Saturday, May 17, 2025

GROUNDNUT MILK IN PLACE OF COWS MILK பசும்பாலுக்கு பதிலாக நிலக்கடலை பால்...

#GroundnutMilk #PeanutMilk #InPlaceOfCowsMilk #GroundnutButter #GroundnutOil #GroundnutWine #TNAUAgriTechPortal #DoitYourselfAtHome #HowToPrepareAtHome #SimilarToSoyaMilkPreparation #AsNoonMealForSchoolChildren #AlternateToCowsMilk  #GeorgeWashingtonCarver #BlackLeonardo #gnanasuriabahavanacademy #bhumiiTrust #bhumiignanasurian #viralProgramme

பசும்பாலுக்கு பதிலாக 

நிலக்கடலை பால்...

GROUNDNUT MILK = COW'S MILK

பசும்பால் பற்றாக்குறை, மலிவான விலையில் பசும்பாலுக்கு இணையான பால் வினியோகம், பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவை ஊட்டமிகு உணவாக மாற்றுதல் போன்றவற்றிற்கு நிலக்கடலை பால் எப்படி மாற்றாக அமையும் என்ற கேள்விகளுக்கு இந்தப் பதிவு நிச்சயம் உதவும்.

நிலக்கடலையில் மதிப்புக் கூட்டுதல் மூலமாக என்னென்ன பொருட்களை செய்ய முடியும் ?

நிலக்கடலையிலிருந்து எண்ணெய்,  பால்,  வெண்ணைய், வறுத்தகடலை, பிண்ணாக்கு, கேக், ஓயின் ஆகியவற்றை எல்லாம் தயார் செய்ய முடியும்.

ஆனால் இந்தியாவில் நிலக்கடலையை பெரும்பங்கு எண்ணை எடுப்பதற்காக பயன்படுகிறது

தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில், (TNAU AGRITECH PORTAL) நிலக்கடலையில் பால் , வெண்ணை,  எண்ணெய், பிண்ணாக்கு, ஆகியவற்றை மதிப்புக் கூட்டுதல் (VALUE ADDITION) செய்ய முடியும் ?  அவற்றை எப்படி தயாரிக்கலாம் என்றும் தகவல்கள் உள்ளன.

நிலக்கடலை பால் தயாரிப்பது எப்படி ?

முதலில் நல்ல தரமான நிலக்கடலையை தேர்வு செய்து எடுத்து கொள்ளுங்கள்,

அதனை சுத்தம் செய்து, வறுத்து, அவற்றின் சிவப்பு நிறத் தோல் மற்றும் கடலைப் பறுப்புகளின் ஊடாக இருக்கும் முளைக் குருத்துக்களை நீக்கி, பின்னர் முளைக்குருத்துகள் நீக்கப்பட்ட பறுப்புக்களை அரைத்து, சீரான கூழாக தயாரித்து, இந்தக் கூழினை 7 மடங்கு தண்ணீருடன் நன்கு கலந்து, அத்துடன் கால்சியம் ஹைட்ராக்சைடு ரசாயனம் சேர்த்து, அதன் கார அமில நிலையை 6.8 ஆக மாற்றி, அத்துடன் டை சோடியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் பாஸ்பேட் நிலக்கடலை பாலை ஸ்திரப்படுத்துதல் வேண்டும்.

இந்த நிலக்கடலை பாலை வடிகட்டி அத்துடன் ஏ,டி,பி2, ஃபோலிக் ஆசிட், பி12 மற்றும் கால்சியம், அயன், ஆகிய தாது உப்புக்களை சேர்க்க வேண்டும்.

 அத்துடன் நிலக்கடலை பாலுக்கு இனிப்பு சேர்க்க 7 சதம் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

 இப்படி தயார் செய்த நிலக்கடலை பாலை ஹேமோ ஜினைஸ் மற்றும் நீராவி மூலமாக பதப்படுத்தினால் நிலக்கடலை பால் தயார்.

இந்தப் பாலை பாட்டில்களில் அடைத்து குளிர்பதனப் பெட்டிகளில் சேமிக்க வேண்டும்

சோயா மொச்சைப் பாலைப்போல இந்த நிலக்கடலைப் பாலை பயன்படுத்தலாம். பசும்பாலுக்குப் பதிலாகக் கூட இதனைப் உபயோகப்படுத்தலாம். சத்து நிறைந்த இந்தப் பாலை பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

இதனை பயன்படுத்தத் தொடங்கினால் சிறந்த குழந்தை உணவாக மாறும் வாய்ப்பு உண்டு.


நிலக்கடலை பாலை கண்டுபிடித்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற விவசாய விஞ்ஞானி.

இவர் தாவரவியல் அறிஞர் மட்டுமல்ல இயற்கை வளங்களை பாதுகாத்த அறிவியல் அறிஞரும் கூட. 1860 ம் ஆண்டு அமெரிகாவில் மிசவுரியில் பிறந்தவர் 1943 ம் ஆண்டு வரை வாழ்ந்து பல அரிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தியவர் நிலக்கடலையில் அவர் 100 வகையான பொருட்களை உருவாக்கியவர் அவர்தான்.

நிலக்கடலையிலிருந்து அழகு சாதனப் பொருட்கள், சாயங்கள், பெயிண்டுகள், பிளாஸ்டிக்குகள், ஆகியவற்றையும் கண்டுபிடித்தார்

1941 ம் ஆண்டு டைம் பத்திரிக்கை இவரை பிளாக் லியனார்டோ என்று எழுதியது.

GEORGE WASHINGTON CARVER
(Founder of Groundnut Milk)

நிலக்கடலை மாவுடன் கொஞ்சம் எண்ணெய், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கொஞ்சம் நிலக்கடலை சாம்பல், மற்றும் தண்ணீர் சேர்த்து இந்த பாலை தயார் செய்தார்.

அப்படி தயார் செய்தபால் பசும்பாலுக்கு சமமாக இருந்ததாம் பசும்பாலுக்கும் அதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்கிறார்கள். ஆனால் பசும்பாலைவிட மிகவும் மலிவாக தயாரிக்க முடியும் என்று சொன்னார் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

பசும்பாலுக்கும் நிலக்கடலை பாலுக்கும் என்ன வித்தியாசம் ?

ஒரு கப் பசும்பாலில் அதாவது டயரி மில்க் ல் இருப்பது போல நிலக்கடலை பாலிலும் 8 கிராம் புரதம் அடங்கி உள்ளது. அத்துடன் நிலக்கடலை பாலில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

இன்னொரு முக்கியமான அம்சம் நிலக்கடலை பால் கொலஸ்ட்ரால் இல்லாதது என்பது அத்துடன் வேகன் கோவர் மற்றும் டயரி கொலஸ்ட்ரால் ஹார்மோன் மற்றும் லேக்டோஸ் இல்லாதது என்று நேஷனல் பீநட் போர்டும் சொல்லுகிறது

வளரும் நாடுகளுக்கும் வளராத நாடுகளுக்கும் ஒரு வரப்பிரசாதம்

வளரும் நாடுகள் மற்றும் வளராத நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது புரதப் பற்றாக்குறை.

இந்த பிரச்சனையை அதிக செலவில்லாமல் தீர்க்கக் கூடியாது காய்கறிகள் மூலமாக கிடைக்கும் புரதம் மட்டும்தான்.

இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நிலக்கடலை பாலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பால் வகைகளை ஆராய்ச்சி மூலமாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கொய்யா பழங்களின் தசையை சேர்த்து ஒருவகையான நிலக்கடலை பாலை தயார் செய்துள்ளார்கள்.

அது போலவே உம்பு பழத்தசையையும் பயன்படுத்தி ஒரு வகையான நிலக்கடலை பாலை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது நிலக்கடலையை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 

இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று ஜர்னல் ஆப்தி சவூதி சொசைட்டி ஆஃப் அக்ரிகல்சரல் சைண்டீஸ்ட்ஸ், 2015 ம் ஆண்டு வெளியிட்டுள்ளது அதற்கான இணைப்பினை கீழே தந்துள்ளேன்.

References Fir Further Reading

1.     Preparation of groundnut milk and its qualitative analysis / https://www.researchgate.net

2.     How to make peanut milk? The Almond Eater / https://www.thealmondeater,com

3.     25 Easy and tasty groundnut milk recipes by home cooks / Cookpad /https://www.cookpad.com

4.     DIY Peanut Milk: Easy Step By Step Guide / National Peanut Board / https://www.nationalpeanutboard.org

5.     Preparation of groundnut milk and its qualitative analysis ? CABI Digital library/ https://www.cabidigitallibrary.org

6.    

Thursday, May 15, 2025

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள் - 10 POWERFUL HEALTH BENEFITS OF PEANUTS (GROUNDNUT)

#GroundnutHealthBenefits #PeanutsForHeartHealth #IsGroundnutGoodForHeart #GroundnutNutritionFacts #GroundnutAndWeightLoss #GroundnutAndDiabetesControl #BenefitsOfGroundnutForSkin #GroundnutForBoneHealth #EyeHealthCancerPreventionGallstone #NutritionContentOfRawPeanuts


வேர்கடலை சாப்பிடுவதால் 
கிடைக்கும் 10 பயன்கள்
Groundnut Pods

வேர்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய் வருமா ? வராதா ? ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா ? கட்டுப்படுத்தாதா ? புற்று நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இதில் உள்ளதா? மூளை வளர்ச்சிக்கு இது உதவுமா? இப்படி பல முக்கிய செய்திகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

1.  மானோ அன்சேச்சுரெடட் மற்றும் பாலி அன்சேச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள், இதய நோய்களை குறைக்கிறது.

2. கூடுதலான புரதமும், நார்ச்சத்தும் இருப்பதால். கூடுதலான உடல் எடையை குறைக்கிறது.

3. வேர்க்கடலையில். கிளைசிமிக் இண்டெக்ஸ் என்பது குறைவாக இருப்பதால். ரத்த சர்க்கரையின் அளவை இது குறைக்கிறது.

4.  பாஸ்பரஸ் மற்றும் மக்னீசிய சத்து அதிகம் இருப்பதால். இவை எலும்புகளை உறுதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

Fried Groundnut 

5. ஃபோலேட் மற்றும் வைட்டமின் இ அதிகம் இருப்பதால். இது மூளை ஆரோக்கியத்தை, அதன் செயல்பாடுகளை சீர் செய்கிறது.

6. ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் கணிசமாக இருப்பதால்  புற்று நோய்கள் புறப்படும்போதே  தடுக்கிறது.

7. ஆரோக்கியமான கொழுப்பு சத்து இதில் அடங்கி இருப்பதால். பித்தப்பை. கற்கள் உருவாவதை தடுக்கிறது.

8.     வைட்டமின் இ சத்து அதிகம் இருப்பதால் இது கண் பார்வை ஆரோக்கியத்தை  கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

வைட்டமின் இ சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால். இது. கூடுதலான வெப்பத்தால் ஏற்படும் தோல் பாதிப்பினை தடுக்க உதவுகிறது.

10.இதில் இருக்கும் கூடுதலான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள். உடலில் ஏற்படும் கூடுதலாக ஏற்படும். இன்ஃபலமேஷனை கட்டுப்படுத்த உதவுகிறது.

மலிவான விலையில் கிடைக்கும் 100 கிராம் மணிலாவில் எத்தனை சத்துக்கள் ? எவ்வளவு இருக்கின்றன ? கீழே பாருங்கள்.

NUTRIENT CONTENT OF RAW PEANUTS PER 100 G

Calorie: 567 Kcl

Fats:        49.2 g

Proteins:   25.8 g

Carbohydrates: 16.1 g

Fiber:                  8.5 g

Sugar:                 4.72 g

VITAMINS

B3           12.1 mg

E                8.33 mg

B1              0.64 mg

B6               0.35 mg

B2                0.14 mg

B9                240mcg

MINERALS

Pottassium:        705 mg

Phosphorus:       376 mg

Magnesium:        168 mg

Calcium:                 92 mg

Sodium:                  18 mg

Iron:                         4.58 mg

Zinc:                         3.27 mg

1. வேர்கடலையை சாப்பிடுவதில் உங்கள் அனுபவம் என்ன ? .

2. உபயோகமான இந்தப்பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

3.வேர்கடலையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் ?

4. நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீண்டும் அறிந்துகொள்ள நமது வலைத்தளத்தை பின்தொடருங்கள். 

5. உங்கள் ஆரோக்கியப் பயணத்தில்  நிலக்கடலைக்கு  ஒரு அங்கீகாரம் கொடுங்கள்.

பூமி ஞானசூரியன்

For Further Reading and related Information

1.PEANUTS 101: NUTRITION FACTS AND HEALTH BENEFITS

https://www.healthline.com

2. WWW.MAYOCLINIC.ORG / NUTS AND YOUR HEART

EATING NUTS FOR HEART HEALTH

3. WWW.NATIONALPEANVT BOARD / HERES THE TRUTH ABOUT OMEGA


Wednesday, May 14, 2025

இன்று நீ நாளை நான்- ரூபியின் நினைவாக HE GAVE ALL, TOOK NOTHING - A SOUL REMEMBERED

 #BrotherTribute #RubyLifeStory #FromRichesToRags #FinalStoryOfaSelflessSoul #DeathAndRemembrance #GenerosityAndBetrayal #EmotionalFarewell #TamilTribute #PoeticTributetoaGenerousMan

      இன்று நீ நாளை நான் 

ROOBALLAVANYA BAHAVAN D
       ரூபல்லாவண்ணிய பகவான்

எனது ஐந்து தம்பிகளின் நான்காவது தம்பி.

ஆசிரியர் தேவராஜ் மங்கலட்சுமி தம்பதியரின் நவரத்தினங்களின் இவன் எட்டாவது ரத்தினம்.

வேகமாகப் பேசினால் அதற்கு வலிக்கும் என்று மிருதுவான மொழியில் பேசுவான்.

நிறைய பேர் புகைப்படம் எடுப்பவர் சொன்னால் மட்டுமே சிரிப்பார்கள் சிரமப்பட்டு.

என் தம்பியிடம் சிரிக்காமல் இருக்க யாராச்சும் சொல்ல வேண்டும்.

அவன் உதடுகளில் எப்போதும் உட்கார்ந்திருக்கும் ஒரு மெல்லியப் புன்னகை.

கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள் என்பது தெரிந்த சொலவடை.

இவனைச் சுற்றி இருப்பவர்கள் கைகள் சிவந்திருக்குமாம், வாங்குபவர் கை சிவக்கக் கொடுப்பானாம்.

பருவக்காலங்களில் மட்டுமே இருகரை நிறைய நீர் போகும்.

ஜீவநதிகள் நீரோட்டம் இல்லாத காலத்தும் ஊற்றோட்டத்தை உள்ளே வைத்திருக்கும், ரகசியமாக.

ரூபாலவண்ணின் கடுகளவு தண்ணீரையும் தனது ஆற்றுப் படுகையில் தேக்கி வைத்துப் பழகாத காட்டாறு அவன்.


தன் வீட்டை சுத்தம் செய்கிறதே என்று துடைப்பங்களுக்குக் கூட பட்டுக்குஞ்சம் கட்டி அழகு பார்த்தவன் அவன்.

ரூபாய் நோட்டுக்களைய் பார்க்கும் போது தெல்லாம் நிறைய பேருக்கு என் மனதில் காந்திமகான் வந்து போவார்.

கொஞ்சம் நாட்களாய் எனக்கு ரூபாய் நோட்டுக்களை பார்த்தால் ரூபிதான் ஞாபகத்தில் வந்து போவான்.

0   0   0

ஒரு நாள் அவன் பழக்கடைக்கு போனானாம், மா, பலா, வாழை, ஆப்பிள், பேரி, மங்குஸ்தான், திராட்சை, என அடுக்கி இருக்க, இருபது முதல் அறுபது வயதுவரை, பழக்கடை அனுபவப்பாட்டி ஒன்று, பழங்களின் சத்து பற்றி பட்டியல் போட்டதாம். அத்தனையிலும் ஐந்தைந்து என்றானாம். அத்தனையும் ஒரு கூடையில் அடுக்கி "எழுநூறு ரூபாய்தான் மலிவு விலை" என்று விழாமல் இருந்த, ஒற்றைப் பல் காட்டி சிரித்ததாம். எழுநூறு ரூபாய் சில்லரையாய் இருந்தும், இரண்டு 500 ரூபாய் தந்தான் ரூபி. மீதி 300 என்றது பாட்டி. "வைத்துக்கொள்" என்றான் றூபி. "அது மகராசனாய் இரு" என்று வாழ்த்த இன்னும் ஒரு 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தான் ரூபி.

      இதுதான் ரூபல்லா வண்ணிய பகவான்

0       0     0

இன்று அவன் இல்லை

அவனிடம் வாங்கி கைசிவந்த உறவுகள் இன்று சொல்லுகின்றன "ஆணவக்காரன்".

அவன் பணத்தை மதிக்காதவன்தான்

பணத்திற்குப் பின்னால் பதாகை பிடித்து நடந்தார்கள் அவனைச் சுற்றி இருந்த பலர்.

அவன் மட்டும் ஒற்றை ஆளாய் நடந்தான்.

பணம் அவறுக்கு பதாகை பிடித்து நடந்தது.

பணம் அவனோடு போட்டி போட்டது.

"உன்னைக் கொன்று விடுவேன்" என்றது பணம்

"இப்போதும் நான் போகும் இடத்திற்கு நீ வரமுடியாது..  இனி உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.. எப்போதும் நீ என்னை ஆளமுடியாது.." என்று சொல்லாமல் சொல்லி இருந்தப் பூவுலகிலிருந்து விடை பெற்றான், ரூபி.

2025 ம் ஆண்டு மே மாதம் 10 ம் நாள் அவன் மருத்துவமனை ஒன்றில் இறந்து விட்டான் என்று அறிவித்தார்கள். 

ஆனால் அவன் என்னோடு இன்னும் பேசிக் கொண்டிருக்கிறான் அவன் சாகவில்லை.

அவனுக்கு வேலை ரிசாவ் பேங்கில். ரூபாய் நோட்டுக்களில் படுத்துக்கொண்டே வேலை பார்ப்பான். ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் வேலை. "அதற்கு எந்த பேப்பர் சரிப்படும் ?" சீனாவக்குப் போவான் ஜப்பானுக்குப் போவான். இந்திய நாட்டில் பல மாநிலங்களுக்கும்   ரயில் பெட்டிகளின் பணம் எடுத்துக் கொண்டு போவான், அவன் முன்னால் போவான் பின்னால் இரண்டு ஏகே 47 பாதுகாப்புக்குப் போகும்.

பணத்திற்கும் புது இடங்களைப் பார்க்கப்பிடிக்கும். புது மனிதர்களை சந்திக்கப் பிடிக்கும். பதுக்கிவைப்பவர்களை அதற்குப் பிடிக்காது. புதைத்து வைப்பவர்களையும் அதற்குப் பிடிக்காது.

பணம் ஒருவரைத் தேடிப் போனால் மகிழ்ச்சி. அவரை விட்டு ஓடிப்போனால் தாழ்ச்சி. அது தொடர்ந்து ஓடினால் வீழ்ச்சி.

"ஊருணி நீர் நிறைந்தற்றே 

உலகவாம்  பேரறரி வாளன் திரு" 

(215 வது திருக்குறள்)

ரூபி ஊரின் நடுவே ஊருணியாய் நீர் நிறைந்து நின்றான். முறையோரின் தாகம் தீர்த்தான் எனக்குத் தெரியும் பல பேர் பலவிதமாய் பேசு வார்கள் உலை வாயை மூடினாலும் உலை வாயை மூடமுடியாது

ஏசு நாதரைக் கூட சிலுவையில் ஏற்பே உலகம் இது நபிகள் நாயகத்தைக்கூட கல்லெறிந்து துரத்திய உலகம் இது உலகம் உருண்டை உண்மை உறைத்த கல்வியோவை கழுவில் ஏற்ற துடித்த உலகம் இது எதையும் கேள்வி கேட்டு உலகப் புரிந்துகொள் என்று சொன்ன சாக்ராபீளக்கு கோப்பை நிறைய விஷம் தந்து குடிக்க சொன்ன உலகம் இது

இன்று நீ நாளை நான்

பூமி ஞான சூரியன்

உணவிற்கு ஊட்டமும் உடலுக்கு உறுதியும் தரும் தண்டுக்கீரை - NUTRITIOUS AMARANTHUS GREENS: A POWERHOUSE OF HEALTH

#AmaranthusGreens # DhndukeeraiHealthBenefits #TamilTraditionalGreens #NutritionalLeafyVegetables #SouthIndianDiet #KeeraiVaritiesInTamilnadu #IronRichGreens #HealthyTamilFood #OrganicLeafyGreens

தண்டுக்கீரை 

RED AMARANTHUS

(AMARANTHUS DUBIUS)

நிறைய வீடுகளில் குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. 

சில குழந்தைகள் மருந்து சாப்பிடுவது மாதிரி சாப்பிடுகின்றன.

பல வீடுகளில் பெரியவர்களேகூட கீரை சாப்பிட யோசனை செய்கிறார்கள்.

இதுபற்றிய விழிப்புணர்வு குறைவு, அதனை ஈடு செய்யத்தான் இந்தப்பதிவு.

v அறுக்கீரை அல்லது தண்டுக்கீரை தமிழகத்து சமையலில் இடம் பெறும் முக்கியக் கீரை.  

        நாம் அதிகமாகப் பயன்படுத்தும் கீரைகளில் ஒன்று.

v  இதன் இலைகளை மட்டும் பறித்தும் அறுத்தும் சமைக்கலாம், அதனால்தான் இது அறுக்கீரை. 

v  தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படும் சர்வதேசக் கீரை.

GREEN AMARANTHUS
மகப்பேறு பெற்ற பெண்களுக்கு நல்லது, அதனால் ஏற்படும் உடல் மெலிவை சரி செய்யும், உடலுக்கு சக்தியும் பலமும் தரும்.

vதோசை, சூப்பு, கூட்டு, மசியல் இப்படி பலவகைகளில் சமைத்து சாப்பிடலாம்.

vசித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர்ஜன்னி நோய்களுக்கு அற்புத மருந்தாகிறது.

v 2 x 1.5 மீட்டர் அளவு கொண்ட பாத்திகளில், ஒரு எக்டருக்கு 325 கிராம்  விதைகளை விதைக்க வேண்டும்.

 முளைத்த இளம் செடிகளை 10 -15 செ.மீ இடைவெளி இருக்குமாறு கலைத்து விட வேண்டும், ஒரு எக்டருக்கு 2 டன் மண்புழு உரம் அல்லது 5 டன்  தொழு உரம் கீரை  சீராக  வளர உதவும். 22 முதல் 30 நாட்களில் அறுவடைக்கு வரும்.

100 கிராம் தண்டுக்கீரையில்  வைட்டமின்களும், தாது உப்புக்களும் ஊட்டம் தரும் சத்துக்களும் நிரம்ப உள்ளன.

கலோரிச்சத்து - 23 கிலோ கலோரிச்சத்தும், கார்போஹட்ரேட்டு - 4.02 கிராம், புரதம் 4.02 கிராம்,  நார்ச்ச்த்து - 2.2 கிராம், மற்றும் வைட்டமின் எ , சி, மற்றும் கே வும் நிறைந்துள்ளது. 

இவை தவிர, சுண்ணாம்புச்சத்து, தாமிரம், இரும்பு, மக்னீசியம், மேங்கனீசு, பாஸ்பரஸ், துத்த நாகம் ஆகிய தாது உப்புக்களும் தண்டுக்கீரையில் ஊட்டம் சேர்க்கின்றன.

100 கிராம் தண்டுகீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் விவரம்.

AMARANTHUS DUBIUS

(USDA National Nutrient Data Base)

Energy  23 Kcal

Carbohydrates 4.02 g

Protein 2.42 g

Total Fat 0.33 g

Cholestrol 0 mg

Dietary Fiber  2.2 g

VITAMINS

Niacin    0.658 mg

Pantothenic Acid 0.065 mg

Pyridoxine 0.192 mg

Riboflavin 0.158 mg

Thiamin  0.027 mg

Vitamin A  2917 IU

Vitamin C 43.3 mg

Vitamin K 1140 Ug

ELECTROLYTES

Sodium  20 mg

Potassium 611 mg

MINERALS

Calcium 215 mg

Copper  0.162 mg

Iron       2.32 mg

Magnesium  55 mg

Manganese  0.885 mg

Phosphorus  50 mg

Zinc             0.90

1. இன்று முதல் தண்டுக்கீரையை உங்கள் உணவில் சேர்த்துப் பாருங்கள்.

2. உபயோகமான இந்தப்பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

3. உங்கள் பிரியமான தண்டுக்கீரை சமையல் முறையை எழுதுங்கள்

4. நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீண்டும் அறிந்துகொள்ள நமது வலைத்தளத்தை பின்தொடருங்கள். 

5. உங்கள் ஆரோக்கியப் பயணத்திற்கு தண்டுக்கீரையை பிள்ளையார் சுழி ஆக்குங்கள்.

பூமி ஞானசூரியன்

Thursday, May 8, 2025

ANCIENT IRRIGATION ENGINEERING IN TAMILNADU பண்டைப் பாசனப் பொறியியல்

 #AncientTamilnadu #ExemplaryInIrrigationEngineering #KallanaiAncientDamInCauveryRiver #Dr.AbdulKalam #FormerPresidentOfIndia #InteratedWaterMission #TamilSangaLiterature #Thokappiyam #Silappathikaram #Thirukkural #MazhaikkuriSasthiram #Pattinappalai #KarchiraiTamilNameForCheckdam #NumerousNamesInTamilForWaterBodies #Dr.Kodumadi Shanmugam #பண்டைப்பசனப்பொறியியல்

பண்டைப் பாசனப் 

பொறியியல்
DR.KODUMUDI SHANMUGAM 
(Ex)Sup.Engineer PWD

சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ்நாட்டில் பாசனப் பொறியியல் எப்படி இருந்தது ? கல்லணையை எப்படி கட்டினார்கள் ? அது பார்வையிட்ட வெள்ளைக்காரர்கள் அதுபற்றி என்ன சொன்னார்கள்? பழந்தமிழர்களுக்கு பாசனப்பொறியியலில், எந்த அளவுக்கு அனுபவம் இருந்தது? இதுபற்றியெல்லாம் இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

பண்டைப்பாசனப் பொறியியல்                                                                                                                

பல ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஒரு அற்புதமான ஒரு புத்தகம் கிடைது அந்தப் புத்தகத்தின் தலைப்பு பண்டைப்பாசனப் பொறியியல் என்பது. அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் டாக்டர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள் அவர் பொதுப்பணித்துறையில் கன்காணிப்புப் பொறியாளராக வேலை பார்த்தவர். அவரை ஒரு பொறியாளர் என்று சொல்லுவதைவிட அவர் சிறந்த தமிழறிஞர் என்று சொல்லலாம்.

அப்துல் கலாம்

DR.ABDUL KALAM &
INTEGRATED WATER MISSION

நாம் இன்று வாட்டர்ஷெட் என்கிறோம். வாட்டர் மேனேஜ்மெண்ட் என்கிறோம். நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். இண்டக்ரேட்டட் வாட்டர் மிஷன் என்று சொல்லுவார்.

அப்படிப்பட்ட செய்திகளை நமது முன்னோர்கள் விரல்நுனியில் வைத்திருந்தார் கள். அந்த செய்திகளை எல்லாம் இந்த நூலில் தந்துள்ளார்.

சங்க இலக்கியங்கள்

இந்த பாசனப் பொறியியல் என்னும் சம்மந்தமான செய்திகள் சங்க இலக்கியங்களில் எங்கெல்லாம் இருக்கின்றன என்று தேடிப் பிடித்து நமக்கு விளக்கியுள்ளார்.

சங்க இலக்கியங்கள் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பரிபாடல், சீவகசிந்தாமணி, பெருந்தொகை, மழைக்குறி சாஸ்திரம் என்ற நூல்களில் இருந்தெல்லாம் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்

இது போன்ற செய்திகளை எல்லாம் ஆய்வு செய்ய ஒருத்தருக்கு தமிழ் அறிவும் வேண்டும், அவருக்கு அறிவியல் தொடர்பான  நிபுணத்துவமும் வேண்டும். அப்போதுதான் அவரால் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும்.

கற்சிறை 

கிராமப் புறங்களில் உள்ள ஒடைகளில் ஒடும் நீரை நிறுத்தி அதன் வேகத்தைக் குறைத்து நிலத்தடியில் நீரை சேமிக்கிறோம். சேமித்த நீரைப் பயன்படுத்துகிறோம். இதற்கு நாம் பரவலாக தடுப்பணை என்னும் கட்டுமானத்தை பயன்படுத்துகிறோம். இதனை நாம் ஆங்கிலத்தில் செக்டேம் என்று சொல்லுகிறோம்.

அதாவது ஒடும் நீரை தடுத்து நிறுத்தும் தடுப்பணை. ஆனால் அதனை நம் முன்னோர்கள் கற்சிறை என்று குறிப்பிட்டுள்ளார்கள். மிகையாக வழிந்தோடும் ஓடுநீரை ஆங்கிலத்தில் ரன் ஆஃப் வாட்டர் என்கிறார்கள். அப்படி தப்பி ஒடும் தண்ணீரைப் பிடித்து சிறைவைக்கும் கட்டுமானம் என்று, அதற்கு கற்சிறை என்று சொன்னார்கள். நாம் கூட இனி தடுப்பணையை கற்சிறை என சொல்லலாம்.

தரிசு நிலம்

தரிசாகக் கிடக்கும் நிலங்களுக்கு மிகையாக நீர் இருக்கும் இடங்களில் இருந்து கொண்டு சென்று அவற்றை பயிர் வயல்களாக மாற்றும் தொழில்நுட்பம், நம்மிடம் 3000 ஆண்டுகளாக இருந்தது. அந்த தொழில்நுட்பங்களை நமது முன்னோர்கள், எகிப்து மற்றும் பல ஆப்ரிக்க நாடுகளுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள் என்ற அரிய செய்தியை பதிவு செய்துள்ளார் கொடுமுடி ச.சண்முகம் அவர்கள்.

அதாவது மிகையாக இருக்கும் தண்ணீரை நீர் தட்டுப்பாடு உள்ள நிலங்களுக்கு கொண்டு செல்லும் தொழில் நுட்பம். அதைத்தான் அப்துல்கலாம் அவர்கள் தனது “இண்டக்ரேட்டட் வாட்டர் மிஷன்” திட்டத்தில் அற்புதமாகத் திட்டமிட்டுத் தந்துள்ளார்.

மழை அறுவடை 

வெற்று நிலங்களை வயல்களாக மற்றும் தொழில்நுட்பங்களை நமது முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். அதனால் தான் வட மாவட்டங்களில் ராஜராஜ சோழன் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டினான், என்று நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

நதிநீர் இணைப்பு

நிலத்தை வயலாக்கும் அடிப்படையான தொழில்நுட்பத்தில் இருப்பவை இரண்டு முக்கியமான அம்சங்கள். ஒன்று இருக்கும் இடத்திலிருந்து நீரை இல்லாத இடத்திற்கு கொண்டு செல்வது. இரண்டாவது நீர் வளம் இல்லாத பூமியில் நீர் வளத்தை உருவாக்குவது. முன்னதைச் செய்ய அதிக பொருட் செலவாகும்.

மோடிஜி பாணி லாவோஜி

MODIJI PAANI LAO JI

தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் நதிநீர் இணைப்பு முடிந்துவிடும் என்று நாம் எதிர்பார்த்தோம். இன்னும்கூட எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நான் கூட மோடிஜி பாணி லாவோஜி என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டேன். அதில் நான் நதி நீர் இணைப்பை விரைந்து செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

நாம் எல்லோரும் நம்புவோம் நதிநீர் இணைப்பு வரும் மோடிஜி கண்டிப்பாய் நீர்வளத்தில் ஏழை மாநிலங்களாக உள்ள தென் மாநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவருவார் என நம்புவோம்.

நீர் சுழற்சி

கடலில் இருக்கும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது, இந்த ஆவி மேகமாகத் திரள்கிறது, திரண்ட மேகம் குளிர்ந்து மழையாக பெய்கிறது, பெய்யும் மழைநீர் பலவிதமாய் பயனாகி மிகையாக நீர் மீண்டும் கடலை அடைகிறது. இதைத்தான் நீர் வட்டம் அல்லது நீர் சுழற்சி என்கிறார்கள். ஆங்கிலத்தில் இதனை வாட்டர் சைக்கிள் என்கிறார்கள்.

தமிழ்ப்புலவர்கள்

இந்த நீர்சுழற்சிற்கு உலகத்தின் மிகப்பெரிய கிரேக்க நாட்டின் அறிஞர்கள் ஆசிரியர் தேலஸ் அவர்களுக்கு பிளாட்டோவும் அவருடைய மாணவர் அரிஸ்டாடில் கூட இதற்கு ஏதேதோ விளக்கங்கள் எல்லாம் சொன்னார்கள்

இது பற்றி நமது தமிழ்ப்புலவர்களிடம் கேட்டார்கள் சட்டென ஆளுக்கொரு பாட்டை எழுதி கையில் கொடுத்து விட்டார்கள். பட்டினப்பாலை ஆசிரியர்கள் நல்லுந்துவனார் ஒரு பாட்டு, மைபோட்டுக்கோவனார் ஒரு பாட்டு. மாதிரிக்கு ஒரு பாட்டு சொல்லுகிறேன் கேளுங்கள்.

வான்முகந்த நீர் மழைப் பொழியவும்

மழைப்பொழிந்த நீர் கடல்பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல

நீரினின்னு நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர் பரப்பவும்

அளந்து அறியாப் பல பாண்டம் --

பட்டினப்பாலை உருத்திரங்கண்ணனார்


தொல்காப்பியத்தில் தடுப்பணை 

பாசனத் தொழில் நுட்பத்தை உதாரணமாக காட்டும் அளவிற்கு அந்தத் தொழில்நுட்பம் பிரபலமாக இருந்துள்ளது. ஒடைகளின் குறுக்காக கற்களால் சிறு அணைகள் கட்டி ஒடிவரும் நீரை சிறைபிடித்தது போல தேக்கி வைத்து, கால்வாய் மூலமாக வயல்களுக்கு விநியோகம் செய்யும் முறை, தொல்காப்பியர் காலத்திலேயே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

வீரன் என்பவன் போர்க்களத்தில் எதிர்த்து வரும் போர்வீரர்களை ஒருவரை நின்று ஒடிவரும் நீரை தடுத்து நிறுத்தி சிறைபிடிக்கும் கற்சிறை போல தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லுகிறது ஒரு தொல்காப்பியப்பாடல்.

அந்த இரண்டுவரிப் பாடலை சொல்லுகிறேன் கேளுங்கள்

“விடுசிறைப் புனலைக் கற்சிறை போல

ஒருவன் தாங்கி பெருமையானும்..”

இந்தப்பாட்டு செக்டேம் என்னும் தடுப்பணை பற்றி தொல்காப்பியம் சொல்லும் செய்தி.

கோடி போச்சா ?

இன்னும் இரண்டு செய்திகளை இங்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒரு குளத்தில் முக்கியமானது அதன் கரை. அதைவிட முக்கியமானது கோடி என்பது. மழைக்காலத்தில் கிராமங்களில் விவசாயிகள் பேசும் போது “என்னாச்சு உங்க குளம் கோடி போச்சா?” என்பார்கள். ஆனால் இன்று அந்த பேரெல்லாம் ஓடிபோச்சு !

அதற்கு “நிரம்பிவிட்டதா” என்று அர்த்தம். குளம் நிரம்பியதும் கூடுதலான நீர் கோடியின் மூலமாக வெளியேறும். கோடி இல்லை என்றால் “கரை எங்கு பலவீனமாக இருக்கிறதோ அங்கு உடைப்பெடுக்கும்”. ஆக கரையின் பலவீனமான இடத்தை கண்டுபிடித்து அதனைச் சரி செய்வார்கள்.

கோடி என்பது கரை அல்ல

இந்த கோடியை ஒப்பிட்டு திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை எழுதியுள்ளார். “சுற்றம் தழால்” என்பது திருக்குறளின் 53 வது அதிகாரம். அதில் சுற்றத்தார் என்பவர் ஒரு குளத்திற்கு கோடி போன்றவர் என்கிறது குறள்.

 திருவள்ளுவர் கோடி என்று குறிப்பது குளத்தின் கரையின் ஒரு அங்கமாக இருக்கும் கோடியைப் பற்றித்தானே தவிர கரையைப்பற்றி அல்ல, என்று எழுதிகிறார் டாக்டர் கொடுமுடி சண்முகன் அவர்கள். 

கொடிப்போதல் என்ற வார்த்தை இன்னும் கூட புழக்கத்தில் இருப்பதால் ஆசிரியர் சொல்வது சரியே என்று நான் நினைக்கிறேன் அதனால் கோடி என்பது வேறு கரை என்பது வேறு.

இப்போது அது என்ன திருக்குறள் என்று பார்க்கலாம்

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடுஇன்றி நீர்நிறைத் தற்று”நீர் நிலைகள் பற்றிய பழந்தமிழ் சொற்கள்

பண்டைப் பாசனப் பொறியியல் பற்றி இந்த நூலில் பலநூறு செய்திகள் இருக்கின்றன. அத்தனையும் இந்தப் பதிவில் சொல்ல முடியாது. நீர் நிலைகள் பற்றிய ஏராளமான சொற்களை நாம் தமிழில் பயன்படுத்தி வந்திருக்கிறோம். அந்த சொற்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனாவும் சில சொற்கள் ஊர்களின் பெயர்களில் ஒட்டிக் கொண்டன.

உதாரணமாக சிலவற்றைப் பார்க்கலாம்.

ஏந்தல் என்றால் சிறிய ஏரி, தண்ணீரை ஏந்தப் பிடித்துக் கொண்டிருப்பாதால் அது ஏந்தல்.

தாங்கல் என்பது தண்ணீரைத் தாங்கி நிற்கும் இடம் என்று அர்த்தம்.

இயற்கையான பள்ளங்களில் நீர் தேங்கி இருந்தால் அவை மடு.

ஏரி குளங்கள் கிடங்குகள் போன்றவை பாசன நீரைத் தரும் நீர் ஆதாரங்கள்.

நீர் ஒடும் இடங்கள் ஓடைகள், இலஞ்சி என்பவை பூந்தோட்டங்களில் இருக்கும் நீர் நிலைகள். இவை தவிர கேணி கிணறு கண்மாய் போன்ற சொற்கள் எல்லாம் இன்னும் கூட நமக்குத் தெரிந்த வார்த்தைகளாக உள்ளன

நிகண்டுகள்

இப்போது நாம் நிகண்டு என்று சொல்கிறோம். அது போல தமிழில் நிகண்டுகள் அதில் இதுபோன்ற சொற்கள் எல்லாம் இருக்கும் அதில் நீர்நிலைகள் பற்றிய பாடலை உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன். அந்த ஒரே ஒரு பாட்டில் 18 சொற்கள் அடங்கியுள்ளன இதோ அந்தப் பாடல்

இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி

மலங்கன் மடு ஒடை வாவி சலந்தரம்

வட்டம் தடாகம் நளினி மடு பொய்கை

குட்டம் கிடங்கு குளம்” 

இந்த நூலின் ஆசிரியர் பொறியியல் தொடர்பான பல ஆய்வுகளைச் செய்துள்ளார். அது பற்றி எழுதியும் இருக்கிறார். அவற்றில் பாசன நீர் தொடர்பான செய்திகள் மட்டும் இந்த நூலில் தந்திருக்கிறார். காரணம் இதை நூலாக வெளியிட்டது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் துவாக்குடி நீர் மேலாண்மைப் பயிற்சி மையம்.

இந்த நூலில் உள்ளவற்றில் சிலவற்றை மட்டும்தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறேன். இந்தச் செய்திகள் நாம் பாசனப் பொறியியலில் நமது முன்னோர்கள் எவ்வளவு நுட்பமான அறிவுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

நமது விவசாயிகளுக்கு தற்போது நமக்கு மலிவாகக்  கிடைக்கும் நவீன பாசன முறைகள் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம்,   தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டு அதனை சிறப்பாக பயன்படுத்த வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இந்தப் பதிவை எனது நண்பரும் முன்னாள் தலைமைப்பொறியாளர் அமரர் அகமுடை நம்பி அவர்களுக்கும், இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் கொடுமுடி சண்முகம் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இதுபோன்ற செய்திகளை மக்களுக்குத் தெரிவிப்பது தங்கள் கடமை என்று பண்டைய தமிழர்கள் நினைத்தார்கள். அது பற்றிய விழிப்புணர்வுகள் அவர்களுக்கு இருந்தது.

நமக்கும் அது இருக்கிறதா இல்லையா என்று கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.

குறிப்பு: கரிகாலன் கட்டிய கல்லணைபற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். கரிகாலன் இல்லாத பாசனப்பொறியியலா ? ( நன்றி: எனது மூத்த சகோதரர் டாக்டர். ஐ. இருளப்பன், மேனாள் முதல்வர் மற்றும் தலைவர், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்) நினைவுபடுத்தியமைக்கு.

பூமி ஞானசூரியன்

Tuesday, April 29, 2025

தங்க அரளி ( YELLOW BELLS) மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் MEDICINAL BENEFITS OF YELLOW BELLS (Tecoma Stans) A COMPREHENSIVE GUDE

 #MedicinalBenefitsOfYelloBells #YellowBellsPlantUses #TecomaStansMedicalUses #HerbalMedicineYellowBells #BenefitsOfThangaArali #TraditionalMedicinalPlantsIndia

தங்க அரளி ( YELLOW BELLS) 

மருத்துவப் பயன்கள் 

மற்றும் பயன்பாடுகள்

Awesome Flowers of  Yellow Bells

உங்களுக்கு தெரியுமா? அழகான தங்கரளி. திரும்பிய பக்கங்களில் எல்லாம் பார்க்கலாம். அழகு மரமாக. ஆனால் எவ்வளவு மருத்துவ குணங்களை தன்னிடம் அது வைத்துள்ளது என்று தெரியுமா? அது பற்றி இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளூர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது, சீக்கிரமாய் வளர்வது. ஆண்டு முழுவதும் பூப்பது, அரைத்த மஞ்சள் நிறத்தில் கவர்ச்சி காட்டுவது, கொளுத்தும் வெப்பத்தையும் தாங்குவது, தாக்கும் பூச்சி நோய்களை தாக்குப்பிடிப்பது, குறைவான நிலப்பரப்பில் தன்னை வளர்த்துக் கொள்வது, வானத்தை தொட்டுவிட துடிக்காமல் 15 - 20 அடி உயரத்திற்கு வளர்ந்து அடக்கி வாசிப்பது, சிம்புகளை கிளைகளை எவ்வளவு கழித்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வளர்வது, இதெல்லாம் தான் தங்க அரளி மரத்தின் குணங்கள்.

Serrated Margin Leaves of Yellow Bells

அத்தோடு இந்த மரத்தின் மருத்துவ குணங்களையும், என்னென்ன நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இந்த மரங்களில் உள்ளன, என்பதையும் இங்கு  தந்துள்ளேன்.

பல மொழிப் பெயர்கள்:

தமிழ் : தங்க அரளி – THANGA ARALI

கன்னடம் : கோரநேக்லார் – KORANACHELLAR

தெலுங்கு : பச்சகோட்லா – PACHAKOTLA

இந்தி : பிலியா – PILIA

தாவரவியல் பெயர் : டெக்கோமா ஸ்டேன்ஸ் – TECOMA STANS

பொதுப் பெயர் : எல்லோ பெல்ஸ் – YELLOW BELLA

தாவரவியல் குடும்பம் : பிங்னோனியேசி – BIGNONIACEAE

சொந்த ஊர் : விர்ஜீன் தீவு அமெரிக்கா – VIRGIN ISLAND AMERICA

கீழ்கண்ட நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இந்த மரங்களில் உள்ளது.

1.     1. உடல் உரமூட்டி (Tonic)

2.     2. சிறுநீர் பெருக்கி (Diuretic)

Fruits of Yellow Bells
3.     3. மேகப்புண் (Syphilis)

4.     4. சக்கரை நோய் (Diabetes)

5.     5. குடற் புழு கொல்லி (Anti helminthic)

6.     6. வயிற்றுவலி (Stomach ache)

இப்பொக்கூட உலகம் பூரா 80 சதவிகிதம் இயற்கையான மருந்துகளைத்தான் பயன்படுத்தறாங்க. 

ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி, ஹோமியோபதி எல்லாமே இயற்கை வைத்திய முறைகள்தான்.

Even Seeds Have Medicinal Properties
ஏற்கனவே  நான் செய்த ஆய்வுகள்படி மருத்துவ குணங்கள் இல்லாத மரங்கள் என்று எதையும் ஒதுக்க முடியாது, ஆனால் நாம்  இன்னும் இவற்றை  சரியாகப் பயன்படுத்த வில்லை என்றுதான் இந்தத் துறையின் வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

தங்க அரளி செடிகளை, நோய்களின் சிகிச்சைக்கு நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா ? “ஆம்”  என்றால் உங்கள் கருத்துகளை “கமெண்ட்ஸ்” பகுதியில் எழுதுங்கள் / பதிவிடுங்கள்.

FOR FURTHER READING

1. NCBI - National Centre For Biotechnology Information. "Medicinal Properties of Tecoma Stans."

https://www.ncbi.nlm.nih.gov

2. Plants For a Feature (PFAF).Tacoma stans - Medicinal Plant Database Entry" https://pfaf.org/user/plant.aspx?Latin Name=Tecoma + stans

3. Journal of Ethnopharmacology, Elsevier (ScienceDirect). "Pharmacological and Traditional Uses of Tecoma stans

https://www.sciencedirect.com/journal-of-ethnopharmacology

பூமி ஞானசூரியன்


Sunday, April 27, 2025

கத்தி சண்டை கற்றுக்கொள்வது: ஓரு பொறுமையான பயணம் கதை - LEARNING SWORD FIGHTING A JOURNEY OF PATIENCE

#swordfighting #LearningSwordmanship #PatienceInMartialArts #TraditionalSwordTraining #GnanasuriabahavanAcademy #MartialArtsStory #DisciplineInSwordFighting #MasteringSwordTechniques #GuruStudentRelationship #TimeToLearnSwordFighting

கத்தி சண்டை 

LEARNING SWORD FIGHTING
கற்றுக்கொள்வது: 

ஓரு பொருமையான

பயணம் {கதை}


இந்த கதை நாயகன் கண நேரத்தில் கத்தி சண்டையை கற்றுக்கொண்டு பெரும் வீரனாக வேண்டும் என்று கனவு காண்பவன். தனது விருப்பத்தைத் தன் குருவிடம் சொன்னான். அவர் என்ன சொன்னார் ?  அவன் நினைத்தது நடந்ததா ? இந்த கதையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

வேகம் தேவை தான். ஆனால் அந்த வேகம் விவேகத்துடன் சேர்ந்தால்தான் எதுவும் சரியாக வரும். அப்படி இல்லன்னு நாம் நினைக்கிற மாதிரி. எதையும் செய்ய முடியாது.

பிள்ளையார் பிடிக்கத் தொடங்கி அது குரங்கு பிடிச்ச கதையாயிடும். அதனால எதையும் சரியா திட்டமிடணும். அதுக்கு போதுமான. காலஅவகாசம் கொடுக்கணும்.

செய்ய வேண்டிய வேலையை முழுசா புரிஞ்சிகிட்டு அதுக்குப் பிறகு திட்டம் போடணும்.

அவசர கோலம் அள்ளி தெளிச்ச மாதிரி. அப்படின்னு சொல்லுவாங்க. அவசர அவசரமா போட்டா அது அள்ளி தெளிச்ச மாதிரி ஆயிடும். கோலம் கோலமா இருக்காது. அது அலங்கோலமா ஆயிடும். 

மனிதனுக்கு ஆசை இருக்கலாம். அந்த ஆசை பெரிய ஆசையா இருக்கலாம். ஆனா அது பேராசையாக இருக்க கூடாது. பெரிய ஆசைப்படலாம். தப்பு இல்ல. ஆனா பேராசைப் படக்கூடாது. அது ஒரு பொருளா பணமா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. அத பற்றிய ஒரு கதை தான் இது.

ஒரு ஊர்ல ஒரு இளைஞர். அவனுக்கு கத்தி சண்டை கத்துக்கணும்னு ஆசை. ஆனா. அத சொல்லிக் குடுக்க ஒரு சரியான ஆசிரியர் கிடைக்கல.

கொஞ்ச தூரத்துல ஒரு மலைக் கிராமம் இருக்கு. அந்த கிராமத்துல ஒரு ஆசிரியர் கத்தி சண்டை சொல்லிக் கொடுக்கிறார் அப்படின்னு கேள்விப்பட்டான்.

அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. கேள்விப்பட்ட அடுத்த நாளே அவரப் பாக்க கிளம்பிட்டான். அந்த மலை கிராமத்துக்கு போனான். சுலபமா அவர் இருப்பிடத்தை கண்டு பிடிச்சுட்டான்.

அவருக்கு வணக்கம் சொன்னான். “ஐயா நான் பக்கத்து ஊர்க்காரன். எனக்கு ரொம்ப நாளா ஒரு வாள் வீரனா ஆகணும்னு ஆசை. அதுக்காக ஒரு குருவை தேடிட்டு இருந்தேன். இப்ப தான் உங்களை தெரிஞ்சது” என்று பணிவாக சொன்னான்.

A JOURNEY OF PATIENCE

வாள்சண்டை சொல்லித்தரும் குருநாதர் ரொம்பவும் வயதானவர். அந்த இளைஞன் பேசுவதை அவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதுவும் பதிலாக சொல்லுவதற்கு முன்னால் மீண்டும் அவனே பேசினான்.

“ஐயா நான் இந்த நிமிஷமே உங்க மாணவனான சேர முடிவு பண்ணிட்டேன். எவளோ பணம் செலவானாலும் பரவால்ல. எத்தன நாள்ல நான் இந்தப் பயிற்சியை எடுத்துக்கணும் சொல்லுங்க. சீக்கிரமா நான் ஒரு பெரிய வாள்வீரனா வரணும். அதுதான் என்னோட ஆசை. என்று அவசர அவசரமாக பேசினான்.

பேசி முடித்துவிட்டு அந்த குரு என்ன சொல்லுகிறார் என்று அவர் முகத்தைப் பார்த்தான்.

அந்த குரு அமைதியாக இருந்தார். எதுவும் பேசவில்லை. ஆனால் மெதுவாக சிரிப்பது மாதிரி தெரிஞ்சது இவனுக்கு.

மறுபடியும் அவன் அவரிடம் கேட்டான். “எத்தனை நாளாகும்? எப்ப நான் பெரிய வாள்வீரனாக  ஆக முடியும் ?. மறுபடியும் அவன் பொறுமையை இழந்து கேட்டான். “எத்தனை நாள் பயிற்சி நான் எடுத்துக் கொள்ள வேண்டும் ?. அப்போது அந்த குரு சிரித்தபடி சொன்னார். தம்பி நீங்கள் முதலில் கத்தி பிடித்து சுமாராக சண்டை போடும் அளவுக்கு கற்றுக்கொள்ளலாம். அதற்கு மட்டும் 10 வருஷம் ஆகும் என்றார். அந்த கத்தி சண்டை குரு.

“என்னது 10 வருஷமா “ என்று ஆச்சரியமாகக் கேட்டான். “நீங்க சொல்லி தர்ற மாதிரி ரெண்டு மடங்கு கூடுதலான நேரத்தை இதற்காக செலவு பண்ணி. நான் இந்த கத்தி சண்டையே கத்துக்கிறேன். இப்ப சொல்லுங்க நான் கற்றுக்கொள்ள எத்தனை நாளாகும் ? “என்று கேட்டான் அந்த இளைஞன்.

வாள் சண்டை என்பது அருங்கலை. அதனை ரொம்பவும் மலிவான ஒன்றாக இந்த இளைஞர் நினைக்கிறான். என்று அந்த குருவுக்கு மனதில் பட்டது.

இப்போது அவர் சொன்னார். “ நீ கூடுதலாக இரண்டு மடங்கு நேரம். செலவு செய்து பயிற்சி எடுத்துக் கொண்டால், நீ முழுசா கத்துக்க 20 வருஷம் ஆகும்” என்று சொன்னார்.

“சாதாரண  பயிற்சி எடுத்தால் 10 வருஷமுன்னு  சொன்னீங்க.. ஆனா நான் அது மாதிரி ரெண்டு மடங்கு நேரத்தை செலவு பண்ணி கத்துகிட்டா. 20 வருஷம் ஆகும்னு சொல்றீங்க... நான் என் முழு நேரத்தையும் கொடுத்து கத்துக்கிறேன். கடினமா உழைப்பேன். நான் எதையும் வேகமா கத்துக்குவேன். இப்போ சொல்லுங்க.  எவ்ளோ  நாள் ஆகும் சொல்லுங்க ?” என்று கேட்டான் அந்த இளைஞன்.

“நான் சொல்லித்தர்றது எல்லாம் ரொம்ப சீக்கிரமா கத்துக்கிறேன்னு சொல்ற... அப்படின்னா என்னோட  நீ 30 வருஷமாவது  தங்கி இருக்கணும்..” அப்படியென்று அந்த குரு அமைதியாக சொன்னார்.

அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் அந்த பயிற்சியில் சேர்ந்தான் அந்த இளைஞன். அப்போது அவன் வயது 20.

“கற்றுக்கொள்வது என்பது வாழ்நாள் முழுக்க தொடர்வது அது ஒரு குறிப்பிட்ட  நாளில் முடிந்து போகாது. அது வாழ்நாள் முழுக்கத் தொடரும். ஒரு குறிப்பிட்ட எல்லையில் முடிந்து போகாது..” என்று இன்று சொல்கிறார் அதே மாணவர். ஆனால் இன்று அந்த மாணவருடைய வயது 60. அதே குருவுடன்தான் அவரும் இருக்கிறார்.

கற்றுக்கொள்வது என்பது வாழ் நாள் முழுக்கத் தொடர்வது என்பதைச் சொல்லுகிறது இந்த கதை, இதுபற்றி உங்கள் அபிப்பிராயம், உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட்ஸ் பகுதியில் எழுதுங்கள்.

பூமி, ஞானசூரியன்


GROUNDNUT MILK IN PLACE OF COWS MILK பசும்பாலுக்கு பதிலாக நிலக்கடலை பால்...

#GroundnutMilk #PeanutMilk #InPlaceOfCowsMilk #GroundnutButter #GroundnutOil #GroundnutWine #TNAUAgriTechPortal #DoitYourselfAtHome #HowToPr...