Friday, June 27, 2025

PLASTIC MAKES WORLD A DUST BIN

 

PLASTIC  MAKES  WORLD A DUST BIN


Plastic pollution has become abnormal and atrocious symbols of our civilization.

Plastics become a tree of venom and start to dibble its venomous seeds and cause Environmental crisis.

"Food is a Medicine too" is a popular Tamil saying, this concept has wiped of our mind.

we are forced to take up the new proverb "Medicine is our meritorious Food"

Now we have to start the freedom fight and get rid of the noxious clutches of the plastic pollution.

The International year of Environment 2025 tells this message as its theme.

Today  Plastic Pollution is the burning Universal problem, bursting Universal Issue.

The people should be aware of how these plastics affect our day-today life, our  living Environment, our limited economic resources etc.

The total Plastic waste production of our Globe as of 2025  is 460 million ton.

The total plastic wastes in  India is 9.4 million ton as of 2025.

The total annual plastic wastes in Tamil Nadu is 7.82 lakh as of 2024.

All these plastic wastes that are gathered are segregated as per categories and sold to different private Industries.


This plastic waste particularly marine pollution in the sea and affects the seaside cities, villages and other land areas.

It is estimated that around 1500 living species are drastically affected by the plastic pollution.

These living species are swallowing the plastic wastes also along with the food items.

Secondly the living spaces are mostly occupied by the plastic wastes and destroyed its nature.


Thirdly  the day today life events or disturbed erratically  by intrusion of the Plastic wastes.

In recent days it is  considered that the microplastics and the one time used plastics are the  more dangerous one for the human life.

It is said that more than 100 diseases affects the human population today.

Out of these human diseases 3 are very important, they are infertility obesity and cancer.

We should create awareness and organize Plastic Free Movement  for a sustainable living.

Dear friends, Bhumii always breathes only the truth. It provides you with informative and useful stuff daily. So kindly request you to GNANASURIA BAHAVAN ACADEMY  and share to your friends.


#PlasticPollution # SayNoToPlastics #Environment2025 #PlasticFreePlanet #PlasticFreeIndia #PlasticFreeTamilnadu #BhumiiYouTubeChannel

Thanks & Regards

BHUMII GNANASOORIAN

Thursday, June 19, 2025

மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO

 

PHYLLOSTACHYS NIGRA
கருப்புமூங்கில்
மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில்

GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO

“மூங்கில் இப்படியெல்லாம் கூட மூங்கில் நமது நோய்களை குணப்படுத்த முடியுமா ? “என்று நினைக்கும் அளவிற்கு மூங்கில் நமக்கு ஒரு மூலிகையாக விளங்குகிறது என்று இந்தப் பதிவை படித்துப் பாருங்கள்.

 

சிலிகா(SILICA CONTENT)

நமது தோல், நகம், மற்றும் எலும்புகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பது சிலிகா(SILICA) என்னும் ரசாயனம். இந்த சிலிகா மூங்கில்களில் இயற்கையாக இருப்பில் உள்ளன. பூமியில் அதிகப்படியாய் இருக்கும் தாது உப்புகளில் ஒன்று.

 

ஆன்டி ஆக்சி டெண்டுகள் (ANT OXIDANT PROPERTIES)

பொதுவாக மூங்கிலின் இலைகளில் ஆன்டிஆக்சிடெண்ட்டுகள் அதிகம் இருப்பதால் ஆக்சிடேஷனால் (OXIDATION) ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவுகிறது.

எதிர் ஆக்சிகரணம் அல்லது ஆக்சிகரணத் தடுப்பு என்று சொல்லலாம்

BAMBUSA TULDA
அகர்பத்தி மூங்கில்
ஆக்சிகரணத்தால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க உதவியான குணங்கள் இதில் அடங்கி உள்ளன.


மூங்கில் உணவு செரிமானத்திற்கு உதவியாக உள்ளது, இதற்குக் காரணம் இதில் இருக்கும் நார்ச்சத்து.

 

அழற்சி குறைப்பான் (ANTI INFLAMATION)

அழற்சி என்றால் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீக்கம், வலி. வெப்பம் அதிகரிப்பு, மற்றும் அதன் செயலிழப்பு ஆகியவை ஏற்படும். அதனைத் தடுக்கும் குணத்தைத்தான் நாம் அழற்சி குறைப்பான் என்று சொல்லுகிறோம்.


ஜீரணத்திற்கு உதவும் தன்மை (அ)செரிமான ஆரோக்கியம் (அ)செரிமான நலம் (DIGESTIVE HEALTH)

மூங்கிலின் இளந்தண்டுகளில் செரிமானத்திற்கு உதவும் பண்புகள் உள்ளன. இவற்றுக்குக் காரணம் மூங்கிலில் இருக்கும் நார்சத்து இருப்பு.

 

நுண்ணுயிர் எதிர்ப்பு(ANTI MICROBIAL ACTIVITY)

மூங்கிலில் நுண்கிருமிகளுக்கு எதிராக அல்லது அவற்றை கட்டுப்படுத்தும் பண்புகள் இருப்பதால் அதனை நுண்கிருமிகள் எதிர்ப்பு என்று சொல்லலாம்

பாக்டீரியா, வைரஸ், பூசணங்கள், ஒட்டுண்ணிகள் ஆகியவற்றை நாம் நுண்ணுயிர்கள் என்று சொல்லுகிறோம்.

 

RESPIRATORY RELIEF ஆரோக்கியமான சுவாசத்திற்கு உதவும்

பழங்கால வைத்திய முறைகளில் மூங்கிலில் இருந்து எடுக்கும் சாற்றினை சுவாசத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் தீர்க்க பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 

தோல் ஆரோக்கியம்(SKIN CARE)

தோல் சமந்தமான நோய்களை குணப்படுத்தும் மருந்துகளில் மூங்கில் சாற்றினை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. உடல் தோலினை மென்மைப்படுத்து வதற்கும் அதற்கு இயற்கையான மருத்துவ குணங்கள் இதில் உள்ளது.

பொதுவாக எல்லா மூங்கில்களிலும் இந்த மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது.

ஆனால் தொப்பை மூங்கில் என்ற ரகத்தை அதிகமாக அழகு மற்றும் அலங்கார மூங்கிலாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

 

மருத்துவ மூங்கில் ரகங்கள்

மூங்கில்கள் பெரும்பாலும் மருத்துவத் தன்மை கொண்ட மூங்கில்கள் என்றாலும் பாம்பூசா வல்காரிஸ்(BAMBUSA VIS) மற்றும் பில்லோடாக்கிஸ் எடுலஸ் (PHYLLOTACHYS EDULIS)ஆகிய ரகங்களை மருத்துவ மூங்கில் இனங்கள் என்று சொல்லலாம்.

மூங்கில் இனங்களில் குறிப்பாக கீழ்கண்ட ஆறு மூங்கில் இனங்களை மருத்துவ மூங்கில்கள் என குறிப்பிடலாம்.

பேம்பூசா அருண்டினேசி(BAMBUSA ARUNDINACEA) இதனை முள் மூங்கில் என்னும் சொல்லலாம்.

இந்த ரகத்தினை ஆயுர்வேதம் சித்த மருத்துவம் ஆகிய வற்றில் மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்சனைகள் மூட்டுவலி மற்றும் செரிமானத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான மருந்து தயாரிப்பில் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

BAMBUSA VENTRICOSA தொப்பை மூங்கில்

எலும்புகள் உறுதிப்படுத்தி

சிலிகா அதிகம் இருப்பதால் எலும்புகளை உறுதிப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

இளம் மூங்கில் குருத்துகளை சிறுநீர் போக்கு(DIURETIC) மற்றும் நீரழிவு நோய்கள் குணப்படுத்தலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

 

ஆண் மூங்கில் / கல்மூங்கில்

டெண்ட்ரோ கலாமஸ் ஸ்ட்ரிக்டஸ் (DENDRO CALAMUS SIRICTUS), இதனை கல்மூங்கில் மற்றும் ஆண் மூங்கில் என்று சொல்லுகிறார்கள், இதில் கீழ்கண்ட இரண்டு மருத்துவ குணங்கள் உள்ளன.

இன்றைக்கு நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது வைரஸ் நோய்கள் அதற்குதான் மருந்துகள் கிடையாது. அப்பிடியே இருந்தாலும் அதற்கு தடுப்பு மருந்துகள் வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். ஆனால் குணப்படுத்த முடியாது. கொரோனா போன்றவை இவைதான். உலகம் முழுக்க பயப்படும் வைராஸ் நோய்கள் இந்தப்பட்டியலில்தான் அடங்கும். இதைத்தான் நாம் ஆன்ட்டி மைக்ரோப்ஸ் என்று சொல்லுகிறோம் .

இந்த மூங்கிலில் முக்கியமாக இரண்டு பண்புகளை சொல்லுகிறார்கள் அவை ஆன்டி இன்ஃபலமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல்(ANTI INFLAMMATORY & ANTI MICROBIAL)

காயங்கள் குணப்படுத்தி

இந்த இன மூங்கில் இலைகளில் எடுக்கும் சாற்றினை மற்றும் இலைச் சாற்றினையும் காயங்கள் குணப்படுத்தியாகவும்(WOUND HEALER) காய்ச்சல் (FIVER REDUCTION)குறைப்பியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

 

கருப்பு மூங்கில்

(PHYLLO STACHYS NIGRA, BLACK BAMBOO

இந்த மரங்களைப் பார்த்தால் ஆச்சிரியப்படுவீர்கள் சட்டெனப் பார்த்தால் நம்ம ஊர் பன்றிக்கரும்பு மாதிரி இருக்கிறது கருப்பு நிறத்தில் இந்த மூங்கில் மரங்கள் அழகோ அழகு

சீனாக்காரர்கள் இந்த கருப்பு மூங்கிலை வைத்துக்கொண்டு நஞ்சு முறிப்பானாக (DETOXIFICATION) அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பாம்புகடிக்கு பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை

 

மூங்கில் இலைச்சாறு(BAMBOO HEAF EXTRACT)

பாம்பு கடிவாயில் மூங்கில் இலைச்சாற்றினை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்து, பாம்பு விஷத்தினை வெளிப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள்.

பாம்புகடி பட்டவர்களுக்கு இந்த கருப்பு மூங்கில் சாற்றினை குடிக்க கொடுத்து குணப்படுத்துகிறார்கள். இது குடலில் இருக்கும் நச்சினை குணப்படுத்துவதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் பாம்பு கடிக்கான மருந்துகள் தயாரிப்பில் மூங்கிலை பயன்படுத்துவதாகத் தெரியவில்லை

ஆனால் கருப்பு மூங்கில் பாம்புகடிக்கு சிறந்த குணம் தருவதாகச் சொல்லுகிறார்கள் சீனர்கள்.

 

அகர்பத்தி மூங்கில்

(BAMBUSA TULDA)

டுல்டா மூங்கில் ரகத்தினை இண்டியன் டிம்பர் இந்திய கட்டிட மரம் என்று சொல்லலாம். இந்த மூங்கில் ரகத்திற்கு மிக பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்று சொல்லுவேன் காரணம் இந்த மூங்கில் ரகத்தைத்தான் நம் ஊரில் அகர்பத்தி தாயரிப்பாளர்கள் வியட்நாம் மற்றும் சீனாவிலிருந்து கோடி கோடியாய் பணம் தந்து வாங்குகிறார்கள். ஆனால் இது நம்ம ஊரிலேயே நன்றாய் வளர்கிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் சக்கைப்போடும் இந்த மூங்கில் ரகத்தினை நாம் இன்னும் சரியாகப் பயன்படுத்தவில்லை. இதனைத் தெரிந்து கொண்ட போது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. எனது தோட்டத்தில் கூட இப்போது 10 மரங்கள் இருக்கும்.

 

இதய ஆரோக்கியம், மற்றும் நோய் தடுப்பு

டெண்ட்ரோகலாமஸ் ஆஸ்பெர், இதில் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் ஃபிளேவனாய்ட்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது

முக்கியமாக இதனை இதய ஆரோக்கியம், மற்றும் நோய் தடுப்பு சக்தியை வழங்குவதற்காகவும் இதனைப் பயன்படுத்தலாம்

பில்லோடேக்கிஸ் எடுலிஸ் (PHYLLOTACHYS EDULIS) இதனை மோசோ பேம்பூ(MOSO BAMBOO) என்று சொல்லுகிறார்கள்

உடலின் வெப்பத் தன்மை, மற்றும் இருமல் ஆகியவற்றை குணப்படுத்த சீனாவின் வைத்திய முறைகளில் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

 

மூங்கிலின் இளம் தண்டுகள்

செரிமானம் குறைவாக இருப்பவர்களுக்கு சீன நாட்டின் இந்த மூங்கிலின் இளம் தண்டுகளை சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள். இதற்குக் காரணம் இதில் அதிகம் இருக்கும் நார்ச்சத்துதான்.

நீங்கள் யாராவது மூங்கிலை மருந்தாகப் பயன்படுத்திய அனுபவம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள், இந்தப் பதிவு உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் அன்புகூர்ந்து உங்கள் நண்பர்களுக்கு இதனை பகிர்ந்து அனுப்புங்கள், நன்றி வணக்கம்.

#BambooMedicinalUses #HealthBenefitsOfBamboo #HealingPrpertiesofBamboo #BambooInTraditionalMedicine #BambooHomeRemedies #BambooForWellness #NaturalHealingPlants

பூமி ஞானசூரியன்

Tuesday, June 17, 2025

அந்தமான் நிகோபார் தீவுகள் கவர்ச்சிகரமான 10 அம்சங்கள் TEN ATTRACTIONS OF ANDAMAN NICOBAR ISLANDS

 

அந்தமான் நிகோபார் தீவுகள்

கவர்ச்சிகரமான 10 அம்சங்கள்

TEN ATTRACTIONS OF ANDAMAN 

NICOBAR ISLANDS

CITY OF PORTBLAIR

1. அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்த பரப்பளவு 8250 சதுர கிலோமீட்டர். இங்கு சுமார் நான்கு லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கு பெறும் ஆண்டு சராசரி மழை அளவு 3180 மில்லி மீட்டர்.

2. அந்தமான் கடல் மற்றும் வங்களா விரிகுடாவிற்கு ஊடாக அமைந்துள்ளன. இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் இது ஒரு யூனியன் பிரதேசம். இதன் தலைநகரம் போர்ட் பிளேயர் என்பதை, சோழர்கள் மாநக்கவரம் என அழைத்துவந்தார்கள். அதுதான் பின்னர் நிகோபார் ஆனது.

AWESOME ANDAMAN SEA

3. அந்த காலத்தில் சுகந்திர போரட்ட வீரர்களை எல்லாம் அந்தமான் சிறைகளில் அடைப்பது வழக்கமாக இருந்தது. இங்கு 572 தீவுகள் இருக்கின்றன, ஒன்று அந்தமான் தீவுகள், இரண்டாவது நிகோபார் தீவுகள், இரண்டு தீவுகளையும் இரண்டாகப் பிரிக்கும் கால்வாய்க்கு டென் டிகிரி சேனல் என்று சொல்லுவார்கள்.

CELLULAR JAIL

4. மிகவும் ஆபத்து நிறைந்த இந்த 10 டிகிரி சேனலைக் கடக்க வேண்டும். என்றால் 150 கி.மீ பயணம் செய்ய வேண்டும். கப்பலில் அந்த 150 கி.மீட்டரை கடக்கும் வரை உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்கள்.

5. ஐந்து முதல் ஆறுவகைப் பழங்குடி மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இவர்களில் ஜர்வாஸ் மற்றும் சென்டினெலிஸ் என்னும் இரண்டு இனமக்கள் தொடர்பு கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அந்தமானியர், நிகோபாரிகள், ஷொம்பென்கள், ஒங்கிகள், ஜார்வர்கள், மற்றும் சென்டிநெலியர்கள்.

DUGONG STATE ANIMAL

தீவுகளின் காடுகள்

6. இதுவரை இங்கு 2200 வகை தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 200 வகைகள் அழிந்து வரும் மர வகைகளாகி விட்டன இவற்றில் 1300 வகை தாவரங்கள் இந்தியாவில் கூட இல்லை என்கிறார்கள் தாவரவியல் வல்லுநர்கள்.

7. தெற்கு அந்தமான் காடுகளில் பாரசைட்ஸ் எனும் ஒட்டுண்ணி தாவரங்கள் அதிகம் உள்ளன. இங்கு அதிகம் இருப்பவை பெரணி மற்றும் ஆர்கிட் வகைத் தாவரங்கள்தான்.

மத்திய அந்தமான் காடுகளில் இருப்பவை, பெரும்பாலும் ஈரம் அதிகம் உள்ள இலையுதிர்க் காடுகள்.

8. வடக்கு அந்தமான் ஈரம்மிக்க இலையுதிர்க் காடுகளாகவும், பசுமை காடுகள், மற்றும் வுட்டி கிளைம்பர்ஸ் என்று சொல்லப்படும். முரட்டுக் கொடிகளாலும் நிறைந்த பகுதி. இது. இவற்றில் முக்கியமான ஒரு வகை அலையாத்திக் காடுகள் என்று சொல்லப்படும் மாங்குரோவ் பாரஸ்ட் வகை.

இங்குள்ளவற்றை முக்கியமான 12 வகைக் காடுகளாகப் பிரிக்கிறார்கள்.

9. பலவகை உயிரினங்கள்

இங்கு 50 வகை பாலூட்டிகள் 26 வகையான எலியினங்கள் 14 வகையான வவ்வால் இனங்கள், உப்பு நீர் முதலைகள், டுகாங்குகள் என்னும் கடற்பசுக்கள், 210 வகைப்பறவைகள் 225 வகையான பட்டாம்பூச்சிகள்.

நீர்வாகப்பிரிவுகள்

1.   தெற்கு அந்தமான் தீவுகள் தலைநகர் போர்ட்பிளேயர் 2307.80 .கி.மீ

2.   வடக்கு மற்றும் மத்திய அந்தமான் தலைநகர் மாயாபந்தர் 3320.82 .கி.மீ

3.   நிகோபார் தீவுகள் தலைநகர் கார்நிகோபார் 1542.07 .கி.மீ

10.பொதுவான காடுகளின் வகை

மொத்த நிலப்பரப்பில் 84.4 சதம் காடுகளாக உள்ளது. இதில் 42.1 சதம் காடுகள் மிகவும் அடர்த்தியானவை 34.1 சதம் காடுகள் நடுத்தரமான அடர்த்தியானவை மாங்குரோவ் அல்லது அலையாத்தி வகைக் காடுகள் 9.6 சதம் உள்ளன. மீதம் உள்ளவற்றில் 8.2 சதம் திறந்தவெளிக்காடுகள்.

மொத்தக் காடுகள் பரப்பு 7170.69 .கி.மீ, இது வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அரசின் புள்ளிவிவரம்.

11. நான் சென்ற தீவுகள்

லிட்டில் அந்தமான், ரட்லண்ட் ஐலண்ட், ராஸ் ஐலண்ட், போர்ட் பிளேயர், கார்னிகோபார், கட்சல், கமோர்டா, நான்கவுரி, கிரேட் நிகோபார், லிட்டில் நிகோபார், மாயாபந்தர் ஆகியவை நான் பார்த்தவற்றில் முக்கியமான இடங்கள்.

அந்தமானியர்கள், ஒங்கி, ஜர்வாஸ், கிரேட் அந்தமானிஸ்,   சென்டினெலிஸ் நிகோபார்கள் ஆகியோர் இங்கு வசிக்கும் பழங்குடிகள்,.

டுகாங் கீரீக் லிட்டில் அந்தமானில் உள்ள கிராமம் இங்கு ஒங்கி இனத்தவர் வசிக்கிறார்கள். இது லிட்டில் அந்தமானிலிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ளது. போர்ட் பிளேயரிலிருந்து 154 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தத் தீவில் இருக்கும் வித்தியாசமான கடல் வாழ் பிராணி டுகாங் என்னும் கடற்பசு, லேடி ஆப் தி சீ என்று ஒரு பெயரும் இதற்கு உண்டு. இது ஒரு சைவபட்சிணி. புல்லை மட்டும்தான் சாப்பிடும், புலால் சாப்பிடாது இந்த அந்தமான் நிகோபார் தீவின் மாநில விலங்கு இந்த பிராணி.

கமோர்டா தீவு

இது நிகோபார் தீவுகளைச் சேர்ந்தது நிகோபார் மாவட்டத்தைச் சேர்ந்தது நான்கவுரி வட்டத்தைச் சேர்ந்தது

டுகாங்குகள் அந்தமானின் மாநில விலங்கு இவை ஆழமில்லாத கடல் நீரில் வசிக்கும். கடற்புல்தான் இதன் முக்கிய உணவு இந்திய மற்றும் பசிபிக் கடற்பகுதிகளில் அதிகம் உள்ளன. டுகாங்கள் மிகவும் சாதுவானவை டூர்ஸ்ட் அட்ராக்ஷன்.

#AndamanNicobarIslands #SixTribes #BiodiversityRichIslans #DugongsStateAnimal #TenDegreeChannel #MangroveForests

PLASTIC MAKES WORLD A DUST BIN

  PLASTIC  MAKES  WORLD A DUST BIN Plastic pollution has become abnormal and atrocious symbols of our civilization. Plastics become a tr...