனக்கு உதவிகிறேன்" என்று சொல்லி கீழே உட்கார்ந்து என் தோளில் ஏறிக்கொள்" என்றார்.

அவளும் வசதியாக ஏறி உட்கார்ந்தாள். வயதான துறவி அவளைத் தூக்கிக் கொண்டு எழுந்தார்.  வசதியாக இறங்கி தண்ணீரில் நடந்தார்.

அந்தப் பெண் அவர் தோள்களின் இருபக்கமும் கால்களைப் போட்ட படி துறவியின் தலையை கைகளால் பிடித்துக் கொண்டிருந்தாள்.

இப்போது அந்த இனைய துறவிக்கு கோபம் கோபமாக வந்தது. இந்த வயசான காலத்தில் இப்படி ஏன் செய்ய வேண்டும் ? அவருடைய ஆரோக்கியத்திற்கு இது  நல்லதல்ல.

இவர் ஏன் தூக்கி சிரமப் பட வேண்டும் ? என்னிடம் சொன்னால் நான் தூக்கிக் கொண்டுவர மாட்டேன் என்று சொல்வேனா ? "

இப்படி யோசித்தபடி அவன் கரையிலேயே நின்று விட்டான்.

திரும்பிப் பார்த்து குரு குரல் கொடுத்தார். உடனே பின்னால் சென்றான் சீடன்.

நேற்று எப்படி சொன்னார் பெண்கனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆண்கள் பஞ்சிமாதிரி பெண்கள் நெருப்பு மாதிரி.. பக்கத்தில் போனால் பற்றிக் கொள்ளூவீர்கள் " என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

குருவுக்கு ஒரு சட்டம் மாணவனுக்கு ஒரு சட்டமா ? இப்படி ஒரு புயல் மாணவன் மனதில் அடித்துக் கொண்டிருந்தது. 

குரு அந்த அழகான இளம் பெண்ணை தோளில் சுமந்தபடி எதைப்பற்றியும் கவலைப்படாமல் அக்கரையை போய்ச் சேர்ந்தார்.

 அந்தப் பெண்ணை தோளில் இருந்து இறக்கி விட்டார் குரு.

" மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டுச் சென்றாள் அந்தப்பெண்.

 அன்று மாலை வரை அந்த சீடன் குருவிடம் எதுவும் பேசவில்லை. அன்று இரவும் எதுவும் பேசவில்லை. அது வரை குரு எப்படி அந்தப் பெண்ணை தோளில் துக்கி வரலாம் என்றே யோசித்து கொண்டிருந்தான்.

அடுத்தநாள் காலை அவன் எழுந்தவுடன் உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும்.

"ஏன் இவ்வளவு தாமதம் ? நேற்றே கேட்க வேண்டும் என்று நினைத்தாய் அல்லவா கேள் " என்றார் சிரித்துக்கொண்டே தலைமைக் குரு.

"நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை தோளில் சுமந்து கொண்டு வந்தீங்கள்" என்று கேட்டான் சீடன்.

தலைமைக்குரு சிரித்துக்கொண்டே சொன்னார் "நேற்று மாலையே அந்தப் பெண்ணைத் தோளிலிருந்து இறக்கி விட்டுவிட்டேன்..  நீ அவளை இன்னும் கூட மனசில் சுமந்து கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன் என்றார். 

அந்த சீடன் "என் மனதில் "சுருக்" கென்று  தைத்தது ஞானமுள்" என்று நிறையநாள் வரை சொல்லிக் கொண்டிருந்தான், இப்படித்தான் அந்த ஜென் கதை நிறைவடைகிறது.

ஆனாலும் பஞ்சும் நெருப்பும் கதை சொன்ன தான்சான் செய்தது சரியா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

பூமி ஞானசூரியன்

Wednesday, April 23, 2025

சண்டை போடுவது எப்படி ? IS FIGHTING IS AN ART ? HOW TO DO IT ?

 

சண்டை போடுவது எப்படி ?



“அடைந்தால் மஹாதேவி இல்லை என்றால் மரணதேவி” இந்த வசனத்தை சொன்ன உடனே பி.எஸ் வீரப்பாவின் முகம் ஞாபத்துக்கு வரும். இது உண்டு இல்லன்னு பாக்கறது.

“முடிஞ்சா அடக்கறேன் இல்லன்னா அடங்கிபோறேன்” இந்த வசனத்தை சொன்ன உடனே நகைச்சுவை நடிகர்  நாகேஷ் நமக்கு ஞாபகத்துக்கு வரும். எப்படியோ பிரச்சினை வரக்கூடாது.

டூபீ ஆர் நாட்டு டூபி அப்படின்னா ஷேக்ஸ்பியரின் “ஹேம்லட்” நாடகம் ஞாபகத்துக்கு வரும். இது உண்டு இல்லன்னு பாக்கறதுதான். அதனாலதான் அது துன்பியல் நாடகமா முடிஞ்சது.

“வரும் ஆனா வராது” அப்படிச் சொன்னா நகைச்சுவை வடிவேல் ஞாபகத்துக்கு வரும். இதுல  பிரச்சினை வரும் ஆனா வராது.

அதே மாதிரியான ஜெர்மனி நாட்டு ஆட்டுக்கிடா சண்டைக்கதை.

ஜெர்மனி நாட்டுல ஒரு அழகான ஊர். அந்த ஊர்ல ஒரு அழகான ஓடை. அதுல எப்பவும் சிலுசிலுன்னு தண்ணி ஓடிகிட்டே இருக்கும். அந்த ஒடைக்கு மேல ஒரு சின்ன பாலம். அகலம் ரொம்ப கம்மி. அதுல ஒருத்தர் பின்னாடிதான் ஒருத்தர் போக முடியும். ஒருத்தர் வராங்கன்னா அடுத்த முனையில் இருக்கறவங்க அவங்க வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்கணும்.

இந்த மாதிரியான அந்தப் பாலத்துல இரண்டு முரட்டு ஆடுகள், இந்த  முனையில் ஓன்று, நடக்க ஆரம்பிச்சது. அந்த சமயம் அதே அளவு சமமான முரட்டு ஆடு பாலத்துக்குள்ள நுழைஞ்சது. ரெண்டு ஆடுகளும் நடந்து வந்து பாலத்தின் இப்பகுதியில் வந்து எதிர் எதிரா நிண்ணதுங்க.

ஒண்ணோட ஒண்ணு முறைச்சிப் பாத்ததுங்க. ரெண்டு ஆடுங்களோட கண்ணும் சிவப்பா மாறிடுச்சி. கோபம் ரெண்டு ஆடுகளோட கண்ணுலயும் கொப்பளிச்சிகிட்டு இருந்தது

அடுத்த நிமிவும் மடார் மடார்ன்னு முட்டிக்க ஆரம்பிச்சது. இந்த ரெண்டு ஆடுங்க முட்டிகிற சத்தம் ஊரு முழுக்க கேட்டிச்சி. பின்னாடி போகுதுங்க அப்புறம் வேகமா முன்னாடி ஒடி வந்து முட்டுக்கிதுங்க

ஒடைக்கு அந்தபக்கமும் இந்தப் பக்கமும் எகப்பட்ட ஜனங்கள். எப்படி அந்த ரெண்டு ஆடுகளையும் சமாதானப் படுத்தறது அப்படின்னு ஜனங்க பேசிகிட்டாங்க.

ரெண்டு ஆடுகளும் பின்னாடி நடந்து வந்து பிறகு வேகமா முன்னாடி ஓடி தலையால முட்டிகிட்டதுங்க. எந்த நேரத்திலயும் எதாவது ஒரு ஆட்டோட மண்டை உடையலாம். இல்லன்னா இந்த ரெண்டு ஆட்டோட மண்டையும் உடையலாம் என்று பேசிக் கொண்டார்கள்.

முட்டிக் கொண்டிருக்கும் இரண்டு ஆடுகளில்  “டேய் நான் சொல்றேன் இடது பக்க ஆடுதான் ஜெயிக்கும்” என்றான் ஒரு இளைஞன்

“நீ வேணுன்னா பாரு வலதுபக்க ஆடுதான் தான் ஜெயிக்கும்” என்றான் இரண்டாவது இளைஞன்.

இரண்டு பேரும் 100 கெர்மனி ரூபாய் பந்தயம் கட்டி விட்டு ஜெயிக்கும் ஆடு எது என்று கண்ணில் விளக்கெண்ணை போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். காரணம் இரண்டும் ஒரே நிறம்.

அந்த சமயம் யாரும் எதிர்பாரத விதமாக இரண்டு ஆடுகளும் பாலத்திருந்து தவறி ஒடைக்குள் விழுந்தன. இரண்டும் அந்த ஓடைக் கரையில் மூச்சிபேச்சி இல்லாமல் கிடந்தன

இப்போது அந்த ஒடையில் இரு கரைகளிலும் நின்றிருந்த ஆடுகள் பாலத்தில் ஏறி நடந்தன. அது மிகவும் சிறிய பாலமாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று இடம் தந்து ஒதுங்கி பிரச்சனை இல்லாமல் நடந்து சென்றன. அதன் ஊடாக சில மனிதர்களும் அந்தப் பாலத்தில் எறி நடந்து சென்றார்கள்.

“விட்டுக் குடுத்துப் போனா நாம ஒருத்தருக் கொருத்தர் முட்டிக்க வேணாம். நம்ம தலைக்கும் சேதாரம் இல்லை “ என்று ஒரு ஆடு சொல்ல மற்ற ஆடுகளும் “ஆமாம் ஆமாம்” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பாலத்தைக் கடந்து போயின.

ஆடுகள் சண்டை போடும்போது முதலில் பின்னால் சென்று பின்னர் வேகமாக ஒடி எதிராக நிற்கும் ஆட்டைத் தாக்கும். பின்வாங்குவது என்பது கோழைத்தளமானது அல்ல. அது தனது தாக்குதலை வேகப்படுத்த விரைவு படுத்த உதவும். போராளிகள் இதனை கடைபிடிக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் அதில் ஆட்டு சண்டையைத்தான் சிறந்த போர்வீரமாகக் காட்டுகிறார்

ஊக்கம் உடையான் ஒழுக்கம் பொருந்தர்

தாக்கற்குப் பேருந் தகைத்து

அதற்கு சொல்லும் பொருள் இது தான், “ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சணடையிடும் ஆட்டுக்கிடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.”

பின்னாடி போங்க ஆனா அது முன்னாடி

போகறதுகக்கான உபாயமா இருக்கணும்.

சண்டை போடுவதற்கு இந்த முறை சரியா தப்பா என்று உங்கள் கருத்தை அன்பு கூர்ந்து பதிவிடுங்கள்.

பூமி ஞானசூரியன்.

Sunday, April 20, 2025

தசரத் மஞ்சி ஃபல்குனிதேவி - CELEBRATED BIHAR LOVERS THASARATH MANJI AND FALCUNI DEVI

 

தசரத் மஞ்சி ஃபல்குனிதேவி


தொடர்ந்து ஒரு காரியத்தில் கவனம் செலுத்தினால் எவ்வளவு பெரிய சாதனையும் செய்து முடிக்கலாம் இதுக்கு அடையாளமான பெயர்தான் இந்த தசரத் மஞ்சி சாலை.

இந்த தசரத் மஞ்சி சாலை எங்க இருக்கு ? இந்த சாலையை யார் போட்டாங்க ? ஏன் போட்டாங்க ? எப்போ போட்டாங்க ? அதன் சிறப்பு என்ன ? ஆக இந்த தசரத் மஞ்சி சாலை பற்றிய கதைதான் இண்ணக்கி நான் சொல்லப்போற கதை

இந்த தசரத் மஞ்சி சாலைங்கறது கற்பனைக் கதை இல்லை உண்மையான கதை நிஜமான கதை.

தசரத் மஞ்சி என்ற ஒரு தனி மனிதனாக அவரோட சொந்த முயற்சியால 30 வருசம் உழைச்சி இரண்டு மலைகளுக்கு நடுவே உருவாக்கின சாலைதான் இந்த தசரத் மஞ்சி சாலை

இந்த தசரத் மஞ்சி சாலை கெஹலூர் என்ற ஊரில் இருக்கு. இதுக்கு பக்கத்துல இருக்கும் பெரிய ஊர் கயா. கயா பீஹார் மாநிலத்தில் இருக்கு

கெஹலூர் மலைகள் உயரமில்லாதவை. தொடராக இருக்கும். கூர்மையான கடினமான பாறைகள் நிறைந்த மலைத்தொடர் இது. இந்த மலைத் தொடரின் இரண்டு பக்கங்களிலும் சிறுசிறு கிராமங்கள் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு மலைக் கிராமத்தில்தான் வசித்து வந்தார் நம்மாள் தஷ்ரத் மஞ்சி.

தஷ்ரத் மஞ்சி அவர்கள் தான் தனிமனிதனாக நின்று இந்த சாலையை போட்டார் என்று பார்த்தோம்

இந்த கிராமத்து மக்கள் வயலுக்கு போக வேண்டும்.  குழந்தைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும்.  பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமணை போக வேண்டும். எல்லாத்துக்கும்  ஆபத்தான இந்த மலைகளில் ஏறி குறுக்காக நடந்துதான் அடுத்த நகரத்துக்கு போகணும்.

அப்போ கூர்மையான செங்குத்தான பாறைகள் ஊடாக நடந்து போகணும். அப்பொ அடிக்கடி அவர்கள் விபத்துக்கு உள்ளாவது வழக்கம்

தஷ்ரத் மஞ்சி இந்த கிராமத்தின் தினக்கூலி.

ஒரு நாள் தஷ்ரத் மஞ்சியின் மனைவி இந்த மலைகளின் ஊடாக நடந்து போனார். அந்தமாதிரி  ஒரு பெரிய பள்ளத்துல விழுந்து ரொம்ப அடிபட்டது.

எவ்வளவோ சிகிச்சை குடுத்தாங்க. அப்படியும் அவுங்க ஒரு நாள் அவர் இறந்து போனாங்க. 1960 ம் ஆண்டு அவர் இறந்தாங்க.

அவரது மனைவியின் இழப்பு அவரை பெகுவாக பாதிச்சது. இனி இந்த கிராமத்தில் இப்படி ஒரு விபத்து நடக்க நான் விடமாட்டேன், என்று முடிவு செய்தார்.

தனிமனிதனாக இதைச் செய்துமுடிக்க முடிவு செய்தார். அதற்குத் தேவையான சுத்தி, சம்மட்டி, கடப்பாரை, மண்வெட்டி மாதிரி சாதாரண கருவிகளோட களத்தில் இறங்கினார். தனது 3 ஆடுகளை விற்று இவற்றை வாங்கினார்.

செங்குத்தாக உயரமாக விரைப்புடன் நிற்கும் இரண்டு மலைகளுக்கு நடுவே தனது சாலையை அமைக்கத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் கிராமத்தினர் கேலி பேசினர். இதெல்லாம் நடக்கற காரியமா ? அதுவும் ஒத்தை ஆளா இதெல்லாம் செய்ய முடியுமா ? என்று பேசினார்கள்.

இதை எல்லாம் தஷ்ரத் மஞ்சி காது கொடுத்து கேட்கவில்லை. எறும்புர கல் தேயும் என்பது போல தஷ்ரத் மஞ்சி செய்த வேலை பல ஆண்டுகள் தொடர்ந்ததால் அது பயன் அளிக்க ஆரம்பித்தது

ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல. தஷ்ரத் 22 ஆண்டுகள் போராடினார். அவருடைய உழைப்பைப் பாத்த பலரும் பாராட்டத் தொடங்கினார்கள்

இப்போது அவரது மலைமனிதன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இருபத்தியிரண்டு ஆண்டுகளில் 360 அடி சாலையை போட்டு இருந்தார். அதுவும் மலைகளுக்கு ஊடான மலை.  1982 ம் ஆண்டு தஷ்ரத் மஞ்சி இந்த சாதனையை செய்து முடித்திருந்தார்

இப்போது அந்த சாலை வழியாக மக்கள் போக ஆரம்பித்தனர் சிறுசிறு வாகனங்கள் கூட போக ஆரம்பித்தது

மலைமனிதன் என்று அழைக்கப்பட்ட அந்த மணிதன் 2007 ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

பகலில் பிறருடைய வயலில் உழவு செய்வார் அதிலிருந்து கிடைக்கும் சொற்பமான வருமானம் அவர் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்கும்.

மாலை நேரம் தொடங்கி இரவு நேரம் வரை மலைப்பாதை அமைப்பதில் ஈடுபடுவார்.

அந்த சாலையின் அகலம் 30 அடி. உயரம் 25 அடி. நீளம் 360 அடியும் அமைந்தது. இந்த சாலை அமைந்ததனால் 70 கி.மீ என்பது ஒரு கிலோமீட்டராக சுருங்கியது. நினைத்துப்பாருங்கள்.

இது உண்மையாக நடந்த கதை. ஆச்சரியமாக இருக்கில்ல. இன்னொரு ஆச்சரியமான செய்தி சொல்றேன்.

1.இப்படி ஒரு சம்பவம் நடந்தா சினிமாக்காரங்க சும்மா விடுவாங்களா ? ஒரு சினிமா எடுத்து 2015 ம் ஆண்டு வெளியிட்டாங்க.

2.இந்த தசரத் மஞ்சியோட சொந்த ஊர் பேரு கெஹ்லார் கிராமம், அதுக்கு பக்கத்துல இருக்கற பெரிய ஊர் கயா. அது பீஹார் மானிலத்தில் இருக்கு.

3. அந்த கெஹலார் கிராமம் இப்போ பீகார்ல ஒரு பெரிய சுற்றுலாத்தலமா மாறிடுத்து.

4. 2016 ம் ஆண்டு தசரத் மஞ்சி’ க்காக இந்திய அரசாங்கம் ஒரு ஸ்டாம்பு வெளியிட்டிருக்காங்க.

5. தசரத் மஞ்சி அந்த சாலைபோட அவர் தனி மனிதனா வேலை செஞ்சது 22 வருஷம், 1960 ம் வருஷம் தொடங்கி  1982 ம் வருஷம் முடிஞ்சது.

6. அவர் இறந்தது, 2007 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி, பீஹார் அரசு மரியாதையோட அவர் உடலை அடக்கம் செய்தாங்க.

7. சாலை வசதி இல்லாததால தசரத் மஞ்சியோட ஃபல்குனிதேவி இறந்ததுதான் காரணம் அந்த சாலை அமைச்சதுக்குக் காரணம்.

மனைவி பேர்ல எவ்ளோ அன்பு வச்சிருக்கார் பாருங்க ! எல்லாருக்கும் ஷாஜகான் மும்தாஜ் தெரியும். அவ்ர்களோட காதல் அடையளம் தாஜ்மகால். தசரத் மஞ்சி ஃபல்குனி தேவியோட அடையாளம் தசரத்மஞ்சி சாலை.

உலகத்தின் பிரபலமான  காதலர்கள், ஷாஜஹான் மும்தாஜ், அம்பிகாபதி அமரவதி, சலிம் அனார்கலி, லைலா மஜ்னு, ஆன்ட்டனி கிளியோபாட்ரா, ஒதெல்லொ டெஸ்டிமோனா, ரோமியோ ஜுலியட், இந்த வரிசையில தசரத்மஞ்சி ஃபல்குனி தேவியோட பேரை சேர்க்கலாமா ? வேண்டாமா ? உங்க அபிப்ராயம் என்ன ?

பூமி ஞானசூரியன்

உண்மையா இப்படியெல்லாம் நடக்குமா ? UNBELEIVABLE , BUT ITS ALL TRUE


உண்மையா 

இப்படியெல்லாம் 

நடக்குமா ?

எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்தாலும் எவ்வளவு குரூரமான குற்றங்களைச் செய்தாலும்   அவுங்க திருந்த வாய்ப்பு உண்டு. அதைதான் மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். கொலை களவு காமம் இப்படி எல்லா மோசமான குற்றங்களையும் செய்த ஒருத்தரைபற்றிய கதைதான் இது. எனக்கு ரொம்பவும் பிடிச்சமான கதை.

ஒரு ஊர்ல ஒரு அரசாங்க அதிகாரி இருந்தார் அவர் பெயர் வென்காய், அவர்தான் இந்த கதையின் கதாநாயகன்.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்மணியோட தகாத உறவு இருந்தது.

ஆனாலும் வென்காய் அடிப்படையில ஒரு நல்ல மணிதர் அப்படித்தான் எல்லாரும் சொல்லுவாங்க.

ஓரு நாள் அவரோட கெட்டகாலம், அந்த பெண்மணியோட கணவருக்கு இந்த தகாத உறவு தெரிஞ்சிடுத்து.

அதனால ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிட்டாங்க அப்போ வென்காய் அடிச்ச அடியில் அந்த பெண்னோட கணவர் இறந்து போயிட்டார்.

அதுக்குப் பிறகு வென்காய்க்கு வேலை போயிடும்னு தெரியும். அவரை கைது பண்ணிடுவாங்க. ஜெயில்ல போட்டுவாங்க.

அது இல்லாம அவமானம். அதனால  வென்காயும் அந்த பெண்மனியும் சேர்ந்து தொலை தூரத்துல இருந்த ஒரு ஊருக்கு ஓடிப் போனாங்க.

கையில் இருந்த காசெல்லாம் செலவாயிடுத்து. அந்தப் பெண்மணி பொருப்பில்லாம நிறைய ஆடம்பரமா செலவு செய்யறவளா இருந்தா.

அதனால வேற வழி இல்லை. வென்காய் அந்தப் பெண்மணியை திருப்திப்படுத்த திருட ஆரம்பிச்சார்.

ஆனா அவருக்கு அதைத் தொடர்ச்சியா செய்ய விருப்பம் இல்லை. ஆனால் என்ன செய்யறதுன்னு யோசிச்சார். அந்தப் பெண்மணியோட ஒத்துப் போக முடியல.

ஒருநாள் ராத்திரியோட ராத்திரியா மறுபடியும் ஒரு மலைக்கிராமத்துக்கு அந்தம்மாகிட்டருந்து தப்பிச்சு ஓடிப் போனார்.

அந்த ஊர்ல ஒரு மருத்துவர்கிட்ட வேலை பார்த்தார். அந்த மருத்துவத்தை முழுசா கத்துகிட்டார் வென்காய். கொஞ்சம் நாள் அந்த மருத்துவர் இறந்து போனார்.

இப்போ அந்த ஊருக்கு இவர் மருத்துவரா ஆகிட்டார். இது வரைக்கும் தான் செய்த கெட்ட காரியங்களுக்கு பிராயசித்தம் செய்யனும்னு நினைச்சார்.

தன்னோட மருத்துத் தொழில் மூலமா எல்லாருக்கும் உதவி செஞ்சார். அந்த ஜனங்க மத்தியில் நல்ல பெயர் எடுத்தார்.

அந்த கிராமத்தை சுத்தி மலைகள் சூழ்ந்து இருந்தது. அவுங்க எங்க போகணும்னாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த மலையை ஏறித்தான் போகணும்.

எத்தனையோ முறை அரசாங்கத்தில் முறையிட்டும் எதுவும் நடக்கல

இப்போ அந்த மலையில் ஒரு  சுரங்கப்பாதை அமைச்சா ஜனங்க பிரச்சனை இல்லாம இருப்பாங்க.

விவசாயிகளுக்கு, வியாபாரிகளுக்கு, பள்ளிக்கூட குழந்தைகளுக்கு எல்லாருக்கும் இது ரொம்ப உதவியா இருக்கும்னு நினைச்சார் வென்காய்.

வென்காய் தனி ஆளாய் அந்த சுரங்கப் பாதையை வெட்ட ஆரம்பிச்சார். அவ்வளவு சீக்கிரம் முடியல. பல வருடங்கள் ஆச்சி. இப்பொ அந்த சுரங்கபாதை முடியும் தருவாயில் இருந்தது.

இத்தனை வருசம் அந்த மலையில் சுரங்கப்பாதை வெட்டினதுக்கு அரசாங்கமும் உதவல. அடுத்தவங்க யாரும் உதவி செய்யல.

அந்த சமயம் ஒரு இளைஞர் வென்காய் அவர்களைத் தேடிட்டு வந்தார்.

“வணக்கம் சார்.. நான் உங்களைப் பாக்கத்தான் வந்திருக்கேன். இத்தனை வருசமா உங்களத்தான் தேடிட்டு இருக்கேன். இப்பொதான் கண்டுபிடிச்சேன்” என்றான் அந்த இளைஞன்.

“நான் ஏதாச்சும் உங்களுக்கு உதவி செய்யணுமா சொல்லுங்க, என்னால் முடிஞ்ச உதவியா இருந்தா கண்டிப்பாய் செய்யறேன்” அப்படின்னார் வென்காய்.

“கண்டிப்பாக உங்களால் முடியும். அந்த உதவி என்னான்னு சொல்லறதுக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லணும். சரியா 20 வருசத்துக்கு முன்னாடி நீங்க ஒருத்தரை கொலை பண்ணிட்டு ஒடி வந்துட்டிங்க. உங்களால கொலை செய்யப்பட்டவரோட மகன்தான் நான். அந்த கணக்கு தீக்கறதுக்காத்தான் வந்திருக்கேன்”

“கடைசி காலத்துல மனநிலை பாதிக்கப்பட்டு எங்க அம்மாவும் இறந்து போனாங்க. அவங்களோட ஈமக்கிரியை முடிச்சிட்டுத்தான் நான் வர்றேன். உங்களைக் கொன்று பழிதீர்க்கறதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன்”ஏன்று தீர்மானமாகச் சொன்னான் அந்த இளைஞன்.

“நான் செய்தது மிகப் பெரிய பாவம். அந்தப் பாவத்தைக் கழுவத்தான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உன் விருப்பம் எதுவோ செய்ய எனக்கு முழு சம்மதம். ஆனா இப்போ  மலைகளுக்கு நடுவால சாலை அமைக்கும் வேலையை  நான் செஞ்சிட்டு இருக்கேன்"

“இந்த சுரங்கப்பாதை அமைச்சா பள்ளிக் குழந்தைகள் நிறைய படிப்பாங்க விவசாயிகள் உணவு தானியங்களை விற்பனை செய்ய உதவியா இருக்கும்”

“உடல் நலம் குண்றியவர்கள் மருத்துவ மனைகளுக்குப் போக உதவியா இருக்கும்”

“பிரசவ காலத்தில் பெண்கள் அதிகம் கஷ்டப்படமாட்டாங்க”.

“மழைக்காலத்துல ஏற்படக்கூடிய நிலச்சரிவுல வருசாவருசம் ஓருத்தர் ரெண்டுபேருன்னு சாகறதை தடுக்க முடியும்.”

“வெளியூர் பயணம் போறவங்க உயரமான மலைகளின் மீது ஏறவேண்டாம், இறங்க வேண்டாம்.”

“நீ என்ன சொன்னலும் நான் அதுக்கு ஒத்துக்கிறேன். அந்த தண்டனைக்கு நான் தயார். ஆனா நான் முக்கியமான பொதுக்காரியத்த செஞ்சிட்டு இருக்கேன். அது எனக்காக இல்ல ஒட்டு மொத்தமா இங்க வசிக்கிற ஜனங்க எல்லாத்துக்கும். அந்த வேலையை செய்து முடிக்க என்ன அனுமதிக்கனும். இன்னும் கொஞ்ச வேலைதான் இருக்கு. அது முடிஞ்ச அடுத்த நொடியே என்னை  நான் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். உங்க விருப்பத்தை நீங்க நிறைவேற்றலாம்” அப்படின்னு அந்த இளைஞன் கிட்ட அவகாசம் கேட்டு  வென்காய் கெஞ்சினார்.

அவர் கேட்டுக்கொண்டது நியாயமாகப் பட்டது அவனுக்கு. அவர் கேட்டுக்கொண்டதற்கு அந்த இளைஞன் “சரி” என்றான்.

ஆதன் பிறகு பல மாதங்கள் போனது. தினம் தினம் அவர் செய்யும் வேலைகளை போய்ப் பார்ப்பான்.

எத்தனை நாளைக்குதான் அந்த இளைஞன் வெறுமனே ஒரு பார்வையாளனாக வந்து பொவான். வென்காய் ஒரு தனி மனிதனாக செய்யும் சேவை. அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால் அவனும் அதற்கு உதவி செய்யலாமா என்று யோசித்தான்

அப்படியே, அந்த இளைஞனும் வென்காயோடு சேர்ந்து வேலை செய்யத் தொடங்கினான்.

ஒரு ஆண்டு முடிஞ்சது, அந்த இளைஞன் வென்காயைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டான்

“இப்போ சுரங்கப்பாதை வேலை முடிஞ்சது. இப்போ நீங்க கேட்ட மாதிரி என்னை பழிவாங்கலாம். நான் என்னைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றார் வென்காய்

"என்னுடைய ஆசானை எப்படி என்னால் கொல்ல முடியும் ? எனது வாழ்க்கையின் வழிகாட்டியை எப்படி தான் கொல்ல முடியும் ?"

இதைக்கேட்டதும் வெங்காய் மிரண்டு போனார், “நீ என்ன சொன்னாய்”  என்று ஆச்சரியமாகக் கேட்டார் வென்காய்

"இப்போது நான் உங்கள் மாணவன். இன்று நீங்கள் எனது குரு. எனது ஆசான். என் ஆசானை எப்படி என்னால் கொல்ல முடியும் ?"  என்று சொன்னான் அந்த இளைஞன். அதைக் கேட்ட ஷென்காயின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. அப்போது இளைஞன் வென்காயின் கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு அவரை இறுகத் தழுவினான்.

அந்த அழுத்ததில் அவன் அன்பின் ஆழம் புரிந்தது வென்காய் தேம்பித்தேம்பி அழுதார்.

அந்த இளைஞன் அவர் கண்களை ஆதுரமாகத் துடைத்து விட்டான்.

எவ்வளவு கொடூரமான மனிதனும் மனம் மாறினா திருந்தி வாழ முடியும் அதுக்கு ஷென்காய் ஒரு நல்ல உதாரணம். ஆனா ஷென்காய் மாதிரி தலைகீழா மாற முடியுமா ? நீங்க என்ன நினைக்கிறிங்க ?

அந்த இளைஞனா நீங்க இருந்தா என்ன பண்ணி இருப்பிங்க ?  மன்னிப்பிங்களா ? மாட்டிங்களா ? கமெண்ட் பகுதியில் ஒரு வரி எழுதுங்கள்.

பூமி ஞானசூரியன்

கடவுளைப் பார்ப்பது எப்படி - HOW TO SEE THE GOD

 

கடவுளைப்

பார்ப்பது எப்படி

 

SUFI SAINT OF SUFISM FROM PERSIA 

ஒரு ஊரில் ஒரு சூஃபி ஞானி இருந்தார். அவரிடம்  நிறைய சீடர்கள் இருந்தார்கள். சூஃபி ஞானிகள் என்றால் இஸ்லாமிய ஞானிகள். கடவுளால் அனுப்பப்பட்டு இறைத் தூதர்கள் என்றும் நம்புகிறார்கள். சிறப்பான தெய்வீக சக்தி உடையவர்கள் தான் சூஃபி ஞானிகள். 

தியானத்தால் உண்மையையும் கடவுளையும் காணலாம் என்பதை சூஃபியிசம் எனும் மாயாவாதம் என்கிறார்கள்.

அந்த சூஃபி ஞானியைப் பார்க்க ஒரு நாள் அந்த நாட்டு அரசன் வந்திருந்தான்

அந்த ஞானி அந்த நாட்டு அரசனை வரவேற்று “என்ன விசயம்’னு கேட்டார்

அந்த அரசன் ரொம்பவும் பணிவா சொன்னார் “நான் கடவுளைப் பார்க்கணும் அவரோட பேசணும்.. அதுக்கு உங்களாலதான் உதவ முடியும்.

கொஞ்சநேரம் யோசித்தார் அந்த ஞானி. அதுக்குப் பிறகு  சொன்னார் “நாளைக்கு வாங்க.. நாம் அதப் பற்றி விரிவாப் பேசலாம் என்றார் அந்த சூஃபி ஞானி

அடுத்த நாள் அந்த ராஜா, ஞானியைப் பார்க்க வந்தார். அப்போ ஞானி அவரை சந்திக்கத் தயாரா இருந்தார்

அரசன் வந்ததும் அவங்கிட்ட ஒரு திருவோட்டை அவன் கையில் கொடுத்தார்.ராஜாவுக்கு ஒண்ணும் புரியல. ஆன்னாலும் ராஜா அதை வாங்கிக் கொண்டார்.

“இதை நான் என்ன செய்ய வேண்டும், எதுக்காக இதை என் கையில தர்றிங்க ?” என்றார் ராஜா

சூஃபி ஞானி சொன்னார் “இன்னையிலிருந்து ஒரு வாரம், அதாவது, ஏழு நாளைக்கு இங்க தங்கி இருக்கப் போறிங்க… தினமும் காலையில் எழுத்திருப்பிங்க..இந்த திருவோட்டை எடுத்துகிறீங்க. பக்கத்துல இருக்கும் எதாச்சும் ஒரு கிராமத்துக்கு போயி பிச்சை எடுத்துகிட்டு வற்றிங்க. அப்படி பிச்சை எடுதுட்டு வந்த பிறகுதான் உங்களுக்கு சாப்பாடு. ஒரு நாளைக்கு ஒரு கிராமன்னு போயி பிச்சை எடுக்கனும். இப்படி ஏழு நாள் முடிஞ்ச பிற்பாடு நாம் கடவுளை எப்படி பாக்கறதுன்னு பேசலாம் “ அப்படீன்னு சொன்னார் அந்த சூஃபி ஞானி

இதை கேட்டதும் அரசனுக்கு அதிர்ச்சி ! அவனுக்கு என்ன சொல்றதுன்னு புரியல,  அவன் சொன்னான்.

“ வேணும்னா  நான் வேறு தேசத்து கிராமங்களில் போய் பிச்சை எடுக்கிறனே.. எடுத்து அதையே சாப்பிடுகிறேன் என் சொந்த  நாட்டு கிராமங்களிலேயே நம்மை ஜனங்ககிட்ட பிச்சை எடுக்கறதுன்னா,  எனக்கு வெட்கமாக இருக்கு“ ன்னு சொன்னான் அரசன்.

அப்போ சூஃபி ஞானி “ கண்டிப்பா நீங்க உங்க நாட்டு கிராமங்கள்ள தான்  பிச்சை எடுக்கணும். அது உங்களால முடியாதுன்னா நீங்க அரண்மனைக்கு நீங்க திரும்பப் போகலாம்.. அப்புறம் நீங்க.. கடவுளை பாக்கணும், பேசணும்னு வரக் கூடாது “ என்று சொன்னார். ஒரு வழியாக சூஃபி ஞானி சொன்னதுக்கு ராஜா சரி என்று ஒத்துக் கொண்டார்.

அடுத்த நாளே அந்த ராஜா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்குப் போனார் மறக்காமல் பிச்சை எடுக்கும் திருவோட்டை எடுத்துக் கொண்டு போனார்.

அண்ணைக்கு ராஜா பிச்சையாக எடுத்துக் கொண்டு வந்த சாப்பாட்டை மதியத்திற்கு கொண்டு வந்து சாப்பிட்டார். ஏழு நாட்கள் முடிந்தது சூஃபி ஞானியைப் பார்க்க வந்தார் அரசன்.

“இப்போது நீங்கள் கடவுள் பற்றி என்ன கேட்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அதைக் கேளுங்க “ என்றார் சூஃபி ஞானி

அப்போது அந்த அரசன் சொன்னான் “இந்த ஏழு நாட்களுக்கு முன்னால் நான் உங்களிடம் என்ன கேட்க வேண்டும் என்று நினைத்தேனோ அதற்கான பதில் இந்த ஏழு நாட்களில் எனக்குக் கிடைச்சுட்டது”

“அரசனாக இருக்கும்போது நான் அறியாமையில  இருந்தேன்.. அப்போ  எனக்குக் கிடைக்காத அனுபவம் பிச்சைப்பத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் போது எனக்குக் கிடைச்சது”

அரசனாக இருந்தபோது என்னிடம் மித மிஞ்சி இருந்த  நான் எண்ற ஆணவம், ஆகங்காரம்,  அனைத்தும் அடியோடு நோறுங்கிப்போயிட்டது. தினமும் நூத்துக் கணக்கான என்னொட பிரஜைகள் என்ன வேடிக்கை பாப்பாங்க. ஏழை எளிய ஜனங்க எல்லாம் எனக்கு பிச்சை போட்டாங்க.. நானும் பிச்சை கேட்டு போனது எல்லாம் சராசரி மக்கள். நீங்க சொன்ன மாதிரி என்னோட அரண்மனை பணியாளர்கள் யாரையும் கூட்டிகிட்டுப் போகல. நிறைய பேருக்கு நான் யாருன்னு தெரியல. பிச்சைக்காரன் அப்பிடின்னுதான் எனக்கு பிச்சை போட்டாங்க.

ஆணவம் என்னைவிட்டு முழுமையாக விலகிவிட்டது. அதனால் என் மனம் முழுக்க அமைதியும் ஆனந்தமும் நிரம்பி வழிகிறது. இனி எனக்கு சந்தேகம் என்று கேட்க எதுவும் இல்லை.

எனக்கு சரியான வழிகாட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் தாங்களுக்கு நன்றி என்று சொல்லிவிட்டு சூஃபி ஞானியிடம் விடைபெற்றான் அந்த அரசன்.

இந்த ஏழு நாள்ள அந்த ராஜா புது ஜென்மம் எடுத்த மாதிரி இருந்தது. ஒரு மனுஷனோட தலைக்கனம், ஆணவம், அகங்காரம் இதெல்லாம் அவங்கிட்ட காணாமப் போச்சின்னா என்ன நடக்கும் ? மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்க முக்கியமா 10 நன்மைகள் நடக்கும்னு சொல்றாங்க. அது என்னென்னன்னு பாக்கலாம்.

1.நிறைய பேசுவது குறைஞ்சு போகும்.

2.அடுத்தவங்க சொல்றத பொறுமையா கேக்க முடியும்.

3.கோபம் குறைஞ்சிபோகும்.

4.பாதுகாப்பில்லாதமாதிரி இருக்கும் உணர்வு இருக்காது.

5. தன்னோட தவறுகளை எதுன்னு சுலபமா தெரிஞ்சிக்க முடியும்.

6. நம்மோட நிறையபேர் சஹஜமா பழக ஆரம்பிப்பாங்க.

7. அடுத்தவங்களை சகஜமா புரிஞ்சிக்க முடியும்.

8. உண்மையா நாம் என்ன நினைக்கிறோம் அப்படிங்கறதை வெளிப்படையா பேச முடியும்.

9. நம்மபேர்ல நிறையபேர் நம்பிக்கை வைப்பாங்க.

10. நமது முன்னேற்றத்துக்கு வேண்டிய புதியசெய்திகள் நிறைய நம்மத் தேடிவர ஆரம்பிக்கும்.

இன்னொரு முக்கியமான சமாச்சாரம், எங்கயாச்சும் போய் பிசை எடுத்தாதான் நம்ம ஆணவம் அகங்காரம் நம்ம ஈகோ குறையும்னு இல்ல.

வேற என்ன செஞ்சா இது குறையும்னு கமெண்ட் பகுதியில எழுதுங்க.

நன்றி, வணக்கம்.

பூமி ஞானசூரியன்

 

Saturday, April 19, 2025

THE DIVINE GIFT - ஈசன் தந்த வரம்

 

ஈசன் தந்த வரம்

நான் என்னோட 20 வயசுல ஜென் துறவியாக ஆனேன். 40 வருஷத்துல  நான்  ஜென் பற்றி தெரிஞ்சுகிட்டேன். என்னோட 60 வயசுல நான் ஜென் குருவாக மாறி உபதேசம் பண்ண ஆரம்பிச்சேன்” அப்படி ன்னு அடிக்கடி சொல்லுவார் அவரோட வயசு நூத்தி இருபது. அவர் பேரு  ஜோஷூயா .

ஒரு நாள் ஒரு இளம் துறவி இவரைப் பார்க்க வந்தார். இவஉங்களுக்கு என்ன வேணும் “ அப்டின்னு கேட்டார்.

ஏனக்கு ஒண்ணும் வேணாம்” என்று தயங்கி தயங்கி சொன்னார்.

“ஓண்ணும் வேணாம்னா எதுக்கு வந்திங்க ? கிளம்புங்க” என்றார் குரு.

மீண்டும் தயங்கியபடி” நான் துறவியா ஆயிட்டேன், ஆனா என்ன செய்யறதுன்னு தெரியல.. அதான் உங்கள பாத்துட்டு போகலாமுன்னு வந்தேன் ..”

“எதாச்சும் செய்யணும்னு உங்க மனசுல எதாச்சும் இருக்குமே .. அதச் சொல்லுங்க.

“ என்னோட மனசுல எதுவும் இல்ல. நான் என்ன செய்யறதுன்னும் தெரியல. இதுக்கு நீங்க தான் எனக்கு வழி காட்டணும் “ அப்படின்னு சொன்னார்.

மனசுல எதுவுமே இல்லையா?” கேட்டாரு ஜென்குரு.

எதுவும் இல்லை  குருவேஅப்படிண்னார்மறுபடியும் அந்த இளம் துறவி.

.”அப்படின்னா மனசுல எதுவும் இல்லங்கறதை தூக்கி வெளியில போட்டுட்டு திரும்பவும் வாஅப்படின்னு சொன்னார் அந்த ஜென் துறவி.

அப்ப அந்த இளம் துறவி சொன்னார்ஒண்ணுமே இல்லாததை எப்படி தூக்கி எறியறதுன்னு எனக்கு தெரியல சுவாமிஅப்படின்னு சொன்னார் அவர்.

ஒண்ணுமே இல்லாததை தூக்கி எறியறதுன்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு பிறகு இங்க வாஅப்படின்னு சொல்லி அந்த இளம் துறவியை அந்த குருசாமி வலுக்கட்டாயமா அனுப்பி வச்சிட்டார்.

வேற என்ன செய்யறதுன்னு தெரியாம அந்த இளம் துறவி திரும்பப் போயிட்டார்.

ஓருத்தர் பஸ்சுல ஏறி உக்காந்துட்டார். கண்டக்டர் வந்து எங்க போறிங்கன்னு கேட்டா ? எனக்கு அதப்பத்தி ஒண்ணும் ஐடியா இல்ல. நீங்களே ஒரு நல்ல ஊரா சொல்லுங்க” அப்படின்னார். ஒடனே கண்டக்டர் விசில் அடிச்சி பஸ்ஸை நிறுத்தினார். பஸ் நிண்ணதும் இங்க இறங்கிக்கங்க இது   நல்ல ஊருதான் சார் அப்படின்னாராம்.

இப்பொ அந்த கண்டக்டர் என்ன செஞ்சாரோ அதே வேலையத்தான் அந்த ஜென்துறவியும் பண்ணார்.

நாம் பேசும்போது எப்பவும் தெளிவாப் பேசணும். நாம் என்ன பேசறோம் அப்படிங்கறது அடுத்தவங்களுக்கு புரியணும். சில பேர் பேசறது அவுங்களுக்கே புரியாது. பேசிட்டு, நம்மகிட்டயே கேப்பாங்க நான் என்ன சொன்னேன் “அப்படின்னு.

“ நாங்க சிறுசா இருக்கறதால யாரும் எங்கள மதிக்க மாட்றாங்க.. அதனால நாம் கடிச்ச உடனே யாரா இருந்தாலும் செத்துப் போகணும், அப்பிடி ஒரு வரத்தை சிவபெருமான் கிட்டெ வாங்கணும் அப்படீன்னு ஒரு எறும்பு  ஆசைப்பட்டது.

அந்த  எறும்பு சிவ பெருமானை நோக்கி தவம் செய்ய, உடனே சிவபெருமான் காட்சி தந்தார். “என்ன வரம் வேண்டும் கேளுங்கள் அப்படின்னாரு. உடனே அந்த எறும்புக்கு ஒரே சந்தோஷம். சிவபெருமான் காட்சி குடுத்தா போதும். அப்புறம் என்ன வரம் கேட்டாலும் குடுத்துடுவார். அது அந்த எறும்புக்கு தெரியும். வரம் குடுத்த சிவபெருமான் தலையில கை வைக்கப் போன சூரபத்மன் கதை கூட அந்த எறும்புக்கு தெரியும்.

அதனால அது கேட்டது, “ நான் கடிச்ச உடனெ செத்துப்போகணும் அதுக்கு நீங்க அருள்பாலிக்கணும் “ அப்படின்னு கேட்டது. சிவபெருமான் “அப்படியே தந்தேன்” அப்படின்னு சொல்லிட்டார். எங்க எறும்பு இனத்துக்காக குடுத்த வரத்துக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தது.

ஊருக்கு வந்ததும் எறும்புகள் மகசபையை கூட்டிச்சு. அதுல அது செய்த தவத்தப்பற்றி சொன்னது. சிவபெருமான் எப்பிடி காட்சி குடுத்தார் ? எப்பிடி இது வரம் கேட்டது ? எப்பிடி அவர் உடனே கொடுத்தார் அப்படின்னு விலாவாரியா சொன்னது.

அந்த எறும்பு தலைவனை எல்லாரும் பாராட்டினாங்க. இப்பொ அந்த வரம் பலிக்குதா அப்படின்னு பாக்கணும். அதுக்கு ஒரு மனிதனை கடிச்சி சோதனை செய்து பாக்கணும்.

உடனே ஒரு எறும்பு போயி ஒரு மனிதனை கடிச்சது. அவன் கையினால ஒரு தட்டு தட்டினான். உடனே அந்த எறும்பு செத்துப் போச்சி. அப்புறம் இதே மாதிரி இரண்டு மூணு எறும்புங்க இரண்டு மூணு மனுஷங்களை கடிச்ச்ச எறும்புகள் அத்தனையும் தொப்தொப்புன்னு  விழுந்து செத்துப் போச்சிங்க.

உடனே வரம் வாங்கின எறும்பு கடவுள்கிட்ட போய் கேட்டிச்சு, அப்பொ அவர் சொன்னார், கடிச்ச உடனே செத்துப் போகணும்னுதானே கேட்டிங்க. நான் அதத்தானே குடுத்தேன் அப்படின்னார். “நாங்க கடிச்சா கடிபட்டவன் சாகணும்னு கேட்டியா ?”

அந்த எறும்பு தன் தவற்றை உணர்ந்தது, அதனை மாற்றித் தரும்படி கேட்டது, சிவபெருமான் உடனடியாக மாற்றமுடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் இப்போதும் கூட அது கடித்தால்   நாம் ஒரு தட்டு தட்டினால் அது இறந்து போகிறது. கடவுள் குடுத்த வரம்தான் அதுக்குக் காரணம்.

அதனால் நாம் பேசும்போது தெளிவாக பேசணும்னு பாத்தோம். அடுத்து அந்த இளம் துறவி என் மனசுல எதுவுமில்லன்னு சொன்னார்.

அந்த மனித மனத்தை நிபுணர்கள் எத்தனை பிரிவா  பிரிக்கிறாங்கன்னு பாக்கலாம். மனித மனகளை மூணா பிரிக்கிறாங்க. முதல் வகை மனத்தின் பெயர் உணர்வு மனம் அல்லது புறமனம், ஆங்கிலத்துல அதை “கான்சியஸ் மைண்ட் “ அப்படின்னு சொல்றாங்க. அதுல, நிகழ்கால எண்ணங்கள், தீர்மானங்கள், ஐம்புலன் தகவல்கள் எல்லாம் இருக்கும்.

இரண்டாவது வகைக்கு  நனவுமனம்  அல்லது ஆழ்மனம். ஆங்கிலத்தில் இதோட பெயர்  சப்கான்சியஸ் மைண்ட். இதில் சேமிக்கப்பட்ட தகவல்கள், தன்னிச்சையாக நடப்பவை (தட்டச்சு, கார் அல்லது இதர வாகனங்கள் ஓட்டுவது), நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், எல்லாம் இதில் நிரம்பி வழியும்.

மூன்றாவது வகை மனத்தை உணர்வற்ற மனம்னு சொல்றாங்க, இதை ஆங்கிலத்தில் அன்கான்சியஸ் மைண்ட், ன்னு சொல்றாங்க. இதப்பற்றி முதன் முதலாக சொன்னவர் சிக்மண்ட் ஃபிராய்ட். இந்த உணர்வற்ற மனத்துல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது. இதில் ஆழ்ந்திரும் பயம், ஆசைகள், மன வேட்கைகள், முன்னோர்களிடமிருந்து பெறப்படுபவை எல்லாம் இதில் அடக்கம்.

இவற்றில் எதுவும் இல்லை என்கிறார், அந்த இளம் துறவி, அவர் ஏன் அப்படி சொன்னார், என்று உங்களால் சொல்ல முடியுமா ?

கமெண்ட் பகுதியில் எழுதுங்கள், அன்புகூர்ந்து.

பூமி ஞானசூரியன்.

Thursday, April 17, 2025

அந்தமான் தீவுகளில் ஆஃப்ரிக்க பழங்குடிகள் எப்படி ? - HOW AFRICAN ROOTS REACHED THE ANDAMANS ?

 அந்தமான் தீவுகளில்

ஆஃப்ரிக்க பழங்குடிகள்

எப்படி ?




அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்ள,  "ஓங்கி ஐலேண்ட்"(ONGI ISLAND)  அப்படின்னு ஒரு தீவு. அங்க 1987 வது ஆண்டு. நாட்டுப்புற கலை விழா  நடந்தது. அதன் பேரு இந்தியில் " த்வீப் மகோத்சசவ்" (DWEEP MAHOTSAV).  இந்திய அரசாங்கம் அதை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த ஓங்கித் தீவுல நடந்த அந்த நாட்டுப்புற கலைவிழாவுல அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கலந்து கொள்ள இருந்தார், ஆனால் அன்றைக்கு வரமுடியல.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்ள ஒரு மாசத்துக்கு நடந்தது. அதுல கலந்துக்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அந்தமான் நிக்கோபார்ல  தீவுகள் ஒரு மாதம் கப்பல்ல பயணம் செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைச்சது. அந்த ஒரு மாசமும் தங்கினது, சாப்பிடது எல்லமும் கப்பல்லதான்.

100 பேருக்கு மேல தனியா ஒரு கப்பல்ல போனோம். எல்லாருமே  நாட்டுப்புற கலைஞர்கள். கேரளாவின் கதகளி, கர்னாடகாவின் யக்ஷகானம், ஆந்திராவின் சிந்து பாகவதம், மகாராஷ்ட்ராவின் பண்டுவானி, அப்புறம் வடகிழக்கு மாநிலங்கள்ள இருந்தும் நிறையபேர் வந்திருந்தாங்க. 

அவுங்க இல்லாம நாங்க ஒரு குழு அதை படம் எடுக்கும் குழு. இந்த கலைவிழா நடத்த ஒரு நாள் இந்த ஓங்கி தீவுக்கு போனோம்.  ஆப்ரிக்க இனத்தை வேராகக் கொண்ட ஓங்கி இனத்து மக்கள் இங்க வசிக்கிறாங்க. இவுங்களுக்கு ஒடம்புல பொட்டுத் துணியும் அணியும் பழக்கம் இல்ல. நாங்க போன அன்றைக்குமட்டும் ரொம்ப குறைச்சலா ஆடை அணிஞ்சிருந்தாங்க.

குறிப்பாக சில பழங்குடி மக்கள் வசிக்கும் தீவுகளுக்கு சுற்றுலா வரக்கூடியவர்களுக்கு அனுமதி இல்லை. கீழ்கண்ட பழங்குடி மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.

1. கிரேட் அந்தமானீஸ் 2. ஓங்கி 3. ஜரவா  4. சென்டினெலிஸ் 5. நிகோபாரிஸ் 6. ஷாம்பென்

முதல் நான்கு பழங்குடிகள் நீக்ரிடஸ் என்னும் பழங்குடிகள் அந்தமானில் குடியேறி இருப்பது ஆச்சரியம் ! 

அவுங்க வீடுகள் எல்லாம் மரத்துக்கு மேல கிளைகள் மேல அமைச்சி இருந்தாங்க, கீழேயிருந்து இரு ஏணி இருக்கு. அதுலதான் ஏறிப்போகணும். நாங்க அதுல ஏறிப்பாத்தோம்.

அந்த தீவுல நாங்க ஒரு தென்னைமரக் காட்டை பாத்தோம், ஏகமான தேங்காய் கொட்டிக்கிடந்தது, யாரும் அங்க தேங்காவை சமைக்க பயன்படுத்றதில்ல, மட்டைகளும் கொட்டிகிடக்கு, உள்ள நடக்க முடியாது.

அந்த ஓங்கி இனத்து ஆண்கள், முட்டிக்கால் தண்ணியில நடந்து போயி அம்பினால மீன்களை வேட்டை ஆடுறாங்க, ஒற்றை மரத்துல செய்த கெனொ அப்படிங்கற படகை மீன் பிடிக்கப் பயன்படுத்தறாங்க. நாங்க அந்தத் தீவுக்குப் போனப்ப அந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை சரியா 100 பேர்.

அவர்களோட முக்கியமான உணவு பன்றி இறச்சியும், மீனும்தான், சைவம்னா கிழங்குகள்தான். 

அந்தத் தீவுக்கு 10 கிலோமீட்டர் முன்னாடியே   கப்பலை நிறுத்திட்டாங்க. நாங்க எல்லாரும் இறங்கி அஞ்சாறு படகுகள்ள  அந்த ஓங்கி தீவுக்கு போனோம்.

அங்க ஓங்கி தீவு கரையில் படகை நிறுத்தினோம். அந்த கரையில இருந்த மரங்கள்ள கயிறு போட்டு படகுகளை கட்டிட்டு  இறங்கி நடந்து தீவுக்கு உள்ள போனோம்.

அந்தத் தீவில பல மாநில நட்டுப்புற கலைகளும் ஒரு 4 மணி நேரம் நடந்தது. அதை 16 எம் எம் ஃபிலிம்ல படம் எடுத்தோம், அந்த குழுவில்தான் நான் இருந்தேன்.

 அந்த விழா முடிஞ்சது. நாங்கள் படகுகள் நிறுத்தின  இடத்துக்கு போனோம்.அங்க போய் பார்த்தது எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. காரணம், நாங்க வந்த படகுகள் எல்லாம் இருந்தது. ஆனால் அந்த இடத்துல ஒரு பொட்டு தண்ணிகூட இல்லை. படகுகள் எல்லாம் மணல்ல நிண்ணுகிட்டு இருந்ததுங்க.

நாங்க காலையில் வரும்போது தண்ணியில தான் படகுகளை நிறுத்தினோம். அந்த தண்ணி இப்போ ஒரு மூணு கிலோமீட்டர் தொலைவில இருந்தது.

அப்ப அங்க இருந்தவங்க சொன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த தண்ணி இங்க வந்துரும் அப்படின்னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி ஒரு அரைமணி நேரத்துல அந்த தண்ணீர் வந்து நிரம்பினது. நாங்க எல்லாரும் படகுல ஏறி மறுபடியும் கப்பலுக்கு வந்து சேர்ந்தோம். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

எதனால அப்படி நடந்தது. அன்னைக்கு ராத்திரி மறுபடியும் கப்பல் பயணம் செய்யும்போது. இதப் பத்தி அந்த கப்பலோட கேப்டன் கிட்ட நான் கேட்டேன். அவர்தான் சொன்னாரு. அது பேரு ஹைடைட் மற்றும்  லோடைட் (HIGH TIDE & LOW TIDE).

 ஒரு நாளில் இந்த மாதிரி ரெண்டு தடவ தண்ணி வந்து ஏறி இறங்குமாம்? அதாவது அது கடல்ல இல்ல அது பேக் வாட்டர் என்று சொல்லக்கூடிய உப்பங்கழி.

அதுக்கு பிறகு பாத்திங்கன்னா பழவேற்காடு பகுதி மீனவர்களிடம் இதைப் பற்றி நான் பேசி இருக்கேன். இத அவங்க ஹை டைம் லோ டைட் அப்படிங்கறத வெள்ளம் வந்தம் அப்டின்னு சொல்றாங்க.

பூமி ஞானசூரியன்

ஒரு நாள் ஒரு தேவதை வரும் - WAITING FOR OPPORTUNITIES

ஒரு நாள் ஒரு தேவதை வரும் குடோ ன்னு சொன்னா போதும் ராஜாவே எழுந்து நிப்பார். அவ்ளோ மரியாதை. சாதா ஜனங்க பேர்ல உசிரையே வச்சிருப்பார். எப்பவும் ...